அங்காடித் தெரு விமர்சனம்

Posted: Sunday, March 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கதாநாயகர்களை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்த்திரைச் சூழலில் எவர் ஒருவர் இயக்குநர்களைப் பின்பற்றி படங்களுக்கான தன் விருப்பப் பட்டியலை(wish list) அமைத்துக் கொண்டிருக்கிறாரோ அவரின் எதிர்பார்ப்பும் சராசரிகளுக்கு அதிகமாகவே இருந்து விடுகிறது. அங்காடித் தெருவைப் பொருத்தவரை எனக்கும் அப்படித்தான் ஆனது. வெயில் படம் மற்றும் அதனைத் தொடர்ந்த அவரின் பேட்டிகளின் மூலமாகவும், சில இலக்கிய கூட்டங்களில் அவரின் பங்கேற்புகள் மூலமாகவும் வசந்தபாலனைப்பற்றிய என் அபிப்ராயங்கள் வெகுவாக உயர்ந்திருந்தன. இப்படத்தில் உடன் ஜெயமோகன் வேறு...
மேலும்...

குல்தீப் நய்யாரின் “ஜட்ஜ்மென்ட்” நூலை முன்வைத்து

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
இரு நாட்கள் முன்பு பழைய புத்தகக் கடை ஒன்றில் குல்தீப் நய்யார் எழுதிய ‘The Judgment" இன் தமிழ் பதிப்பு கிடைத்தது. அதை கையில் எடுத்தது முதல் கீழே வைக்கவிடாமல், அதன் வேகமும் விறுவிறுப்பும் என்னை உள்ளிழுத்துக் கொண்டது. எமர்ஜென்ஸி பற்றி இதற்கு முன் திராவிட தலைவர்களின் உரைகளில் சிறு குறிப்புகளாக அறிய கிடைத்த தகவல்களைத் தவிர, பெரிதாக ஒன்றும் இதுவரை எனக்கு படிக்க கிடைக்கவில்லை. அதுவும்கூட மிசா சட்டத்தில் உள்ளே இருந்த தங்களின் தீரத்தை பறைசாற்றிக்கொள்ளும் விதமான உரைகளுக்கிடையே, ஒரு ஊறுகாய் அளவிற்குத்தான் எமர்ஜென்ஸி...
மேலும்...

தமிழ் குறும்படச் சூழல்

Posted: Thursday, March 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கர்ண மோட்சத்தை முன்வைத்து;இன்று இணையம் என்னும் தனிநபர் ஊடகம் இருப்பதாலேயே இதெல்லாம் காண கிடைக்கிறது. இல்லாதிருந்த காலங்களில் எத்தனையோ நல்ல படைப்புகள் குறுகிய வட்டங்களில் மட்டும் பார்க்கப்பட்டு பெட்டிக்குள் முடங்கி விட்டன. இதற்கு யாரையும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால் அப்படிப்பட்ட குறும்படங்களை திரட்டி வெளிகொணர தமிழில் ஒரு இயக்கம் தேவை. ஆங்கிலத்தில் அப்படிப்பட்ட இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அதற்கான முயற்சிகள் இன்னும் தொடங்கப்பட்டதாக தெரியவில்லை.தமிழில் ’அச்சமில்லை அச்சமில்லை’ என்று படம் எடுத்த அருண் வைத்தியநாதன் தமிழ் பதிவுலகின் ஒரு ஆரம்ப...
மேலும்...

எனக்கான குறிப்புகள் (2): கல்கி, ராஜேஷ்குமார்

Posted: Wednesday, March 24, 2010 | Posted by no-nononsense | Labels: , , 0 comments
கல்கி ஆசிரம வீடியோக்களைப்பற்றி என் வாடிக்கையாளர்கள் இருவர் என் அலுவலக முன்னறையில் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அதில் ஒருவர் கல்கியின் தீவிர பக்தர். இன்னொருவர் அவரின் நண்பர். இருவரும் அந்த வீடியோக்களையும் சன் டிவியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். 'கடவுளின் காலடியில் இருப்பவர்களையும் சாதாரண பக்தனையும் எப்படி ஒன்றாக ஒப்பிட முடியும். அவர்கள் இருந்ததுதான் பரவச நிலை’ என்பதாக கல்கி பக்தர் ஆவேசமாக பேசியபடி, கல்கியின் அற்புதங்களாக சிலவற்றை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரைக் காண எனக்கு பரிதாபமாக இருந்தது....
மேலும்...

எனக்கான குறிப்புகள் (1)

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
பங்குச்சந்தையில் பணிபுரிய நேர்வதன் விசித்திரங்களில் ஒன்று, அதன் விடுமுறை தினங்கள். இந்தியாவின் இருபெரும் சந்தைகளும் மும்பையில் அமைந்திருப்பதால், நாடு முழுமைக்கும் மஹாராஷ்டிர விடுமுறை காலண்டரை பின்பற்றியே விடுமுறை அறிவிக்கப்படும். அதனால் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் வேலைக்கு போவதும், வீட்டில் இருப்பதுமாக நிகழும். அப்படித்தான் இன்று ஸ்ரீராம நவமிக்கு விடப்பட்ட விடுமுறைக்கு வீட்டில் உட்கார்ந்துகொண்டு இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.ஸ்ரீராம நவமி என்றால் என்ன? பக்தராகப்பட்டவர்கள் இதுவரை குறைந்தது நான்கு பேர் என்னிடம்...
மேலும்...

மனதை தெரிந்து கொள்வோம்

Posted: Tuesday, March 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மனநோய் குறித்து ஒரு விளக்க கையேடு கிடைத்தது. பகிர்ந்துகொள்கிறேன்.Dr Anandan Flex Book ...
மேலும்...

தண்ணீர் படும் பாடு

Posted: Monday, March 22, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
சில மாதங்களாகவே வண்டிக்கு ரூ.80 என்று மாதம் ஐந்தாறு முறை மாட்டு வண்டியில் நீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது புழங்க பயன்படுத்தும் உப்பு நீர் மட்டுமே. ஐந்து பத்து சேர்த்து தரத் தயாராக இருந்த போதிலும் குடிநீர் முன்பு போல விலைக்கு எங்குமே கிடைப்பதில்லை. கொல்லிமலை குடிநீர் என்று சில ஆண்டுகளாக ஊருக்குள் லாரிகளில் கொண்டு வந்து விற்கிறார்கள். அதைத்தான் மக்கள் வாங்கி குடிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கே இப்போது அது ஒரு நல்ல பிஸினஸ். ஆனால் கொல்லிமலைக்கும் அந்த லாரி தண்ணீருக்கும் ஸ்நானப்ராப்தியும் கிடையாது. அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் போர்வெல்களிலோ,...
மேலும்...

பேச ஒன்றும் இல்லை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
கருணாநிதியும் அவர் குடும்பமும் பகுத்தறிவு வேடம் போடுகிறது என்பதன் மீதான விவாதத்தில் என் கருத்து; ஒருவன் பகுத்தறிவுவாதியாக இருக்கிறான் என்பதனால் மட்டுமே அவனின் ஒட்டு மொத்த குடும்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் மிலிட்டரி சட்டமும் போடமுடியாது. இதெல்லாம் அவரவர் மனத் தெளிவைப் பொருத்தது. என் திருமணம் நடந்தது கோவிலில். எல்லா விஷேஷ தினங்களிலும் ஏதாவது தெய்வத்தின் சன்னதியில் மனைவியுடன் என்னைக் காணலாம். குழந்தைக்கு மொட்டை அடிக்க பழநி, சமயபுரம் உள்ளிட்ட பல கோவில் வாசல்களையும் மிதித்து விட்டேன்....
மேலும்...

ஒரு நாடகமன்றோ நடந்தது

Posted: Sunday, March 21, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை போல இதற்குமுன் இவ்வளவு ஒற்றுமையாக வேறு எந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். இதில் மாற்றுக்கருத்து கூறினால் எங்கே பெண்களுக்கு எதிரான போக்காக அது பிரச்சாரம் செய்யப்பட்டு விடுமோ, பெண்கள் ஓட்டு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் எல்லா கட்சிகளும் ஆதரித்து விட்டார்கள் - இடதுசாரிகள் உட்பட!லாலு மற்றும் முலாயம் கட்சிகள் மட்டுமே இதை எதிர்த்தன. எதிர்த்தன என்றால் அது மசோதாவை அல்ல. அதன் தற்போதைய வடிவை. இடஒதுக்கீடிற்குள் தாழ்த்தப்பட்டவற்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கென...
மேலும்...

நண்பனாக முயற்சிப்பவனே!

Posted: Saturday, March 20, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பனாக முயற்சிப்பவனே! என்னுடன் எப்போதும் உன்னை ஒப்பிட்டுஏன் வீணில் குழப்பிக்கொள்கிறாய்? என் மீது உனை சூழந்தப் பிரச்னைகளைஏன் பொருத்திப்பார்க்க முயல்கிறாய்? உன்னால் முடியாததால் என்னாலும் முடியாதெனஎப்படி உன்னால் எண்ணமுடிகிறது? உனக்கு புரியாத சூட்சுமங்கள் எனக்கும் புரியாதென பொதுவில் எவ்வாறு முடிவுசெய்கிறாய்? என் எண்ணங்களின் அலைவரிசையை உற்றுப் பார்த்தே உணர்ந்துகொண்டதாக எண்ணத் துணிந்தது எப்படி? என்னுள் மேலிடும் ஆர்வங்களையெல்லாம் எளிதில் உனக்கு புரியவைப்பது எப்படி? உன் சங்கடங்களையும்; என் சௌகரியங்களையும்; ஒரே தராசில் நிரப்பியளக்க நீ முனைந்தது எங்ஙனம்? என்...
மேலும்...

சினிமா ரசிகர்கள்

Posted: Friday, March 19, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இப்பதிவில் என் மறுமொழி:ரசிகர்கள் பல விதம். அவர்களில் நம் ஊர் சினிமா ரசிகர்கள் அளவிற்கு கண்மூடித்தனமான பின்பற்றுதல் மற்ற துறை ரசிகர்களிடம் இருக்கிறது என்று சொல்லமுடியாது. எஸ்.பி.பியை ஒருவர் ரசிக்கிறார், பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்றால், பாடகரின் திறமை மீது கொண்ட லயிப்பாக அதனை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு மாறாக நம் சினிமா ரசிகர்களோ வெற்று பிம்பங்களுக்கு மாலையணிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்திய பாணி சினிமாக்களுக்கும் மற்ற அயல்நாட்டு சினிமாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பட்டியலிட்டு, இந்தியச் சூழலையும் உளவியலையும் கணக்கில்...
மேலும்...

போலிகளின் மருத்துவம் - தொடரும் உரையாடல்

Posted: Thursday, March 18, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
//படித்தவர்களாலேயே அறிந்து கொள்ள முடியாது எனும்போது // புரிந்துகொள்ள முடியாது என சொல்வதற்கில்லை... ஒரு அசால்ட் லுக்.. வரும் முன் காப்போம் என்பதை மறந்து வந்த பின் அனுபவிக்க வேண்டியது தான் படித்தவர்களாலேயே அறிந்துகொள்ள முடியாது என்று நான் சொன்னது எதனையென்றால்: உணவு பொருட்களில் போலிகளை எளிதில் இனம் காணுவது போல, மருத்துகளை கையில் எடுத்துப் பார்த்தோ நுகர்ந்து பார்த்தோ அல்லது சிறிய சோதனைகளின் மூலமோ அது உண்மையா போலியா என்று எளிதில் அறிந்துகொள்ள முடியாது என்பதை. மருந்துப் பொருள் போலிகளில் பல வகை உண்டு. 1. சரியான அளவில் உட்பொருட்கள் இல்லாதவை2. தவறான உட்பொருட்கள்...
மேலும்...

போலிகளின் மருத்துவம்

Posted: Wednesday, March 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இச்செய்தியை முன்வைத்து: வேறு எத்தனையோ துறைகளில் போலிகள் இருந்தாலும், உயிர் காக்கும் மருத்துவ துறையிலும் போலிகள் மலிந்திருப்பதுதான் மிகக்கொடுமை. இங்கே போலிகள் என்பதை பட்டம் பெறாத போலி டாக்டர்களுடன், பட்டம் பெற்ற சில உண்மை டாக்டர்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். பட்டம் பெற்றவர்களில் வைத்தியத்தில் சரியான பயிற்சி இல்லாமல் ஏனோதானோ சிகிச்சை அளிப்பவர்கள் ஒரு வகை போலி என்றால், வைத்தியம் தெரிந்தும் தன்னுடைய மருந்து கடையில் தேங்கி கிடக்கும் மருந்துகளை எக்ஸ்பைரி தேதி முடியும் முன்னர் விற்றுத்தள்ள வேண்டிய வணிக நிர்பந்தத்தில், சம்மந்தமில்லா நோய்களுக்கு கூட...
மேலும்...

பெண்ணியம் பேசுதல்

Posted: Saturday, March 13, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கல்வியறிவு பெருக பெருக காலமும் மாறிக்கொண்டிருக்கிறது. இதில் எழுதப்பட்டுள்ளவையெல்லாம் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இன்று நிலைமை அப்படியல்ல.என்னதான் பெண்ணியம் பேசினாலும் இயற்கையாகவே பெண்கள் இரண்டாம் நிலையில்தான் பல விஷயங்களிலும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவானது. அதனால் ஒருநாளும் சரிநிகர் சமானமாவது முடியாது. இவர்கள் எழுதுவதையெல்லாம் பார்த்தால், நான் மட்டும் ஏன் வேட்டைக்குப் போக வேண்டும் என்று பெண் சிங்கம் ஆண் சிங்கத்திடம் சண்டைக்கு போகவேண்டியிருக்கும் :-) இயற்கையின் படைப்பு அவ்விதம்; அவ்வளவுதான்.பெண்களின்...
மேலும்...

மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய ஒரு விவாதம்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
பொதுவாக நான் எந்த வலைப்பதிவிலும் மறுமொழி எழுதுவதில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு அப்படி ஒன்றை ஒரு பதிவில் எழுதப்போக, அது இப்போது அங்கே மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய தத்துவவிசாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. விவாதம் மேலும் வளர்ந்தால் அதில் இறுதிவரை ஈடுபடவும் எண்ணம் உண்டு. அதன் சுட்டியை பின்னர் கொடுக்கிறேன். இப்போதைக்கு அங்கே பதியப்பெற்ற என் சில கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.(1)சாமியார்களை ஆதரிப்பதையும், பிறகு அம்பலங்கள் அரங்கேறியதும் தடிகொண்டு தாக்குவதையும் - இரண்டையுமே பக்தர்களாகப்பட்டவர்கள் ஒருவித கண்மூடித்தனத்துடன் செய்வதுதான்...
மேலும்...

சக்ஸஸ்ஃபுல் சாமியாராவது எப்படி?

Posted: Thursday, March 11, 2010 | Posted by no-nononsense | Labels: , , 1 comments
சாமியார்கள் பற்றி தொடரும் உரையாடல்:அடியேனும் அதை எதிர்பார்க்கிறேன்.அதற்க்கான வாய்ப்புண்டா என்று உனக்கு தெரிந்த ஒரு சுவாமிகளிடம் கேட்டு ஒரு சீட் வாங்கி தாமுன்னெச்சரிக்கை: பக்தர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.எனக்கு ஆசாமிகளைத் தவிர ஒரு சாமியுடனும் சங்காத்தம் இல்லை. தவிரவும், சாதாரணமாக எல்லாம் சக்ஸஸ்ஃபுல் சாமியார் ஆகிவிடமுடியாது. -ஊன் உறக்கம் தவிர்த்து பல மணி நேரங்கள் நிஷ்டையில் ஆழ்ந்துவிடும் திறமை வேண்டும். அல்லது அப்படி நடிக்கவாவது தெரிய வேண்டும். உறக்கம் தவிர்ப்பாய்; ஊன் உனக்கு கஷ்டம். -சமஸ்கிருதம் கற்றுவைத்துக்கொண்டு அதிலிருந்து அவ்வப்போது சுலோகங்களை...
மேலும்...

நித்தியானந்தா சர்ச்சை - ஹிந்து மதத்துக்கெதிரான சதியா?

Posted: Friday, March 5, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
it is attempt to defame him and all hindus, please dear brothers and sisters do not write bad comments about him - A comment by someone for us to think about the truth. இந்த சின்ன விஷயத்தை ஏன் பலரும் ஹிந்து மதத்திற்கு ஏற்பட்ட இடராக, அதை அழிக்க நினைக்கும் ஆபத்தாக பார்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. முதலில் ஹிந்து என்பதை ஒரு மதம் என்று சொல்வதைவிட, அதை ஒரு வாழ்க்கைமுறை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். காரணம் இதற்கென பிரத்தியேக மதநூலோ(பகவத் கீதை மதநூல் அல்ல), நெறிமுறைகளோ, கோட்பாடுகளோ கிடையாது. உருவ வழிபாட்டை மையக் கருத்தாகக் கொண்டு அவரவருக்கு...
மேலும்...

நித்தியானந்தா சர்ச்சை - மேலும் சில கருத்துக்கள்

Posted: Wednesday, March 3, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
முன்பு பார்த்து விட்டு ஓரம் கட்டி வைத்திருந்த நித்தியானந்தா வீடியோக்களை மீண்டும் ஒருமுறை தேடியெடுத்து ஓடவிட்டுப் பார்த்தேன். வாழ்க்கையின் கூறுகளைப்பற்றிய அருமையான பொழிப்புரைகள்! அழுத்தம் திருத்தமான மொழியாளுகை! இதுதான் மற்ற சாமியார்களிடமிருந்து இவரை தனித்துக் காட்டியது.எனக்கு இவர் பெயர் அறிமுகமானது வலம்புரி ஜான் மூலமாக. இவரின் வித்யாஞானம் பற்றி அவர் விதந்தோதி ஒருமுறை எழுதியிருந்தார். வலம்புரி ஜானை வாசித்து வந்தவர்களுக்கு அவருடைய தேர்வுகளின் மீது நிச்சயம் ஒரு கவனம் இருக்கும். அவரின் மொழி விளையாட்டுகளின் மீது ஏற்பட்ட லயிப்பின் காரணமாக எனக்கு கொஞ்சம்...
மேலும்...

தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆரையும் வைகோவையும் முன்வைக்கும் அரசியல்

Posted: Monday, March 1, 2010 | Posted by no-nononsense | Labels: , 2 comments
தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆர், வைகோவை முன்வைத்த விவாதத்திலிருந்து:எம்ஜிஆர் சாகும்போது அவருக்கு 70 வயது. இன்னும் உயிருடன் இருந்திருந்தால் தற்போது 93 வயது ஆகியிருக்கும். அவருக்கு இருந்த உடல் உபாதைகளில் இதெல்லாம் நடக்கிற காரியமா? இந்த ஈழப் பிரச்சினையைப்பற்றி பேசும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஏன் இன்னும் ”எம்ஜிஆர் மட்டும் இருந்திருந்தால்..” என்று இறந்து புதைத்து விட்ட செய்தி ஒன்றுக்கு பூ வைத்து பொட்டு வைத்து உதார் விடுகிறார்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிர். எம்ஜிஆர் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்; கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என்பதெல்லாம் அதை அவர் கொடுத்த...
மேலும்...