பொன்னியின் செல்வனை முன்வைத்து... :மணிரத்னம் பற்றி பேசி நேரத்தை வீணடித்துக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன். இங்கே ஏற்கெனவே ஒருமுறை அவர் தலை எனக்கும் நவலடிக்கும் இடையே உருண்டிருக்கிறது. அப்போதாவது ஒன்றிரண்டு உரோமங்கள் அதில் ஒட்டிக்கொண்டிருந்தன. ராவணன் என்னும் த்ராபைக்கு பிறகு அவையும் உதிர்ந்து விட்டன. இப்போது முற்றிலும் முனை மழுங்கிய மனிதராக காட்சியளிக்கிறார். இராமாயணம் என்னும் காவியத்தையே திரைக்கதையில் சரிவர கையாளத் தெரியாமல் சொதப்பிய ஒருவரால் எப்படி பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வெகுசன இலக்கியத்திற்கு காட்சி வடிவம் கொடுக்க முடியும் என்பது...
திண்ணைப் பேச்சு: மின்வெட்டு, நாடுகளின் வரலாறு
கடந்த ஒரு மணி நேரத்தில் நான்கு முறை கரண்ட் போய் வந்துவிட்டது. ட்ரான்பார்மர்கள் லோடு தாங்காமல் திணறுகின்றன. மின்சார பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அரசாங்கத்திடம் மாற்று ஏற்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இனியும் இதற்கெல்லாம் பழகிக்கொள்ள வேண்டியதுதான் என்பது புத்தியில் உறைத்தாலும், மின்சார சாதனங்களுடன் வாழ்ந்து பழகிவிட்டதை சட்டென்று விலக்கிக் கொள்ள முடியவில்லை.இதனாலேயே நான் ஒரு லேப்டாப் வாங்கும் நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் கட்டாயமாக தவிர்த்து வந்த ஒன்று அது. தவிர்க்க...
ஹிப்போகிரஸியின் மொத்த குத்தகைதாரர்கள்
சாய்பாபாவை முன்வைத்து:கடவுள் நம்பிக்கை உள்ளவரை அதன் கிளை நம்பிக்கைகளான கடவுள் அவதார நம்பிக்கைகளும் இருக்கும். தன்னை அவதாரமாக அறிவித்துக்கொள்ளும் நபர்களின் வாழ்க்கையும் செழிக்கும். இதைக் கேள்வி கேட்பவரைத்தான் கண்ணை மூடி கைதொழச் சொல்லி உலகம் பழிக்கும். அதனால்தான் ஆதார பிரச்னையாகிய கடவுள் நம்பிக்கை நோக்கி அம்பை விட்டெறிந்தனர் பெரியார்களும், மார்க்ஸ்களும். பல விஷயங்களில் முற்போக்காக கருத்துச் சொல்ல முண்டியடித்து ஓடி வரும் படித்த பிற்போக்குகள் இந்த விஷயத்திலும் ஜாதிபற்று விஷயத்திலும் மட்டும் கள்ளமௌனம் சாதிப்பார்கள். கவனித்து பார். அவர்களை பொறுத்தவரை...
Mooladee - ஓர் எதிர்வினை
Dear .....,Thanks a lot for your time to respond to me and this mail gave me an opportunity to analyse this matter. There is a hadith which says about female circumcision. But not every hadiths are taken as the islamic law. There are rulings for the hadiths to be authentic and then only it will be considered as a law in Islam. For a deep understanding on this, if you get time please go through the site http://www.islamset.com/hip/health5/female.html.I wish you good luck.Thanks........அன்புள்ள ஹபீப்,நீங்கள் கூறியுள்ளது உண்மை. இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ...
அதிநாயக ஜெயஹே -2

இதுவரை: விக்டோரியா மகாராணி மற்றும் அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த ஏழாம் எட்வர்டு ஆகிய இருவரின் முடிசூட்டல் விழாக்களும் ‘டெல்லி தர்பார்’ என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்றன. ஆனால் இரண்டிலுமே சம்மந்தப்பட்ட அரசியும், அரசரும் கலந்து கொள்ளாமல் அவர்களின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் மட்டுமே கலந்து கொண்டதாக அமைந்துவிட்டன. இனி.., King George V, Emperor of India with Empress Mary விக்டோரியாவின் மகன் ஏழாம் எட்வர்டு இறந்தப்பின் அவரது இரண்டாம் மகன் ஐந்தாம் ஜார்ஜ் பரந்துபட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஏக...
அதிநாயக ஜெயஹே -1

இந்தியாவின் தேசிய கீதம் 'ஜன கன மன’ பாடல் பாரத தாயை போற்றி பாடப்பட்டதா, அல்லது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வாழ்த்திப் பாடப்பட்டதா என்பது குறித்து ஒரு நீண்ட கால சர்ச்சை இருந்துவருகிறது. அதைப்பற்றி நண்பன் சதீஷ்கண்ணன் கேள்வி எழுப்பியிருந்தான். அதனை சரியாக அணுகிப் புரிந்து கொள்ள வேண்டுனாமால் அக்கால அரசியல் சூழல் பற்றியும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகை பற்றியும், அவருக்கு நடந்த முடிசூட்டு விழா பற்றியும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சரித்திரத்தின் பக்கங்களில் பயணிப்பது சிலருக்கு கொட்டாவியை...
நாடு விட்டு நாடு

ஆ! தன்யனானேன்! தேடும் பொருள் கிடைக்க வழி கிடைத்து விட்டால் சீதையை கண்ட அனுமன் போல துள்ளாட்டம் போட ஆரம்பித்து விடுகிறது மனம். https://www.nhm.in/shop/100-00-0000-011-5.html வெள்ளகோவில் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிசாமி என்னும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் சுயசரிதைதான் இந்த நூல். தோட்டத் தொழிலாளராக மலேயாவுக்கு செல்லும் இவரின் குடும்பம் அங்கே சந்திக்கும் அனுபவங்களும், வாழ்வியல் மாறுதல்களும் ஒரு பெண்ணின் பார்வையில் நூலில் பதியப்பட்டுள்ளதாக நல்ல வாசகர்கள் சிபாரிசு...
Mooladee: ஒரு மதிப்புரை

சடங்குகள் என்பன மனிதன் வாழ்வில் தொன்று தொட்டு இருந்து வரும் மரபு சார்ந்த ஒரு நடைமுறை வழக்கம். பெரும்பாலும் சமய நம்பிக்கைகள் அதற்கு காரணமாக இருக்கின்றன. இனம், மதம், கலாச்சாரங்களைப் பொறுத்து சடங்குகள் பலவிதமான மாறுபட்ட வழக்கங்களை கொண்டிருக்கின்றன. சமயங்களுள் சடங்குகள் இல்லாத சமயம் என்று ஒன்று இருக்கவியலுமா என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஒரு நம்பிக்கை, மதமாக பரிணாம வளர்ச்சி காண்பதில் சடங்குகளின் பங்கு மகத்தானது. மதங்களை சடங்குகள் நிறுவனமயமாக்கி நிலைபெறச் செய்கின்றன. சடங்குகள்...
பத்தாம் வகுப்பு தேர்வு - ஒரு நனவிடை தோய்தல்
ஹ்ம்ம்.. கொசுவர்த்தி சுத்த வைக்கிறாய். கடைசி பரிட்சை முடிந்ததும் சினிமா போகவேண்டும் என்று முன்பே பேசி வைத்திருந்தோம் என்று நினைக்கிறேன். தினமும் பள்ளியிலேயே படுத்துப் படித்த பசங்க யார் யாரென்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் அன்று யார் யார் சினிமா போனோம் என்று தெரிந்து விடும். பாட்டை யார் பாடியது என்று விவாதித்தது ஞாபகம் இல்லை, ஆனால் எஸ்.பி.பி.யை நகலெடுத்து இருந்த மனோவின் குரலை வியந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது. அப்புறம் நாள் செல்ல செல்ல இரண்டு குரல்களுக்கும் இடையேயான வித்தியாசததை அறிந்துணர செவிப்புலன்கள் பழகிக் கொண்டுவிட்டன. தேர்வை முடித்துக்கொண்டு...
இன்னொரு ஜாதி இன்னொரு கட்சி
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் கூட்டணிகள் ஆளுக்கு ஒருபுறம் போட்டியிடுகின்றன. தேசிய கட்சியாகிய பிஜேபி தனித்து போட்டியிட்டு மூன்றாவது வாய்ப்பாக வாக்காளன் முன்னால் நிற்கிறது. இவர்கள் எல்லாம் அறிந்த முகங்கள். ஒரு புதிய முகமாக ஒரு ஜாதிக்கட்சி இந்தத் தேர்தலில் மற்ற பெரிய கட்சிகளுக்கு இணையாக எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, பெரிய பெரிய விளம்பரங்களாக செய்திதாள்களில் தந்து கவனத்தை ஈர்த்து வருவதை கவனித்திருக்கலாம். அதுதான் இந்திய ஜனநாயக கட்சி (http://ijkparty.org/). IJK...
திண்ணைப் பேச்சு : ஜெ. பிரசாரம், இருவர் படம்
பல ஆண்டுகள் கழித்து தேர்தல் சமயத்தில் நாமக்கல்லில் இருக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் ஒரு சுரத்தும் இல்லை என்னும்படியாக தேர்தல் முஸ்தீபுகள் ஆர்பாட்டமில்லாமல் நடந்து வருகின்றன. திருமங்கலம் ஃபார்முலாவில் தேர்தல் வியூகம் அமைத்து வைத்திருந்த இருதரப்பும் தேர்தல் கமிசனின் கெடுபிடிகளில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளன. மக்கள் பரமஆறுதலாக உள்ளனர். தேர்தலை பொருத்தவரை நான் எதிர்பார்ப்பது நல்ல மேடைப் பேச்சாளர்களின் உரையை கேட்க வேண்டும் என்பது. துரதிர்ஷ்டவசமாக குசுபு, பாக்கியராசு, செந்தில், வையாபுரி போன்றவர்களே இதுவரை பிரச்சாரம் செய்ய வந்தனர். அவர்களை...
இந்தத் தேர்தலை பொறுத்தவரை... நம் நாட்டில் ஒரு கட்சிக்கு வாக்களித்து நம்மை ஐந்து ஆண்டுகள் ஆள அவர்களுக்கு வாய்ப்பளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் அவர்களுக்கு அந்த ஐந்தாவது ஆண்டுதான் நம்மைப் பற்றி ஒரு அக்கறையும், அச்சமும், பதற்றமும் வருகிறது. காரணம் மீண்டும் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தல். அதுதான் ஜனநாயகத்தின் அற்புதம்; அதன் கையிலுள்ள பெரும் ஆயுதம். அதை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்பதைப் பொறுத்துதான் நமது அடுத்த ஐந்து ஆண்டுகளின் தலைவிதி நிர்ணயமாகிறது. அதை கவனத்தில் கொண்டு நாம் நம் வாக்கை முடிவு...
Subscribe to:
Posts (Atom)
தலைப்புகள்
முந்தையவை
-
▼
2011
(64)
-
▼
April
(14)
- பொன்னியின் செல்வனும் மணிரத்னமும்
- திண்ணைப் பேச்சு: மின்வெட்டு, நாடுகளின் வரலாறு
- ஹிப்போகிரஸியின் மொத்த குத்தகைதாரர்கள்
- Mooladee - ஓர் எதிர்வினை
- அதிநாயக ஜெயஹே -2
- அதிநாயக ஜெயஹே -1
- நாடு விட்டு நாடு
- Mooladee: ஒரு மதிப்புரை
- பத்தாம் வகுப்பு தேர்வு - ஒரு நனவிடை தோய்தல்
- இன்னொரு ஜாதி இன்னொரு கட்சி
- திண்ணைப் பேச்சு : ஜெ. பிரசாரம், இருவர் படம்
- இந்தத் தேர்தலை பொறுத்தவரை... நம் நாட்டில் ஒரு கட...
- திண்ணைப் பேச்சு: நல்ல தங்காள், படிப்பார்வம், கட்டி...
- அண்ணமார் சாமி கதை
-
▼
April
(14)