கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!”
சில தனிப்பட்ட தர்க்கங்களின் பொதுவெளிச் சேமிப்பு
சாரு பொமபளைப் பொறுக்கிங்கறது ஊரறிஞ்ச ரகசியம். ஒரு முறையில்ல இது முதல் முறையும் இல்லே. பலமுறை அவமானப்பட்டிருக்கான். ஆனா பெரிய மனுஷன் வேஷம் கட்டி இணையத்துல ஆடறவன், பொண்டாட்டி வெளிநாடு போனப்போ என்ன பண்ணினான்னு தெரியுமா? இல்லே, இந்தப் பொண்ணைவிடச் சின்னப் பொண்ணு அண்ணன்கூடத் தொணைக்குப் போனா அவளை வேலைக்கு வெச்சிக்கவான்னு கேட்டான். வழிசலைப் பாத்த அந்தப் பொண்ணு, அய்யையோ அவன் பார்வையே சரியில்லைனு சொல்லிடுச்சி, மாட்டிக்க ரெடியா மானக்கெட்டு நிக்கிற சாருவைப் பிடிக்கிறது பெரியவிஷயமில்லே!
தமிழில் இண்டர்நெட் பிறந்த 1996-2000 கால கட்டங்களில் நான் இணையத்தில் இல்லை. ஆனால், அது தவழ்ந்து இன்று மீசை அரும்ப தொடங்கியுள்ள கடந்த பத்தாண்டு காலங்களில் அதை மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நடந்துள்ள ஒவ்வொரு நிகழ்வுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஈழம், இலக்கியம், நட்பு, வக்கிரம், ஆபாசம், காதல், காமம், குழு அரசியல்... என்று இக்குறுகிய கால கட்டத்தில் பல நிகழ்வுகள் கடந்து சென்றுவிட்டன. அவைகளின் வீச்சும், விளைவுகளும் நமக்கு வெளியுலக அனுபவத்தில் கிடைத்திட சாத்தியமே இல்லாதவை. சொல்லி விளங்க வைக்க முடியாதவை.
எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கான மானசீக குருவையை இங்கேதான் கண்டறிந்தேன். என் இணைய செயல்பாட்டை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொண்டு, தினமும் எத்திக்காவது சென்று எதையாவது தேடி படிக்கும் ஆர்வம் எனக்குள் ஏற்படவும் - அவரின் ஆளுமையின் மீது நான் கொண்ட பிரமிப்புதான் காரணம். மேலும் சிலர் என்னை தீவிரமாக பாதித்திருக்கிறார்கள். எல்லாமே என்னளவில் பேரனுபவங்கள். என்றாவது பதிந்து வைக்க வேண்டும்.
இன்று கிளம்பிய சாரு சர்ச்சையை தொடர்ந்து இதையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.
சமீப காலமாக பலரும் ‘அப்பா டக்கர்’ என்பதை ரொம்ப மகிழ்ச்சியுடன் விரும்பி பயன்படுத்துவதை கவனிக்கிறேன். ‘இவரு பெரிய அப்பா டக்கரு’, ‘நீ பெரிய அப்பா டக்கர் டா.. உன்கிட்டயெல்லாம் மோத முடியுமா’.. ரீதியில் அவற்றின் பயன்பாடு உள்ளது. அதாவது ”பெரிய பு...ங்கி” என்னும் அர்த்தத்தில். ஆனால் அதுதானா, அதன் சரியான அர்த்தம்?
டக்கர் தெரியும். டாப் டக்கர்-ம் தெரியும். இதென்ன அப்பா டக்கர்?
ஒரிஜினல் சென்னைவாசி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டேன். மெட்ராஸ் தமிழில் அவர் வித்தகர். அந்த உச்சரிப்பை கேட்கவே அவரிடம் விரும்பி உரையாடுவதுண்டு. அவர் சொன்ன விளக்கத்தை நாட்டு மக்கள் நலன் கருதி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
1. டக்கர் ஃபிகர் - அழகான பெண்.
டாப் டக்கர் ஃபிகர் - ரொம்ப அழகான பெண்.
அப்பா டக்கர் ஃபிகர் - அதெல்லாம் ‘அப்பா டக்கர்’ ஃபிகர் டா.. நாமெல்லாம் நெனச்சி கூட பார்க்க முடியாது. (சற்றே வயிற்றெரிச்சலுடன் சொல்வது)
2. iPhone4 -லாம் அப்பா டக்கர் போன் டா... நமக்கு அதெல்லாம் எட்டாக்கனி!
ஆக, சற்றே பொறாமையுடன் வயிற்றெரிச்சலுடன் சொல்லப்படுவதுதான் அப்பா டக்கர்.
அது இப்போது வேறு பல அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
மொழி ஆராய்ச்சி என்பது மிகவும் சுவாரசியமான துறை என்பதை மணிப்பிரவாள நடை குறித்து தேடி தெரிந்து கொண்ட சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தளவுக்கு எல்லாம் சிரமப்பட்டுக்கொள்ள வேண்டாம். குறைந்த பட்சம் நம் சொல்வங்கியை பெருக்கிக் கொள்ளவாவது நிறைய படிக்கலாம். அஃதொன்றும் அப்படியெல்லாம் அப்பா டக்கர் வேலையல்ல! :-)
எச்சரிக்கை: இந்த விமர்சனத்தை படிப்பதால் படத்தில் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை.
‘அவன் இவன்’ திரைப்படத்தை நேற்று சேலம் கீர்த்தனாவில் நானும் சுரேஷும் பார்த்தோம். நல்ல கூட்டம். காட்சிகள் ரிசர்வேசனில் போய்க்கொண்டிருந்தன. ஷங்கர் போல பிரம்மாண்டம், கலர்ஃபுல் ஃபாண்டஸி, நூறு கோடி பட்ஜெட் எல்லாம் இல்லாமலே ஒரு இயக்குநரால் இவ்வளவு மக்களை தியேட்டருக்கு கவர்ந்திழுக்க முடிவது தற்கால திரைச்சூழலில் அரிதான ஒன்று.
கதாப்பாத்திர உருவாக்கத்தை (characterization) பொறுத்தவரை வழக்கம் போல பாலா ஒவ்வொரு பாத்திரத்தையும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார். திரையில் அவர்களின் நடிப்பை வியந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். விஷாலுக்கு கூடுதலான மேக்கப்; மற்றும் முக்கியத்துவம். அவரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு காட்சிக்கு காட்சி கைத்தட்டல் வாங்குகிறார்.
போலவே, ஹைனஸாக வரும் இயக்குநர் ஜி.எம்.குமாருக்கும் நல்ல பாத்திரம். மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். இவருக்குதான் உண்மையில் அவார்டுக்கான வாய்ப்பு இருக்கிறது எனலாம்.
ஆர்யாவுக்கு சிறிது underplay பாத்திரம். அதை அவர் நன்றாகவே செய்துள்ளார்.
இவர்களைத் தவிர படத்தில் வேறு யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. இரு நாயகர்களுக்கும் ஜோடி தேவை என்பதால் இரு பெண் பாத்திரங்கள் திணிக்கப்பட்டுள்ளன. கதையின் போக்கில் அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
உண்மையில் படத்தில் கதை என்றே ஒன்று பெரிதாக கிடையாது. Thin line story ஒன்றை இரண்டரை மணிநேர திரைக்கதையாக திரித்து நீட்டிக்க பெரிதாக பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். அதற்காக பல இடங்களிலும் சம்மந்தமில்லாத காட்சி செருகல்கள். கதைக்கு துளியும் சம்மந்தமில்லாமல் சூர்யாவின் அகரம் விழா காட்சியை முடிந்தவரை இழுத்து அதில் கால்மணி நேரம் ஓட்டி விடுகிறார்கள். அதுபோல ஒரு கிடாவெட்டு காட்சி! சில போலீஸ் ஸ்டேசன் காட்சிகள்!
துண்டு துக்கடா நகைச்சுவை தோரணங்களாக மட்டுமே அமைந்துவிட்ட திரைக்கதையின் போக்குக்கு சீரியஸ்னெஸ் சேர்க்க வில்லன் என்று ஒருவர் தேவைப்பட்டார் — ஆர்.கே பாத்திரம் திணிக்கப்பட்டது. பார்வையாளர்களிடம் எவ்வித அழுத்தமான உணர்வையும் ஏற்படுத்தாத ஒரு தட்டையான பாத்திர படைப்பு அது.
முக்கால்வாசிக்கும் மேலாக குடியும், கூத்தும், வசன நகைச்சுவையுமாக மட்டுமே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். அந்தக் கணத்தில் சிரித்து வைத்தாலும் ஒரு படைப்பாக எடை நிறுத்திப் பார்க்கையில் சராசரிக்கும் கீழேயே மதிப்பிட முடிகிறது. கதையில் லாஜிக் பார்ப்பவர்களாக இருந்தால் நெளிய ஆரம்பத்து விரைவில் அதுவே பழகிவிடும். பாலாவின் படங்களிலேயே மோசமான கதை, திரைக்கதை கொண்ட படம் இதுதான் என்பேன்.
இந்த படத்தை அடுத்து, பாலாவைப்பற்றி எனக்கு ஏற்படும் ஒரு சம்சயம் - பாலா நல்ல திரைப்படம் எடுப்பதை விட்டு விட்டு, போலீஸ் நாய்களுக்கு மோப்பம் பிடிக்க பயிற்சியளிக்கும் பயிற்சியாளரைப் போல, நல்ல நடிகர்களை உருவாக்கித் தரும் ட்ரெய்னராக மாறிவிட்டாரோ என்று கவலை ஏற்படுகிறது.
இணையத்தில் வேறோர் இடத்தில் ஒரு நையாண்டியான விமர்சனம் படித்தேன். விஷால் ஆர்யாவிடம் கெஞ்சலாக, “மச்சி, நான் கடவுள்ல நீ கலக்கிட்டடா! பாலாவிடம் சொல்லி எனக்கும் அதே மாதிரி ஒரு பர்ஃபார்மன்ஸ் பார்சலேய்..!” என்றாராம். உடனே இந்தப் படத்தை துவக்கிவிட்டார்களாம். உண்மையி
சூர்யா முன்னால் விஷால் நடிக்கும் நவரச காட்சியை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். விஷால் திறமையை காண்பிக்க ஒரு வாய்ப்பு என்பதன்றி வேறு எதற்கும் பயன்படாத காட்சி அது. அவர்களுக்கே அது துறுத்தல் என்று தோன்றிவிட்டது போல.. அதை நியாயப்படுத்த அடுத்த காட்சியில் ஆர்யாவுக்கு ஒரு போதைவசனக்காட்சி வைத்துவிட்டார்கள். சகோதரனை புரிந்துகொண்டு விட்டாராம்.. ஒருமாதிரி பூசி மெழுகுகிறார்கள்.
பாலாவிடம் ரசிகர்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை அவர் எல்லா படங்களிலும் நிறைவு செய்வது கடினம்தான். அதற்காக சொதப்பல் படம் தராமலாவது இருக்கலாம். நடிகர்களை உருவாக்கும் வேலையை நிறுத்திக்கொண்டு, நல்ல படைப்பை உருவாக்கும் வேலையை ஆரம்பிக்கலாம். இதன் சில கதாபாத்திரங்களும், காட்சிகளும் அவருடைய பழைய படங்களின் மறுஆக்கமாக இருப்பதை விரிவஞ்சி எழுதாமல் தவிர்க்கிறேன்.
இந்தப் படத்தை முழுமையாக பார்க்க வைக்கும் இரண்டு விஷயங்கள் - நடிப்பும், ஒளிப்பதிவும். அதற்காக வேண்டுமானால் பார்க்கலாம். மாறாக, பாலாவின் முந்தைய படங்களை மனதில் இறுத்தி, ஒரு தரமான படைப்பை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். அந்த வகையில் எனக்கு பெரும் ஏமாற்றமான படமிது.
குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு, ஃபோன் டாப்-அப் செய்வதற்காக பரமத்தி ரோட்டில் ஒரு கடை முன்னால் வண்டியில் சென்று இறங்கினேன். உள்ளே நாலைந்து பேர் அடைத்துக்கொண்டு நின்றிருந்தனர். கும்பல் குறையட்டும் என்று அதை ஒட்டியிருந்த படிக்கட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினேன். இது போன்ற கடைகளில் எப்போதும் அப்பி கிடக்கும் கூட்டத்தை காணும்போது, பேசாமல் நாமும் இப்படி ஒரு டாப் அப் கடை வைத்தாலென்ன என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.
அப்போது பின்னால் படிக்கட்டில் இறங்கி வந்தவர் ‘கொஞ்சம் வழி..’ என்றுச் சொல்ல, பதறி விலகி நின்று, கடந்து சென்றவரின் முகம் பார்த்தேன். இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. நொடிப்பொழுதில் அவர் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி, சிறிது நாணத்துடன் வேகமாக கடந்து சென்றுவிட்டார். தெரிந்தவர்தான். அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரும் அவர்தான்.
வேகமாக கடந்து செல்ல அவசியமில்லாத தருணங்களில் கூட, சில காலமாக அவர் என்னைக் கண்டால் அப்படித்தான் நடந்து கொள்கிறார். இத்தனைக்கும் முன்பெல்லாம் இருவரும் எங்கே சந்தித்தாலும் சில நிமிடங்களாவது நின்று பேசிக்கொண்டு இருக்காமல் கடந்து சென்றதில்லை. இந்த மாற்றமெல்லாம் சில ஆண்டுகளாகத்தான்.
ஆனால் ஏன்?
இந்தக் கேள்விக்கு விடையளிக்க கொசுவர்த்தியை சுழலவிட்டு உங்களை ஊட்டி வரை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
என் கம்பெனியின் வருடாந்திர ஆய்வு கூட்டத்திற்காக எங்களை ஊட்டிக்கு அழைத்திருந்தார்கள். ஷேர் மார்க்கெட்டின் பொற்காலம் அது. ஆய்வு கூட்டங்கள் படோபமாக பல வித கொண்டாட்டங்களுடன் ஊட்டி, கொச்சி போன்ற இடங்களில் ரிஸார்ட்களில் நடக்கும். இன்றைய நிலைமையில் CEO-க்கள் அவர்களாகவே ஃபர்பார்மன்ஸ் ஷீட்டை எடுத்துக்கொண்டு, அந்தந்த கிளைகளுக்கு நேரில் வந்து ஆய்வு கூட்டம் நடத்தி, டார்கெட் கொடுத்துவிட்டு, கார் ஏறி அடுத்த கிளைக்க்கு பறந்துவிடுகிறார்கள். நிலைமை அப்படி ஆகிவிட்டது.
ஊட்டியின் பிரபலமான ஸ்டெர்லிங் ரிஸார்ட்டில் நடந்து கொண்டிருந்த ஆய்வு கூட்டத்தின் இடைவெளியில், அந்த ரிஸார்ட்டை சகாக்களுடன் சுற்றிப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் ஏதாவது ‘க்ளிக்’ செய்து கொண்டேயிருப்பது என் ஹாபி. ரிஸார்ட்டின் முன்புறமுள்ள பூந்தோட்டம், பக்கவாட்டிலுள்ள மலைச்சரிவு எல்லாம் எடுத்து முடித்து, உள்ளே கலைநயமான பொருட்களின் காட்சியகம் உள்ள இடத்தில் வலம் வந்து கொண்டிருந்தேன். அதையொட்டிதான் ரெஸ்டாரண்ட் இருந்தது.
ஏதேச்சையாக கவனித்தபோது, ரெஸ்டாரண்டின் முன்புற மேசையில் எனக்கு நன்கு பழக்கமான மணிமாறன் இருந்தார். தினமும் என் அலுவலகம் வந்துசெல்லக்கூடிய வாடிக்கையாளர். குடும்ப சகிதமாக டூர் வந்திருப்பார் போலுள்ளது - அவருடன் அவர் மனைவியும் இருந்தார். அவர்களுடன் மற்றும் சிலர் குடும்பமாக அமர்ந்து மேசையை நிறைத்திருந்தனர். தொந்தரவு செய்ய வேண்டாமே என்று ‘ஹலோ, மணி சார்’ என்று அழைத்து கையசைத்து விட்டு நகர்ந்துவிட்டேன்.
கூட்டம் முடிந்து, ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த நாளே அடித்து பிடித்து எல்லோரும் ஊர் போய் சேர்ந்தோம்.
தினமும் சரியாக டீ டைமில் அலுவலகம் வந்து, ஓஸி டீ, போண்டாவின் தரத்தை திட்டிக்கொண்டே சாப்பிட்டுச் செல்லும் மணிமாறனை அடுத்த சில நாட்களாக ஆளையே காணவில்லை. எனக்கு அவரில்லாமல் போராக இருந்தது. எதையாவது வாய் வலிக்க விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். அவர் சீரியஸாக பேசுவது நமக்கு சிரிப்பாக இருக்கும். போன் செய்தாலும் சரியாக பதில் இல்லை. நான் அவரை அழைப்பதையே அடுத்த சில நாட்களில் மறந்து போனேன்.
நாலைந்து நாள் கழித்து அவராகவே டீ டைமில் ஆஜரானார். ஆனால் பழைய கலகலப்பு இல்லை. நானாக ஆரம்பித்தேன்.
“என்ன சார் ஊட்டி டூரெல்லாம் ஜோர் தானே? வெயில்தான் கொஞ்சம் ஜாஸ்தியில்ல?”
“ஆமாமா. சரி சரி, இப்ப அதப்பத்தி என்ன. விடு”. ஏனோ, மனுசன் பிடி கொடுத்தே பேசவில்லை.
இப்படியாக இரண்டொரு நாள் போனது. மூன்றாவது நாளில் அவராக ஊட்டியை பற்றி ஆரம்பித்தார்.
“சிவா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லச் சொன்னார், சார்”
குரல் வழக்கத்தை விட கனிவாக இருந்தது.
”எந்த சிவா, சார்?”
”அதாம்பா, லாம்ப்ரட்டா ஸ்கூட்டர்ல வருவாரே.. சந்தை பேட்ட புதூர் சிவா”
“ஓ! அவரா... என்ன சொல்ல சொன்னார் சார்”
“ப்ச்.. இதான வேண்டாங்கறது. அந்த ஊட்டி மேட்டர் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணான்னார். முக்கியமா ரகோத்தமன் கிட்ட”.
ரகோத்தமன் இங்கே பேசப்படும் சிவாவின் பார்ட்னர். எனக்கு நல்ல பழக்கமானவர்.
“என்ன ஊட்டி மேட்டர்? என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியலையே”
“ப்ச்.. மறுபடியும் பாரேன்... அதான் அங்க ஊட்டியில எங்கள பார்த்துட்டியே! அதைத்தான் சொல்ல வேண்டாம்”
”சரி, சொல்லலை. ஆனால் டூர் வந்ததெல்லாம் பெரிய விஷயமா சார். இதில் மறைக்க என்ன இருக்குன்னு தெரியலை” என்றேன்.
“என்னாபா இப்படி சொல்ற, நீ பாட்டுக்கு எங்கள ஆளுக்கொரு ‘மேட்டரோட’ ஊட்டில பார்த்தேன்னு சொல்லிட்டியின்னா, வீட்டில் என்னாவறது?. சுத்தி சுத்தி வந்து போட்டோல்லாம் வேற எடுத்த. அதான் சிவா பயப்படுறான். போட்டோ இருந்த அழிச்சிட சொல்லி சொல்ல சொன்னான்”
ஓஹ்! ஓஹ்! ஓஹ்! மேட்டர் அப்படி வருதா!
நான் அன்று பார்த்தது இந்த மணிமாறனை மட்டும்தான். அதுவும் அவருடன் இருந்தவரை அவருடைய மனைவி என்றுதான் நினைத்துக்கொண்டேன். அவர் முகத்தைக்கூட சரியாக பார்க்கவில்லை. ஆனால் இவரை விட இளமையாக இருந்த மாதிரி ஒரு பூசினாற் போன்ற ஞாபகம் மட்டுமே உண்டு. ஸோ அண்ட் ஸோ... இவர்களெல்லாம் ஆளுக்கொரு ஜோடியை ஏற்பாடு செய்துகொண்டு ஊட்டியை உல்லாசபுரி ஆக்கியிருக்கிறார்கள். அதைத்தான் நான் பார்த்துவிட்டேன் என்று இப்போது பயப்படுகிறார்கள். இப்போது விஷயம் தெளிவாக புரிந்துவிட்டது.
இவர்களின் குடும்ப விவரங்கள் எனக்கு ஓரளவு தெரியும். இவர்கள் இருவருக்கும் வயது சுமார் 45 இருக்கும். தோளை எட்டிப் பிடித்து விட்ட பிள்ளைகள் உண்டு. அந்த சிவாவிற்கு சிங்கப்பூரில் படிப்பை முடித்துவிட்டு வந்த கல்யாண வயது பெண் பிள்ளையே உண்டு. சபே.புதூரில் நில புலன்களுடன் வசதியாக வாழ்பவர். என் மாமன்களின் சம வயது தோழர் என்று பேச்சிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறேன். எங்கேயாவது எதிர்பட்டால் சந்தை நிலவரம் பற்றி பேசிக்கொள்வோம். அந்த அளவில் சொல்லப் போனால் ஒரு சாதாரண உறவுதான் எங்களிடையே நிலவியது.
பேச்சை தொடர்ந்தேன்.
“என்னது ‘மேட்டரா’?! நான் அது உங்க வைஃப்ன்னு தான நினைச்சிட்டிருந்தேன். முகம் கூட சரியாக பாக்கலை. சிவா சாரையெல்லாம் நான் பார்க்கவேயில்லையே... அன்னைக்கு அவரும் உங்க கூட தான் இருந்தாரா?!”
“அட, என்னாபா.. அன்னைக்கு நீ எங்களை பார்த்துட்டன்னு சிவா ரொம்ப பயந்துட்டு இருக்கான். நீ என்னடான்னா பாக்கவேயில்லைன்னு சொல்ற.. அப்ப நாங்களாத்தான் உளறிட்டமா..” என்றார் வெட்கச் சிரிப்புடன்.
“அதான் இப்ப தெரிஞ்சிப் போச்சில்ல..ஹஹ்ஹஹ்ஹா!”
“சரி, போவுது. இத உன்னோட வெச்சிக்க. புதூர்ல யார்கிட்டயும் பேச்சு வாக்கில கூட சொல்லிடாத”
“ஏன் சார், எனக்கு வேற வேலையில்லையா? இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு நான் போயி பேசிட்டு வேற இருக்கனா?”.
அத்துடன் இது சம்மந்தமான சம்பாஷணைகள் முடிவுக்கு வந்தன.
மணிமாறன் - அதற்கு பிறகு எப்போதும் போல் சகஜமாகி விட்டார். ஆனால் சிவா... மனுசன் எங்கே பார்த்தாலும் நாணி கோணி சிரித்துக்கொண்டே அகன்று விடுகிறார். அது, அவரை விட எனக்கு சங்கடமாக இருக்கிறது.
© Copyright 2009 | த ர் க் க ம் | Theme by iPad Apps | All Rights Reserved