இவர்களுக்கு குறைந்தபட்சம் 60 வயதாவது இருக்கும். 30 வயது தொடக்கமே வயோதிகம் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் விட்டு விட்டு வரத் தொடங்கிவிடுகின்றன. இருந்தும், இறுதிகாலம் இப்படி பஸ் ஸ்டாண்ட் பிச்சைக்காரர்களாக அலைய விடுகிறது என்றால், இதிலிருந்து நம் வாழ்க்கைக்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
என்னுடைய பழைய மேலாளர் இதைப்பற்றிய சிந்தனைகள் அதிகம் உடையவராக இருந்தார். குழு சந்திப்புகளில் பிஸினஸ் பற்றி பேசி முடிந்து, பேச்சு தனிப்பட்ட விசயங்களுக்கு வந்ததும் ஒவ்வொருவரின் சேமிப்பு திட்டங்கள், அவற்றின் செயற்பாடுகள் பற்றி அக்கறையாக விசாரிப்பார். எல்லோரையும் பென்சன் திட்டம் எதிலாவது சேரச்சொல்லி வலியுறுத்துவார்.
அவரிடம் அது பற்றி விரிவாக உரையாட எண்ணியிருந்து, விடுபட்டு, கடந்துச் சென்ற எத்தனையோ விஷயங்களில் அதுவும் ஒன்றாகிப் போனது.
முதுமையை உடலளவில், மனதளவில் மாத்திரமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த காலகட்டம் முதலே அவசியம் என்பதை கண்கூடான சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. கண்முன் வராத துயரங்கள் எப்போதும் சொல்லித் தராத பாடங்களை தனக்குள் பொதித்துக் கொண்டுள்ளன என்பதை சிந்தித்து உணரலாம்.
0 comments:
Post a Comment