முருகபெருமான் மற்றும் கார்ப்போரேட் சாமியார்கள்

Posted: Wednesday, October 28, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
My Comment on Lord Muruga and the corporate guruji's:

ம்ம்ம்.. அயல்நாட்டு கோவில்களெல்லாம் பள பளவென்று சுத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன. அதிகமாக விஷ்ணு கோவில்கள்தான் இருக்கின்றன போலும். இதேபோல் சிவன் கோவில் எங்கேயாவது இருக்கிறதா? I meant abroad

சிட்னி, சிங்கப்பூர், லண்டன் மூன்றும் தமிழர் வாழும் இடங்கள். அங்கேயெல்லாம் முருகன் கோவில் இருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழர் அல்லாத ஏனைய ஹிந்துக்கள் வசிக்கும் எந்த இடத்திலாவது முருகன் வழிபாடு நடந்து பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு ஏன்.. வட இந்தியாவில் ஒரே ஒரு முருகன் கோவிலாவது இருக்கிறதா? இத்தனைக்கும் முருகனை பரமசிவனின் மகன், தகப்பனுக்கே பிரணவ மந்திரம் ஓதிய தகப்பன்சாமி என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். நிஜம் என்னவென்றால், நாம் தான் சொல்லிக்கொள்கிறோமே தவிர வடக்கே எவனும் கண்டுகொள்வதில்லை. வட புராணங்களில் குறிப்பிடப்படும் கார்த்திகேயனும்(சரவணன்), இங்கே குறிஞ்சி நில தெய்வமாகிய முருகனும் ஒன்று அல்ல; இரண்டையும் ஆரிய திராவிட கலப்பின்போது மெர்ஜ் பண்ணி விட்டார்கள் என்கிறார்கள் அறிஞர்கள்.

சுவாமி நாராயண் கோவில்களைப் போலவே இன்னும் நூறு வருடங்கள் கழித்து இங்கே தமிழ்நாட்டிலும் சுவாமி சத்குரு, சுவாமி நித்தியானந்தா, சுவாமி பூஜ்யஸ்ரீ ஆலயங்களை காண முடியும் என்று அடித்துச் சொல்கிறேன். சுவாமி நாராயணும் ஆரம்பத்தில் இவர்களைப் போன்ற ஒரு இன்னோவேடிவ் சாமியாராகத்தான் இருந்தார். இவர்களையெல்லாம் கூட ஒரு கணக்கில் வைக்கலாம்.. நான் ஸ்டாப்பாக நாலு மணி நேரம் கூட இவர்களால் கூட்டத்தை கட்டிவைத்து பேச முடிகிறது.. Considerably good counselors! ஆனால் பங்காரு அடிகளார் என்று ஒருவர் இருக்கிறாரே.. அவருக்கு எப்படி இவ்வளவு கூட்டம் சேர்ந்தது?! வேப்பிலையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து கூட்டத்தை பார்த்து கும்பிடு போட்டபடி சென்றதைத் தவிர இத்தனை பெண்களை கவரும்படி என்ன செய்துவிட்டார் என்பதுதான் இன்று வரை எனக்குப் புரியவில்லை. அன்றைக்கு ஒருநாள் டிவியில் பார்க்கிறேன், அவருடைய திருமதியையும் பக்தர்கள் பூஜித்து வணங்கிக் கொண்டிருந்தார்கள்.. இன்னொரு அம்மா பகவான்?? கிழிஞ்சது லம்பாடி லுங்கி!!
மேலும்...

உழவரின் உணவகம்

Posted: Tuesday, October 27, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
நாமக்கல்லை பொருத்தவரை வெளியே சென்று ஏதாவது சிற்றுண்டி/ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வரலாம் என்றால் அன்று முதல் இன்று வரை அதே பானி பூரி, சில்லி சிக்கன், பீப்ஸ் கடைகள் தான் இருக்கின்றன. அதையும் விட்டால் பேக்கரிகளில் பப்ஸ் கிடைக்கும். இவை எதிலுமே மனிதன் உண்ணத்தக்க எண்ணெய்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் ஏதாவது சைவ ஹோட்டலுக்கு சென்று தயிர் வடையும், குழி பனியாரமும் சாப்பிடுவதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் குறையை சில நாட்களாக "உழவர் உணவகங்கள்" தான் போக்குகின்றன. உழவர் சந்தை தெரியும். அதென்ன உழவர் உணவகங்கள் என்று கேட்கும் NRN' கள் இங்கே, இங்கே க்ளிக் செய்யலாம்.

அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதைபோல சோளம், தினை, கம்பு மற்றும் பயிறு வகைகளை சார்ந்த முற்றிலும் கிராமிய உணவுகள் மட்டுமே இக்கடைகளில் விற்கப்படுகின்றன. மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் அள்ளுகிறது. 5 மணி முதல் 7 மணிக்குள் எல்லாம் விற்று தீர்ந்து விடுகிறது. உளுந்த கஞ்சியும், சூடான சோள பனியாரமும், கிழங்கு பக்கோடாவும் என்னுடைய ஃபேவரைட். நாமக்கல்லின் ஹாட் ஸ்பாட் கொஞ்ச நாட்களாக இதுதான் என்றால் மிகையாகாது.

சில புகைப்படங்களை இதனுடன் இணைத்துள்ளேன். பட்டியலிலுள்ள எல்லாம் கிடைப்பதில்லை என்றபோதிலும் கிடைப்பனவற்றில் பழுதில்லை. அடுத்தமுறை ஊருக்கு வருபவர்கள் எல்லோருக்கும் என் செலவில் அங்கே ட்ரீட் உண்டு.

*
Reply to one of my friends comment:

இல்லை, இது காண்ட்ராக்ட் விடப்படுவதில்லை. உழவர் அடையாள அட்டை வைத்திருக்கும் உழவர்கள் மட்டும் நாளொன்றுக்கு ரூ.20 கட்டணம் செலுத்திவிட்டு கடை போட்டுக்கொள்ளலாம். வேறு வெளியாட்களுக்கு அனுமதியில்லை. இவற்றை கண்காணிக்க ஒவ்வொரு உழவர் சந்தையிலும் அலுவலகங்கள் இருக்கின்றன.

எனினும், அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோருமே உழவரா என்றால் நிச்சயம் கிடையாது. வியாபாரிகளும் கலந்துதான் இருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.

இந்த உணவகங்களில் ஆரம்பத்தில் இப்போது இருப்பதை விட இன்னும் நிறைய கடைகளும், வித விதமான பதார்த்தங்களும் இருந்தன. இப்போது வாடிக்கையாளர் அதிகம் விரும்பும் பலகாரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. போகப் போகத்தான் இதன் நிலைத்தன்மை தெரிய வரும்.

------------

நமது முன்னோர்களின் உணவில் இடம்பெற்றிருந்த கம்பு, சோளம், ராகி வகையறா உணவெல்லாம் இப்ப எங்க கிடைக்குது சொல்லு......? nowhere! சிறு வயதில் என் பாட்டி எனக்கு கம்பு/சோள சோறும், அதற்குத் தொட்டுக்கொள்ள புலச்ச கீரை கடைசலும் சமைத்து பரிமாறியது ஞாபகம் உள்ளது. பிறகு இப்போது சில பெரிய இடத்து திருமணங்களின் பஃபே விருந்துகளில் கம்பஞ்சோறு, சோள தோசை சாப்பிட்டிருக்கிறேன். என் அனுபவம் அவ்வளவுதான்.
மேலும்...

Diet Plan

Posted: Monday, October 26, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களே,

”உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்பது திருமூலர் வாக்கு. அதை இக்காலத்திற்கேற்ப மாற்றினால் “உடல் வளர்த்தேன்; உண்டி வளர்த்தேனே” என்பது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். (இங்கே உண்டி என்பது தொந்தியை குறிக்கிறது என்பதறிக. இலங்கைத் தமிழ் வழக்கு!). காரணம் உடற் எடையும், பருமனும் நாம் சற்றே சுதாரிப்பதற்குள் கூடி விடுகிறது. அதற்கு நமது தவறான உணவு பழக்கமும் உடற்பயிற்சியின்மையும் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

உடற்பயிற்சி செய்ய முதலில் மனசும் பிறகு உடம்பும் வளைய வேண்டும். அது ஒருபுறம் இருக்க, நமது உணவு பழக்கம் தவறானது என்றால் சரியான உணவு பழக்கம் (balanced diet) என்பதுதான் என்ன? இது நான் சமீப காலமாக விடை தேடி வரும் கேள்வி.

நான் அறிந்த மருத்துவர்கள் இருவரிடம் அவர்களை சந்திக்க நேர்ந்தபோது இதே கேள்வியைக் கேட்டேன். ஆனால் என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி விலாவரியாக சொல்லிக் கொண்டிருந்தார்களேத் தவிர என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து நேரடியான பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையே சில மாதம் முன்பு எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று மூன்று வேளையும் சப்பாத்தி மட்டும் சாப்பிட்டு உடலின் சமநிலை குலைந்து பிறகு அதையும் விட்டு விட்டேன்.

நேற்று காலை கிரௌண்டுக்கு வருமாறு நண்பர்கள் அழைத்திருந்ததால் அன்று நாம் விளையாடி அதே இடத்திற்குச் சென்றேன். அங்கே இலவச உடற் பரிசோதனை முகாம் நடந்து கொண்டிருந்தது (Sponsor: NTLOA). மற்றவர்கள் வர இன்னும் நேரமிருந்ததால் அதுவரை நேரம் கடத்த முகாமை பார்வையிட்டபடி வலம் வந்தேன். BP test, ECG எல்லாம் தனித்தனி அறைகளில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றின் முன்பும் நீண்ட வரிசை. அவற்றையெல்லாம் கடந்து கடைசியாக ஒரு மரத்தடியில் ஒற்றை நாடியாக ஒரு உருவம் தனியாக சேரில் அமர்ந்திருந்தது. மேலே ஓர் அட்டையில் ’dietician’ என்று எழுதியிருந்தது. ஆனால் சுற்றி ஒருவருமில்லை. சரி, நாமாவது ஆதரவு கொடுப்போமே என்று அவரிடம் சென்று என் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தேன்.

அவர் தந்த பதில் என் ஞாபகத்திலிருந்து: காலையில் சப்பாத்தி. அதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சேர்க்காத ஏதாவது டிஷ். மதியம் நல்ல சாப்பாடு. பிறகு மாலையில் முளை கட்டிய பயிரை வேக வைத்து சாப்பிடலாம். உடன் ஏதாவது liquid எடுத்துக்கொள்ள சொன்னார்; குறிப்பாக பால் என்று நினைக்கிறேன். இரவு வெஜிடபிள் சாலட் மற்றும் தோல் நீக்கப்படாத பழங்கள்(மட்டும்). இதை மாற்றமில்லாமல் மூன்று மாதம் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்திற்கு கேடில்லாமல் உடல் எடை குறையுமாம். அதற்கு பிறகு டயடீஷியனை மீண்டும் சந்தித்து டயட்டில் தேவையான மாற்றங்களை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றார். நான் கேட்ட what is a balanced food என்ற கேள்விக்கான பதில் இது இல்லை என்ற போதும், டயட் பற்றி ஒரு ஐடியா கிடைத்தது.

எனினும், இப்படி ஒரு மெனுவைக் கொண்டு போய் எல்லோருக்காவும் சமைக்கும் அம்மாவிடம் கொடுத்து ’காலையில் சப்பாத்தி, மதியம் சாதம், மாலை பயிரு ஸ்நாக்ஸ், இரவு சாலட் செய்து கொடு’ எனச் சொல்வது குடும்ப வன்முறையாகவே தோன்றுகிறது. கூட்டுக் குடும்பத்தில் வாழும் சராசரி இந்தியனால் காலையில் குடும்பத்துக்கான பொது சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டதில் கொஞ்சம் மதியத்துக்கும் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவது மட்டுமே நடைமுறை சாத்தியம். மற்றபடி இந்த ’prescribed diet plan’ எல்லாம் காதுக்கு எட்டினாலும் வாய்க்கு எட்டுவதில்லை.
மேலும்...

How to type in Tamil

Posted: Wednesday, October 21, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
Friends, Its so easy to type mails in tamil. No special skills needed. All you need is some tamil-typing client software and a little practice. I've been using 'NHM writer' for a while and its been so good.

Here is the method:

1. Click this link and download and install NHM Writer.
2. After the completion of installation, you can notice a bell icon in your system tray (extreme low-right corner)
3. Left click it and select the 3rd option - Tamil phonetic unicode
4. Now you are all set to write in tamil.

Use romanized spelling system to type tamil.

E.g. 1:
vaNakkam = வணக்கம்
vanthanam = வந்தனம்
thangkaL varavu walvaravu aakuka = தங்கள் வரவு நல்வரவு ஆகுக (pls note "w" is used for the tamil word "ந்”)

E.g. 2:
”மூங்கில் இலை மேலே (muungkil ilai meelee)
தூங்கும் பனி நீரே (thuungkum pani wiiree)
தூங்கும் பனி நீரை (thuungkum pani wiirai)
வாங்கும் கதிரோனே (vaangkum kathiroonee)”

You can also use capital letters instead of double small letters to type நெடில். E.g: பா = paa, pA, தா = thA

Special letters:
ழ் = z
ழ = za
ஔ = au
ஸ்ரீ = sri
ஷ = sha
ஸ = Sa

Keyboard shortcuts: Tamil = Alt+2, English = Alt+0

So easy, Try it! Plz reply if there is any doubt or anything that I left out or whatsoever.

- Pushparaj

மேலும்...