முரளிதரன் என்னும் சிங்களத் தமிழன்

Posted: Friday, July 15, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்! --> http://thatstamil.oneindia.in/news/2011/07/15/muralitharan-warns-oz-not-boycott-sl-series-aid0091.html


முரளிதரன் இப்படித்தான் பேச முடியும். மாற்றிப் பேசினால் தான் அது செய்தி.

முரளிதரன் ஈழத்தமிழன் கிடையாது. மலையகத் தமிழன். அதாவது இந்திய வம்சாவழித் தமிழன். இன்னும் சொல்லப் போனால் இந்தியத் தமிழன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முரளிதரனிடம் இந்திய குடியுரிமையும் உண்டு.

இலங்கையை பொறுத்தவரை தமிழர்களிடையே மூன்று பெரும் பிரிவுகள் நிலவுகிறது. ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள். இவர்களிடையே ஒற்றுமை கிடையாது. குறிப்பாக மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்தது கிடையாது.

ஈழப் போராட்டத்திற்கு உள்ள நியாயங்கள் அளவுக்கு மலையகத் தமிழர்களின் குடியுரிமை போராட்டத்திற்கும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கும் உண்டு. அதுவும் ஒரு கண்ணீர் கதைதான். 1988 வரை அவர்களை இலங்கை குடி மக்களாகவே அந்த நாடு அங்கீகரிக்கவில்லை. உண்மையில் 6 இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வதாக சாஸ்திரி-பண்டாரநாயகா இடையே ஒரு ஒப்ப்ந்தம் கூட கையெழுத்தானது. பின்னர் அது கைவிடப்பட்டு ஜெயவர்த்தனே காலத்தில் 1988-ல் தான் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை அளிக்கப்பட்டது.

இப்படி அவர்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஈழப் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டியதில்லை.
அவர்களை இலங்கைத் தமிழர்களாக ஈழத் தமிழர்கள் கருதியதுமில்லை. குடியேறிகள் என மட்டம் தட்டி பேசுவார்கள். ஈழப் போராட்டத்தில் ஏதேனும் பதட்டமான சூழல் என்றால் அதில் பங்குபெறாத மலைகத் தமிழர்கள் தான் முதலில் தாக்கப்படுவார்கள். இதனால் இவர்களிடயே ஒரு ஒட்டுதல் கிடையாது.

கண்டியில் அந்த மாதிரி ஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்து, சிங்களவர்களால் போஷிக்கப்பட்டு, அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு தன் முதலீடுகளை பெருக்கிக்கொண்ட முரளிதரனிடம் இருந்து வேறு என்ன மாதிரி நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியும்?

இதில் ஆச்சரியமில்லை.
மேலும்...

பழைய பாடல் X புதிய பாடல்

Posted: Thursday, July 14, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments


i-love-music.jpg


பழைய பாடல் இனிதா, புதிய பாடல் இனிதா என்பது மாதிரியான ஒரு தலைப்பில் இன்று இரு கிளைமண்டுகள் சீரியஸாக விவாதித்துக்கொண்டு இருந்தனர். அலுவலகத்தில் அரசியல் பேசுவதில்லை, எந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை, எதிலும் அபிப்ராயம் தெரிவிப்பதில்லை என்பதை சிரமப்பட்டு கடைபிடித்து வருகிறேன். அதனால் கண்டுகொள்ளவில்லை.

பழைய பாடலை ஏன் இவ்வளவு சிலாக்கிக்கிறோம்?

சில புதிய பாடல்களும் நன்றாகத் தானே இருக்கின்றன?

இப்படி பல கேள்விகள் எழுவதுண்டு.

உண்மையில் பழைய பாடல், புதிய பாடல் என்று ஒரு வித்தியாசமே இல்லை. இருப்பதெல்லாம் நல்ல பாடல்கள், மோசமான பாடல்கள் என்னும் இரு பிரிவுக்குள் அடங்கிவிடக் கூடியவை. அதற்கு கால பேத வர்த்தமானம் கிடையாது.

பழைய பாடல்களின் காலம் என்று நாம் போற்றும் 50-களில் இருந்து 80 வரையிலான காலகட்டத்திலும் மோசமான பாடல்கள் எண்ணிலடங்காமல் போடப்பட்டன. இன்றைய ’ஒமகஸீயா’ போன்ற அர்த்தமற்ற ஒலிக் குறிப்புகள் கொண்ட பாடல் வரிகள் ஐம்பதுகளிலேயே உண்டு. மந்திரிகுமாரியின் எனக்கு பிடித்த ‘மந்தாரைச் செடி ஓரம்’ பாடலில் அப்படிப்பட்ட ஓசைகள் பாடல் நெடுக தொடர்ந்து வரும். சிவாஜியின் பிரபலமான ‘திண்ணைப் பேச்சு வீரரிடம்..’ பாடலின் துள்ளலுக்கு டெம்போ ஏற்றுவதே அந்த ‘டகுடி டகுடி’ ஒலி எழுப்பல் தான்.

அன்றும் அதற்கு முந்தைய காலகட்ட பாடல்களையே பாராட்டிப் பேசி சமகால இசையை குறைகூறிய பெரிசுகள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.

அப்படியானால் அடிப்படையில் எதுதான் வித்தியாசம்?

எனக்குத் தோன்றுவது ‘ஜீவன்’ தான்.

பாடல் ஹிட் ஆவதை மட்டும் கொண்டு அதை சிறந்த பாடலாக வகைப்படுத்த முடியாது. இரண்டு நாட்களாக கோ படத்தில் சில பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வந்தேன். முணுமுணுக்கவும் செய்துகொண்டிருந்தேன். ஆனால் இன்று அது போரடிக்கிறது. மீண்டும் பழைய பிடித்தமான பாடல்களுக்குத் திரும்பி விட்டேன். இது மாதிரி பட்டியல் போட்டால் எண்ணில் அடங்காது என்பது எல்லோருக்கும் தெரியும். இது நிச்சயமாக பொதுவான ஒரு அநுபவம் தான்.

இப்படி சலிப்பு ஏற்படுவது கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் மிக அதிகம். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் இசை என் விருப்பத் தொகுப்புகளுக்குள் மிக அரிதாகவே ஒன்றிரண்டு என இடம்பெறுகின்றன. எஞ்சியவை ஆரம்ப ஈர்ப்பு முடிந்ததும் காணாமல் போய்விட்டன.

இசை என்பது கேட்பதற்கு என்பதிலிருந்து ஆடுவதற்கு என்றாகிவிட்டதால் தான் இசை ஜீவனற்றுப் போய்விட்டது என்று வைரமுத்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆடுவதற்காக போடப்படும் துள்ளல் இசைக்கு என்றுமே நிலைப்பேறு இருந்ததில்லை. ஐம்பதுகளில் வெளியான உத்தமபுத்திரனின் யாரடி நீ மோகினி பாடல் அளவுக்கு வேறு எந்தப் பாடலும் இன்று வரையில் ரசிகர்களை கிறுக்குப் பிடித்து ஆட வைத்ததில்லை என்றுச் சொல்லலாம். ஆனால் அதன் கிறுகிறுப்பு நிலைக்கவில்லை. ஆனால், அதே படத்தில் ஒலித்த ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்றும் இனியவையாக காலம் கடந்து நீடிக்கிறது.

ஆக, பழைய பாடல்கள் எல்லாம் இனிமையானவை என்றில்லை. இருவிதமான பாடல்கள் எல்லா காலகட்டங்களிலும் இருந்து வருகின்றன. எண்ணிக்கையின் மிகுதி குறைவை பொறுத்தே அந்தந்தக் காலகட்டங்கள் தரப்படுத்தலுக்கு உள்ளாகின்றன. அது தர்க்க ரீதியானதொரு மதிப்பீடாக மட்டுமே இருக்க முடியும்.
மேலும்...

தன் காசே தனக்குதவி

Posted: Wednesday, July 13, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நாமக்கல்லைச் சுற்றி கடிகாரச் சுற்றில் சேலம், திருச்சி, கரூர் என்று சுற்றி விட்டு தற்சமயம் தாற்காலிகமாக இராசிபுரத்தில் பஸ் இறங்கி ஏறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேறு எங்கும் அதிகம் கண்டிராத ஒரு விஷயத்தை இந்த சிற்றூரில் அவதானிக்க முடிகிறது. ஆண்டகளூர் கேட்டில் டவுன் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருக்கும் போதும் சரி, ஊருக்குள் பழைய பஸ் ஸ்டாண்ட், கோர்ட், பொது மருத்துவமனைகளின் பக்கம் சுற்றும் போதும் சரி, ரத்தம் சுண்டிப் போய் நடக்க திராணியிழந்த வயோதிகர்கள் மிகப் பரிதாபமாக நம் முன்னால் வந்து பிச்சை கேட்கிறார்கள். பார்த்தாலே நெக்குருகுகிறது.


இவர்களுக்கு குறைந்தபட்சம் 60 வயதாவது இருக்கும். 30 வயது தொடக்கமே வயோதிகம் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் விட்டு விட்டு வரத் தொடங்கிவிடுகின்றன. இருந்தும், இறுதிகாலம் இப்படி பஸ் ஸ்டாண்ட் பிச்சைக்காரர்களாக அலைய விடுகிறது என்றால், இதிலிருந்து நம் வாழ்க்கைக்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

என்னுடைய பழைய மேலாளர் இதைப்பற்றிய சிந்தனைகள் அதிகம் உடையவராக இருந்தார். குழு சந்திப்புகளில் பிஸினஸ் பற்றி பேசி முடிந்து, பேச்சு தனிப்பட்ட விசயங்களுக்கு வந்ததும் ஒவ்வொருவரின் சேமிப்பு திட்டங்கள், அவற்றின் செயற்பாடுகள் பற்றி அக்கறையாக விசாரிப்பார். எல்லோரையும் பென்சன் திட்டம் எதிலாவது சேரச்சொல்லி வலியுறுத்துவார்.

அவரிடம் அது பற்றி விரிவாக உரையாட எண்ணியிருந்து, விடுபட்டு, கடந்துச் சென்ற எத்தனையோ விஷயங்களில் அதுவும் ஒன்றாகிப் போனது.

முதுமையை உடலளவில், மனதளவில் மாத்திரமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த காலகட்டம் முதலே அவசியம் என்பதை கண்கூடான சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. கண்முன் வராத துயரங்கள் எப்போதும் சொல்லித் தராத பாடங்களை தனக்குள் பொதித்துக் கொண்டுள்ளன என்பதை சிந்தித்து உணரலாம்.
மேலும்...

சமூகம்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
http://thatstamil.oneindia.in/news/2011/07/13/murder-recorded-in-cctv-camera-coimbatore-aid0128.html

யார் அடிபட்டாலும், மிதி பட்டாலும், கொலை பட்டாலும் அவனவனுக்கு அவனவன் வேலைதான் முக்கியம். இங்கே சமூக வாழ்க்கை முறை என்பதே மாயை. உண்மையைச் சொன்னால் மனிதம் செத்த மனிதர்கள் நாம்.

இந்த நாம் என்பது எப்போதும் பெரும்பான்மையை குறிக்கிறது. ஆகவே, நாம் என்றால் எல்லோருமா.. நல்லவர் சிலர் இன்னும் உளரே என்று நைச்சியம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.


நமக்கு நம் வேலைதான் அதி முக்கியம். எவன் கண்ணெதிரே நாசமாய் போனாலும் நாம் போய் மாட்டிக்கொள்ள கூடாது. கையிலுள்ள பீஸா பார்சல் அப்புறம் வீணாகி விடாது?

அதைத் தின்ன பெண்டாட்டி காத்திருப்பாளே, அவளுக்கு அப்புறம் யார் சார் பதில் சொல்வது?..

இப்படி அவரவருக்கு ஆயிரம் வேலைகள்.

'இருக்கும் ஜனதொகையில் ஒன்று போகட்டுமே, இப்ப என்ன குறைஞ்சி போயிடும்?
'

'அது ஏன் சார் நீங்களா இருக்கக்கூடாது?'

'அதெப்படி, என் உயிர் எனக்கு முக்கியமாச்சே.. என்னை மாதிரி ஒரு குடும்பஸ்தனை ஓடி வந்து காப்பாற்றுவது இந்த சமூகத்தின் கடமை'

'அப்போ வெட்டு படுபவனும், விபத்தில் அடிபட்டு கிடக்கிறவனும் குடும்பஸ்தன் தானே?'

'அது அவன் கவலை சார்.. என் உயிர் பத்தி மட்டும் தான் நான் பேச முடியும்'

'சமூகம் ஓடி வந்து காப்பாத்தனும்னு சொன்னீங்களே.. அந்தச் சமூகம் யார் சார்? ஏதாவது திட பொருளா? உங்களை என்னை மாதிரி மனிதர்கள் தானே இந்த சமூகம்?'

'ஆமா.. ஆனா அதிலயும் மனுசங்க மத்தியில வித்தியாசம் இருக்கே.. வலிய போய் ஒரு பிரச்னையில மாட்டிக்கிட்டா யார் சார் போலீஸ் ஸ்டேசன், கோர்ட்டுன்னு அலையறது.. எனக்கு சக்தியில்ல..'

'அப்ப சமூகத்தின் மத்த மனுசங்களும் அப்படியே நினைச்சி ஒதுங்கி போயிட்டா, உங்க உயிர் போராடுறப்போ யார் சார் காப்பாதுவா?'

'உண்மை தான் சார். அப்படிப்பட்ட மிடில்கிளாஸ் அரையணா நாலணா ஆளுங்க மத்தியில மாட்டிக்கிட்டா காப்பாத்த நாதியில்லா சாக வேண்டியதுதான். வேற வழியில்ல'

'அப்ப நீங்க சொன்ன சமூகம் யாரைதான் சார் காப்பாத்தும்'

'அது மாயை சார். அதில இருக்க ஒண்ணு ரெண்டு நல்லவங்க ஓடி வந்து உதவுவதும், சட்டத்தை மதிச்சி நடப்பதும், மனசாட்சிக்கு உண்மையா இருப்பதும் பார்த்து அதைதான் 'கடவுள் இருக்காரு குமாரு..'ன்னு சொல்லிக்கறோம். அது ஒட்டு மொத்த சமூகத்தின் மனித நேயமா நம்பறோம். எல்லாம் மாயை'

'அப்போ உண்மையான சமூகம் தான் எது?'

'கொஞ்சம் வழி விடறீங்களா.. பார்சல் ஆறிட்டு இருக்கு.. அப்புறம் என் பொண்டாட்டிக்கு பதில் சொல்ல முடியாது..'

சமூகம் பேச்சை துண்டித்துக் கொண்டு விலகிச் சென்றது.
மேலும்...

குடிபோதையில் குற்றம்

Posted: Sunday, July 10, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
ம். துப்பாக்கி இருந்தால் மனித மனம் குரங்கு போல என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஒரு உதாரணம். அதுவும் குடி போதையில் --> http://thatstamil.oneindia.in/news/2011/07/10/i-shot-dilshan-his-repeated-trespassing-army-officer-aid0136.html

உண்மை.

குடிபோதையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது என்னிடம் ஒரு டாக்டர் - வயதில் பெரியவர், “குடிபோதைல தப்பு நடந்து போச்சின்னு சொல்றானுங்களே.. எவனையாவது குடிபோதையில பீய தின்னச் சொல்லேன் பாப்போம்.. அப்ப மட்டும் எப்படி சரியாக தின்னக்கூடாதுன்னு புத்தி வேலை செய்யுது.. எல்லாம் வெறும் சாக்கு, என்ன பண்றோம்னு தெரிஞ்சிதான் பண்ணுறானுங்க. ஒரு base level conscious எப்பவும் இருக்கும்”, என்று சொன்னார்.

அது என்னை அன்று சிந்திக்க வைத்தது.

நானும் குடித்திருக்கிறேன். அதீத போதை அளவுக்கு (இதை ஃப்ளாட் ஆகும் அளவுக்கு என்றுச் சொல்லலாமா?) இன்னும் சென்றதில்லை. ஆனால் போதையின் போது ஒரு மாதிரி அதீத தன்னம்பிக்கை, எடுத்தெறிந்து பேசும் ஒருவித செறுக்கு ஏற்படுவதை உணர முடிகிறது. அதற்கு மேல் மனதில் முன்திட்டம் இல்லாமல் குடிபோதையில் கற்பழிப்பு, கொலையெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்.

போதை பயம் போக்குகிறது. எனினும், அதற்குப் பிறகு நடக்கும் செயலுக்கான திட்டத்தை புத்தி தான் வகுக்கிறது. அதனால் குடிபோதையில் நடந்து போச்சு என்பது மனோரீதியில் பொய்யான வாதம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதை கொஞ்சம் psychological ஆக பார்க்க வேண்டியுள்ளது.... குடிபோதையில் conscious வுடன் தவறு நடக்கிறது என்ற வாதத்தை ஒத்து கொள்ள முடியாது. ஏன் என்றால் நான் அடிக்கடி செய்திகளில் படிக்கும் விஷயங்களில் ஒன்று..குடிபோதையில் கணவன் மனைவியை கொன்றான்....இதை அவனால் குடிக்காமலே செய்ய முடியும் ஆனால் ..போதையின் அளவு அதிகமாபோரதல அவன் கண்ட்ரோல் அவனிடம் இல்லை. ..அவன் அடிக்கும் அடியின் அளவு அவனுக்கு தெரியாது ...அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாமே தவிர...கொல்லவேண்டும் என்று இருப்பதாக சொல்ல முடியவில்லை.

உன் அளவுக்கு உன்னால் செருக்குடன் பேசவோ பழகவோ முடிகிறது.. குடித்திருந்தால்..

ஆனால் உண்மையாலுமே அதே போன்று normal ஆகவே அப்டிஇருக்கும் ஒருவன் குடித்தால் இன்னும் vulgar ஆக தான் போவான் என்று நினைக்கிறன்..

இந்த விவாதம் சில மாதங்கள் முன்பே எழுந்திருந்தால் நீ இந்தியாவில் இருந்த சமயத்தில் ‘அதீத குடிபோதையில் மெய் மறக்கிறதா’ என்பதை நாம் நடைமுறையிலேயே பரீட்சித்து பார்த்திருந்திருக்கலாம் :-)

இதை நீ குறிப்பிட்டதுள்ள போல சற்று மனோரீதியாக ஆராய்வோம்.

Conscious என்பது தன்னுணர்வு நிலை. அந்தத் தன்னுணர்வு நிலையை தியானம் ‘ஜாக்ரத்’ என்கிறது. அதற்கு அடுத்த நிலை ‘ஸ்வப்னம்’. இது போல் இன்னும் இரண்டு நிலைகள் உள்ளன. இறுதி நிலை துரியம் எனப்படும் ஆழ் மனது. குடிபோதை என்பது ஜாக்ரத்தும் இல்லை; ஸ்வப்னமும் இல்லை என்றால், அது நிச்சயம் இரண்டுக்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த ஒரு நிலையாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு தனிப் பெயர் இருக்கிறதா என்பதெல்லாம் அந்தத் துறை நூல்களையும், அறிஞர்களையும் கலந்தாய்வ் செய்ய வேண்டிய விஷயங்கள்.

ஆனால், நமக்கு வேண்டிய கருத்து இது conscious - unconscious இரண்டுக்கும் இடைப்ப sub-conscious ஆக ஏன் இருக்கக் கூடாது என்பதுதான். ஏன் இருக்கக் கூடாது என்பது கூட இல்லை, அதுதான் குடிபோதை என்பதுதான் என் நிலைப்பாடு.

Sub-conscious mind என்றால் என்ன.. “Of or concerning the part of the mind of which one is not fully aware but which influences one's actions and feelings” - என்கிறது அகராதி விளக்கம். இதன்படி, ஒருவனுக்கு முழுமையான உணர்வு நிலை இல்லை, ஆனால் அந்தப் பகுதி விழிப்புணர்வு அவனுடைய உணர்ச்சிகளிலும், செயல்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதாகிறது.

அப்படியானால் அந்த மாதிரி ஆதிக்கம் செலுத்தும் மனோநிலையில் அவனுடைய விழிப்பு நிலையின் தன்மையில் தான் செய்வது இன்னது என்பது குறித்த அறிதல் இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக மறுபடியும் எழுகிறது.

குடிபோதை என்பது Sub-conscious mind என்பதை இறுதி செய்து கொண்டால், Sub-conscious mind-ன் நடக்கும் செயல்கள் மீதான மனதின் கட்டுப்பாடு மற்றும் அதன் செயல்பாடு பற்றி நினைவாற்றல் சேமிப்பு இரண்டும் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும் என்று கருதுகிறேன்.

(தொடர்கிறேன்..)
மேலும்...

இந்தியா என்னும் குப்பைக் கூடை

Posted: Saturday, July 2, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஜெமோவின் கீழ்கண்ட பதிவை முன்வைத்து:

ஜெமோவின் கருத்துக்கள் முக்கியமானவை. இ
து ஊடகங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னை.

அணு ஆயுத கழிவுகள், கனரக தொழிற்சாலை கழிவு பொருட்கள், கைவிடப்பட்ட கப்பல்கள் ஆகியவைகளுடன் எங்கேயோ, எவனோ தின்று போட்ட எச்சக்கழிவு பிளாஸ்டிக் குப்பைகளும் இன்று இங்கே ‘இறக்குமதி’ செய்யப்பட்டு வாழ்நிலம் குப்பை காடாக்கப்படுகிறது என்னும் செய்தி உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

இந்த மாதிரி வாழ்வாதார பிரச்னைகளை விட்டு விட்டு ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகத்தில் மாட்டவில்லை என்று இங்கே மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை விட்டால் சோனியா காந்தியை விமர்சித்து விட்டதற்காக தீக்குளிக்கிறார்கள். போராட்டம் என்ற சொல்லுக்கு உள்ள மரியாதை சீரழிந்து விட்டது.

நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணை, மருத்துவமனை கழிவு பொருட்கள் புறநகர் பகுதிகளிலுள்ள புறம்போக்கு நிலங்களில் ஆள் அரவமற்ற நேரங்களில் வண்டி வண்டியாக கொட்டப்பட்டன. செத்த கோழிகளும், ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் துணிகளும் கடும் வீச்சத்தை கிளப்பி வந்தன. சில காலமாக அந்த புகார் இல்லாமல் இருக்கிறது.

மேலும்...

குழலும் யாழும் குரலினில் தொனிக்க

Posted: Wednesday, June 29, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இன்று மாலை பேருந்தில் ஏறியமர்ந்ததும் மூளையின் ஏதோ ஒரு நியூரானில் சேமிக்கப்பட்டிருந்த இந்தப் பாடலின் ஞாபகத்திற்கு உயிர் வந்துவிட்டது. அப்போதிருந்து முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறேன்.

யேசுதாஸின் குரல் ஒரு அமானுஷ்யம் போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வீடு வந்து அடங்கியதும் இணையத்தில் கிடைக்கிறதா என தேடிப்பார்தேன். இந்த இணையத் தொடர்புதான் எத்தனை அற்புதமான சாதனம்! யாரோ ஓர் அன்பர் வலையேற்றி வைத்திருந்த பாடல் கேட்கக் கிடைத்தது. இதோ கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

“குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!”

http://www.youtube.com/watch?v=c9P-G0ICzbE

திருச்சி வானொலி நிலையத்தின் காலை 6 மணி பக்திமாலையில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட இந்தப் பாடல் போல இன்னும் பல பாடல்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்தவையாக உள்ளன. ஏசு, அரவிந்தர்-அன்னை, அல்லா என்று பல கடவுள்கள் குறித்தும் பாடப்பட்ட அவைகளின் இசையமைப்பும், வரிகளும் என் உணர்வுகளில் கலந்தவை. இன்று போல எப்போதாவது அவைகள் ஞாபகத்திற்கு மீளும் போது உடன் பால்யத்தின் நினைவுகளையும் சுமந்து வந்து நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்துவிடுகின்றன.

“மலர் போல மலர்கின்றன் மணம் வேண்டும் தாயே
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னையே
வணங்கினோம் உன்னையே”

கங்கை அமரனின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் சில நாட்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவு வேளையில் என்னை தாலாட்டிக்கொண்டிருந்தது. உடன் துண்டு துண்டாய் அக்காலத்தின் அதிகாலைப் பொழுதின் மிச்சம் மீதியான சில நினைவுகளும்...

இவைகள் ஒரு நீண்ட பட்டியலின் இரு உதாரணங்கள் மட்டுமே. இவைகளை நான் வானொலியில் கேட்டது தவிர்த்து வேறு எங்குமே கேட்டதில்லை. இதுபோல் டி.எம்.எஸ்ஸின் பல முருகன் பக்தி பாடல்களும் உள்ளம் உருக வைக்கின்றன. ஏகாந்தமாக வீற்றிருந்து அவற்றைக் கேட்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கரம் என் உள்ளங்கையை அழுத்திப் பிடித்து ஆறுதல் சொல்வது போலவே இருக்கிறது. சில நொடிகளாகவது பழைய வீட்டின் சிதிலமடைந்த தாழ்வாரத்தின் கட்டிலில் கண்ணை கசக்கி படுத்துக் கிடந்து பழைய வாழ்க்கையை வாழ்கிறேன்.

உண்மையில் இவைகளில் மனம் லயிக்கக் காரணம் இப்பாடல்கள் தானா? இல்லை, இவைகளில் ஊறிக் கிடக்கும் பால்யத்தின் வாசனையா? சொல்லத் தெரியவில்லை. அனுபவிக்க முடிகிற எல்லாவற்றையும் விவரித்துவிட முடிந்துவிட்டால் மொழியின் தேவை என்றோ முடிந்து போயிருக்கும்.
மேலும்...

சாரு பாலியல் சர்ச்சையை முன்வைத்து

Posted: Sunday, June 26, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
உண்மையில் வினவு என்ன எழுதியுள்ளார்கள் என்பதை முழுமையாக நான் படிக்கவில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடியோ விளக்கமோ அவசியமில்லை. சாரு ஒரு ஸ்த்ரீலோலன் என்பது பலமுறை சந்தி சிரித்த விஷயம். அது இன்று அவரின் விடலை ரசிகர்களுக்கு வேண்டுமானால் புது செய்தியாகவும், கசப்பான உண்மையாகவும் இருக்கலாம். அவரை பல காலமாக அறிந்தவர்களுக்கோ, இலக்கியம் பற்றிய உண்மையான பரிச்சயம் கொண்டவர்களுக்கோ அல்ல. அதனால் சாரு தான் சாட் செய்தாரா என்ற கேள்வியே வலுவற்றது.

’108 குட்டிக் கதைகள்’ என்று சாரு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். வழக்கம் போல அதன் கருபொருள் செக்ஸ் தான். (அதை அவர் வேறு வேறு சொற்களில் உன்மத்தம், உருக்கம், காதல் வாதை என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்). அதை எழுதுவதற்கான தான் ’ஃபீல்டு ஒர்க்’ செய்வதாகவும், தன் வயதை குறைத்துச் சொல்லி ஒரு கல்லூரிப் பெண்ணை மடக்கி விட்டதாகவும், அவளை மயக்கி அழைத்து சென்று உடலுறவு கொண்டுவிட்டதாகவும் எழுதியிருந்தார்.

பின்னர் அதனை நீட்டித்து எழுதிதான், காமரூப கதைகள் என்ற நூல் வெளியானது என்று நினைக்கிறேன். அதை நான் இன்னும் படிக்காததால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆக, அந்த உலக எழுத்தாளர் தன் ஆன்மாவை உருக்கி பல காலமாக தந்து கொண்டிருப்பதெல்லாம் இந்த மாதிரி பலான லீலைகளின் டைரி குறிப்புகள் தான். அது இன்று எழுத்தாவதற்கு முன்பே அம்பலப்பட்டிருக்கிறது. சில புதிய வாசகர்களிடையே அதிர்ச்சி அலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சாருவின் முதல் மனைவியின் பெயர் அமரந்தா. அவரும் எழுத்தாளர்தான். நிறைய மார்க்ஸீய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். இன்றும் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு சொல்லகூடிய சிலரில் ஒருவராக அவர் இருக்கிறார்.தன் மகள் என்று சாரு சொல்வது இவர்கள் இருவருக்கும் பிறந்ததுதான். அவர் ஏன் பிரிந்து சென்றார் என்பதற்கும் இந்த மாதிரி லீலைகள் தான் காரணம் என்று சொல்வார்கள்.

எழுத்தாளர் மாமல்லனை நீ அறிவாய் என்று நம்புகிறேன். அவர் இந்த விஷயத்தில் சாருவை ஆதரிக்கிறார். ஆனால் அதற்கு அவர் சொல்லும் நியாயங்கள் வேறு. அதனுள் நாம் நுழைய வேண்டாம். அவர் சாரு பற்றி முகநூலில் எழுதியுள்ள ஒரு கருத்தை மட்டும் பார்ப்போம்:

சாரு பொமபளைப் பொறுக்கிங்கறது ஊரறிஞ்ச ரகசியம். ஒரு முறையில்ல இது முதல் முறையும் இல்லே. பலமுறை அவமானப்பட்டிருக்கான். ஆனா பெரிய மனுஷன் வேஷம் கட்டி இணையத்துல ஆடறவன், பொண்டாட்டி வெளிநாடு போனப்போ என்ன பண்ணினான்னு தெரியுமா? இல்லே, இந்தப் பொண்ணைவிடச் சின்னப் பொண்ணு அண்ணன்கூடத் தொணைக்குப் போனா அவளை வேலைக்கு வெச்சிக்கவான்னு கேட்டான். வழிசலைப் பாத்த அந்தப் பொண்ணு, அய்யையோ அவன் பார்வையே சரியில்லைனு சொல்லிடுச்சி, மாட்டிக்க ரெடியா மானக்கெட்டு நிக்கிற சாருவைப் பிடிக்கிறது பெரியவிஷயமில்லே!

இங்கே அவர் வேறு யாரையோ இதில் கோர்த்து விடுகிறார். அநேகமாக ஜெமோவாக இருக்கலாம். இதன்படி, இலக்கிய வட்டத்தில் சாருவைப் பற்றி புழங்கும் கருத்து - மானங்கெட்ட ஆள், பாலியல் ஆசாமி. இன்னும் சொல்லப் போனால் அது ஒரு அசிங்கம். அதன் எழுத்து அதைவிட அசிங்கம். இதுதான் இவர் போன்ற சாருவின் சமகால எழுத்தாளர்களின் கருத்து.

அதனால் >>இது பெரிய பிரச்னை ஆகும் என்று எதிர் பார்த்தேன். ஆனால் இலக்கிய உலகில் ஒருசிலரைத் தவிர யாரும் வாய் திறக்கவே இல்லையே? ஆச்சர்யமாக உள்ளது !!!<< என்னும் உன் ஆச்சரியம் அநாவசியம். அவரை இலக்கிய எழுத்தாளராகவே யாரும் அங்கீகரிப்பதில்லை.

சாருவின் எழுத்து நடை வசீகரமானது. எந்த subject குறித்தும் அவரால் மிக சுவாரசியமாக எழுத முடியும். சுஜாதாவுக்கு அடுத்து அந்த திறமையை நான் சாருவிடமே காண்கிறேன். மற்றபடி, அவருடைய ஆக்கங்களுக்கான இலக்கிய இடத்தை காலம் தீர்மானிக்கும்.

மற்றவர்கள் தொட அஞ்சும் பாலியல் கருபொருள்களை அவர் தைரியமாக தொட்டு எழுதுகிறார் என்ற அளவில் அவர் முக்கியமானவர். ஆனால், அதற்காக வெளியேயும் ‘தொட்டு’ அவமானப்பட்டுக் கொள்வதுதான் சமயத்தில் சந்தி சிரித்துவிடுகிறது.

அவருடைய cult followers பற்றியெல்லாம் நான் பேசவே விரும்பவில்லை. அவர்களுக்கு இலக்கியமும் தெரியவில்ல, சாருவும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் பக்குவத்திற்கு அவர்கள் வந்ததும் வருந்தக்கூடும். அது அவர்கள் பிரச்னை.

நாம் நம் அளவில் தெளிவாக இருந்து, அல்லன விலக்கி நல்லன நாடி வாசிப்பது ஒரு வாசகனாக நாம் கைகொள்ள வேண்டிய பக்குவம்.
மேலும்...

என்னுடைய ஆதர்சம்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நான் எனக்கு ஆதர்சமாக கொண்டிருப்பவரைப் பற்றி இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.


252560_226869870674359_100000540440253_896500_3372928_n.jpg

அவர் கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர்.ஜெயபாரதி. 2002 முதல் அவர் எழுத்துக்களை இணையத்தில் படித்து வருகிறேன். எனக்கு தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு, தொன்மம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட அவர் எழுத்துக்கள் தாம் காரணம். அகத்தியர் என்னும் இணைய குழுமத்தை பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். 50,000 மடல்களை கொண்ட குழுமம் அது. அதில் திரு.ஜேபி மட்டும் 20,000 மடல்கள் எழுதியுள்ளார். அத்தனையும் அறிவுக் களஞ்சியம்.

டாக்டர் என்றால் அவர் உண்மையிலேயே டாக்டராக மலேசிய சுகாதரத்துறையில் பணிபுரிந்தவர். பெரிய பதவிகளை வகித்தவர். ஊடாக ஒரு பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர். அவரைப் பற்றி ஒருநாள் விரிவாக எழுத எண்ணம். அதற்கு முன் அவரைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளதை படிக்கலாம் --> http://www.sramakrishnan.com/?p=2436

நான் இணையத்தில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவர, பல விஷயங்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள, எழுத்துக்களையும், தகவல்களையும் பகுத்துணர்ந்து நீரை விலக்கி பாலை அருந்தும் முதிர்ச்சியை நோக்கி என்னை நகர்த்திச் செல்ல அவரால் நான் அடையப்பெற்ற inspiration-க்கு முக்கிய இடமுண்டு.

அவரிடம் வம்பு, வசை, அரசியல் இல்லாததால் இளைஞர்களின் குதூகலமான எழுத்து தேடலுக்கு ஏற்ற தீனி அவரிடம் கிடைக்காது. அதனால் ஆய்வு ரீதியான எழுத்துக்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு உகந்த இடமாக அகத்தியம் இருக்காது. சங்கத்தமிழ், வரலாறு, ஆன்மிக, தொன்மை சார்ந்த சீரியஸான விவாதங்கள் மட்டுமே அதில் நடக்கும்:
http://groups.yahoo.com/group/agathiyar/

ஜேபி அய்யாவின் சில வீடியோ உரைகள் அண்மையில் வலையேற்றப்பட்டன. அவைகளை காண விரும்பினால் -->


இவர் போல இன்னும் சிலர் உண்டு. சமயம் வரும்போது எழுதுகிறேன்.

rojamuthaiya_jaybee1.jpg

ரோஜா முத்தையாவுடன் டாக்டர்.ஜேபி
மேலும்...

தமிழ் இணையம்

Posted: Monday, June 20, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
தமிழ் இணையம்.

தமிழில் இண்டர்நெட் பிறந்த 1996-2000 கால கட்டங்களில் நான் இணையத்தில் இல்லை. ஆனால், அது தவழ்ந்து இன்று மீசை அரும்ப தொடங்கியுள்ள கடந்த பத்தாண்டு காலங்களில் அதை மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நடந்துள்ள ஒவ்வொரு நிகழ்வுக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஈழம், இலக்கியம், நட்பு, வக்கிரம், ஆபாசம், காதல், காமம், குழு அரசியல்... என்று இக்குறுகிய கால கட்டத்தில் பல நிகழ்வுகள் கடந்து சென்றுவிட்டன. அவைகளின் வீச்சும், விளைவுகளும் நமக்கு வெளியுலக அனுபவத்தில் கிடைத்திட சாத்தியமே இல்லாதவை. சொல்லி விளங்க வைக்க முடியாதவை.

எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கான மானசீக குருவையை இங்கேதான் கண்டறிந்தேன். என் இணைய செயல்பாட்டை நழுவ விடாமல் பாதுகாத்துக் கொண்டு, தினமும் எத்திக்காவது சென்று எதையாவது தேடி படிக்கும் ஆர்வம் எனக்குள் ஏற்படவும் - அவரின் ஆளுமையின் மீது நான் கொண்ட பிரமிப்புதான் காரணம். மேலும் சிலர் என்னை தீவிரமாக பாதித்திருக்கிறார்கள். எல்லாமே என்னளவில் பேரனுபவங்கள். என்றாவது பதிந்து வைக்க வேண்டும்.


இன்று கிளம்பிய சாரு சர்ச்சையை தொடர்ந்து இதையெல்லாம் எண்ணிப் பார்க்கிறேன்.

மேலும்...

அப்பா டக்கர்!

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments

சமீப காலமாக பலரும் ‘அப்பா டக்கர்’ என்பதை ரொம்ப மகிழ்ச்சியுடன் விரும்பி பயன்படுத்துவதை கவனிக்கிறேன். ‘இவரு பெரிய அப்பா டக்கரு’, ‘நீ பெரிய அப்பா டக்கர் டா.. உன்கிட்டயெல்லாம் மோத முடியுமா’.. ரீதியில் அவற்றின் பயன்பாடு உள்ளது. அதாவது ”பெரிய பு...ங்கி” என்னும் அர்த்தத்தில். ஆனால் அதுதானா, அதன் சரியான அர்த்தம்?

டக்கர் தெரியும். டாப் டக்கர்-ம் தெரியும். இதென்ன அப்பா டக்கர்?

ஒரிஜினல் சென்னைவாசி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டேன். மெட்ராஸ் தமிழில் அவர் வித்தகர். அந்த உச்சரிப்பை கேட்கவே அவரிடம் விரும்பி உரையாடுவதுண்டு. அவர் சொன்ன விளக்கத்தை நாட்டு மக்கள் நலன் கருதி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

1. டக்கர் ஃபிகர் - அழகான பெண்.


டாப் டக்கர் ஃபிகர் - ரொம்ப அழகான பெண்.


அப்பா டக்கர் ஃபிகர் - அதெல்லாம் ‘அப்பா டக்கர்’ ஃபிகர் டா.. நாமெல்லாம் நெனச்சி கூட பார்க்க முடியாது. (சற்றே வயிற்றெரிச்சலுடன் சொல்வது)


2. iPhone4 -லாம் அப்பா டக்கர் போன் டா... நமக்கு அதெல்லாம் எட்டாக்கனி!

ஆக, சற்றே பொறாமையுடன் வயிற்றெரிச்சலுடன் சொல்லப்படுவதுதான் அப்பா டக்கர்.


அது இப்போது வேறு பல அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.


மொழி ஆராய்ச்சி என்பது மிகவும் சுவாரசியமான துறை என்பதை மணிப்பிரவாள நடை குறித்து தேடி தெரிந்து கொண்ட சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தளவுக்கு எல்லாம் சிரமப்பட்டுக்கொள்ள வேண்டாம். குறைந்த பட்சம் நம் சொல்வங்கியை பெருக்கிக் கொள்ளவாவது நிறைய படிக்கலாம். அஃதொன்றும் அப்படியெல்லாம் அப்பா டக்கர் வேலையல்ல! :-)

மேலும்...

அவன் இவனும் உவனும்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments

எச்சரிக்கை: இந்த விமர்சனத்தை படிப்பதால் படத்தில் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை.


Avan%2BIvan%2BSongs%2BDownload.jpg


‘அவன் இவன்’ திரைப்படத்தை நேற்று சேலம் கீர்த்தனாவில் நானும் சுரேஷும் பார்த்தோம். நல்ல கூட்டம். காட்சிகள் ரிசர்வேசனில் போய்க்கொண்டிருந்தன. ஷங்கர் போல பிரம்மாண்டம், கலர்ஃபுல் ஃபாண்டஸி, நூறு கோடி பட்ஜெட் எல்லாம் இல்லாமலே ஒரு இயக்குநரால் இவ்வளவு மக்களை தியேட்டருக்கு கவர்ந்திழுக்க முடிவது தற்கால திரைச்சூழலில் அரிதான ஒன்று.

கதாப்பாத்திர உருவாக்கத்தை (characterization) பொறுத்தவரை வழக்கம் போல பாலா ஒவ்வொரு பாத்திரத்தையும் நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார். திரையில் அவர்களின் நடிப்பை வியந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். விஷாலுக்கு கூடுதலான மேக்கப்; மற்றும் முக்கியத்துவம். அவரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு காட்சிக்கு காட்சி கைத்தட்டல் வாங்குகிறார்.


போலவே, ஹைனஸாக வரும் இயக்குநர் ஜி.எம்.குமாருக்கும் நல்ல பாத்திரம். மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். இவருக்குதான் உண்மையில் அவார்டுக்கான வாய்ப்பு இருக்கிறது எனலாம்.

ஆர்யாவுக்கு சிறிது underplay பாத்திரம். அதை அவர் நன்றாகவே செய்துள்ளார்.

இவர்களைத் தவிர படத்தில் வேறு யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. இரு நாயகர்களுக்கும் ஜோடி தேவை என்பதால் இரு பெண் பாத்திரங்கள் திணிக்கப்பட்டுள்ளன. கதையின் போக்கில் அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

உண்மையில் படத்தில் கதை என்றே ஒன்று பெரிதாக கிடையாது. Thin line story ஒன்றை இரண்டரை மணிநேர திரைக்கதையாக திரித்து நீட்டிக்க பெரிதாக பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள். அதற்காக பல இடங்களிலும் சம்மந்தமில்லாத காட்சி செருகல்கள். கதைக்கு துளியும் சம்மந்தமில்லாமல் சூர்யாவின் அகரம் விழா காட்சியை முடிந்தவரை இழுத்து அதில் கால்மணி நேரம் ஓட்டி விடுகிறார்கள். அதுபோல ஒரு கிடாவெட்டு காட்சி! சில போலீஸ் ஸ்டேசன் காட்சிகள்!


துண்டு துக்கடா நகைச்சுவை தோரணங்களாக மட்டுமே அமைந்துவிட்ட திரைக்கதையின் போக்குக்கு சீரியஸ்னெஸ் சேர்க்க வில்லன் என்று ஒருவர் தேவைப்பட்டார் — ஆர்.கே பாத்திரம் திணிக்கப்பட்டது. பார்வையாளர்களிடம் எவ்வித அழுத்தமான உணர்வையும் ஏற்படுத்தாத ஒரு தட்டையான பாத்திர படைப்பு அது.


முக்கால்வாசிக்கும் மேலாக குடியும், கூத்தும், வசன நகைச்சுவையுமாக மட்டுமே படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். அந்தக் கணத்தில் சிரித்து வைத்தாலும் ஒரு படைப்பாக எடை நிறுத்திப் பார்க்கையில் சராசரிக்கும் கீழேயே மதிப்பிட முடிகிறது. கதையில் லாஜிக் பார்ப்பவர்களாக இருந்தால் நெளிய ஆரம்பத்து விரைவில் அதுவே பழகிவிடும். பாலாவின் படங்களிலேயே மோசமான கதை, திரைக்கதை கொண்ட படம் இதுதான் என்பேன்.


இந்த படத்தை அடுத்து, பாலாவைப்பற்றி எனக்கு ஏற்படும் ஒரு சம்சயம் - பாலா நல்ல திரைப்படம் எடுப்பதை விட்டு விட்டு, போலீஸ் நாய்களுக்கு மோப்பம் பிடிக்க பயிற்சியளிக்கும் பயிற்சியாளரைப் போல, நல்ல நடிகர்களை உருவாக்கித் தரும் ட்ரெய்னராக மாறிவிட்டாரோ என்று கவலை ஏற்படுகிறது.


இணையத்தில் வேறோர் இடத்தில் ஒரு நையாண்டியான விமர்சனம் படித்தேன். விஷால் ஆர்யாவிடம் கெஞ்சலாக, “மச்சி, நான் கடவுள்ல நீ கலக்கிட்டடா! பாலாவிடம் சொல்லி எனக்கும் அதே மாதிரி ஒரு பர்ஃபார்மன்ஸ் பார்சலேய்..!” என்றாராம். உடனே இந்தப் படத்தை துவக்கிவிட்டார்களாம். உண்மையில் அப்படித்தான் இருக்கிறது. விஷாலை நடிப்பில் அடுத்த வெர்சனுக்கு அப்கிரேடு செய்ய எடுக்கப்பட்ட படம் போலவே இதன் உள்ளடக்கம் தோன்றுகிறது.


சூர்யா முன்னால் விஷால் நடிக்கும் நவரச காட்சியை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். விஷால் திறமையை காண்பிக்க ஒரு வாய்ப்பு என்பதன்றி வேறு எதற்கும் பயன்படாத காட்சி அது. அவர்களுக்கே அது துறுத்தல் என்று தோன்றிவிட்டது போல.. அதை நியாயப்படுத்த அடுத்த காட்சியில் ஆர்யாவுக்கு ஒரு போதைவசனக்காட்சி வைத்துவிட்டார்கள். சகோதரனை புரிந்துகொண்டு விட்டாராம்.. ஒருமாதிரி பூசி மெழுகுகிறார்கள்.


பாலாவிடம் ரசிகர்களுக்கு என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை அவர் எல்லா படங்களிலும் நிறைவு செய்வது கடினம்தான். அதற்காக சொதப்பல் படம் தராமலாவது இருக்கலாம். நடிகர்களை உருவாக்கும் வேலையை நிறுத்திக்கொண்டு, நல்ல படைப்பை உருவாக்கும் வேலையை ஆரம்பிக்கலாம். இதன் சில கதாபாத்திரங்களும், காட்சிகளும் அவருடைய பழைய படங்களின் மறுஆக்கமாக இருப்பதை விரிவஞ்சி எழுதாமல் தவிர்க்கிறேன்.


இந்தப் படத்தை முழுமையாக பார்க்க வைக்கும் இரண்டு விஷயங்கள் - நடிப்பும், ஒளிப்பதிவும். அதற்காக வேண்டுமானால் பார்க்கலாம். மாறாக, பாலாவின் முந்தைய படங்களை மனதில் இறுத்தி, ஒரு தரமான படைப்பை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். அந்த வகையில் எனக்கு பெரும் ஏமாற்றமான படமிது.


மேலும்...

சம்மந்தமில்லாத சங்கடங்கள்

Posted: Thursday, June 16, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments

குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு, ஃபோன் டாப்-அப் செய்வதற்காக பரமத்தி ரோட்டில் ஒரு கடை முன்னால் வண்டியில் சென்று இறங்கினேன். உள்ளே நாலைந்து பேர் அடைத்துக்கொண்டு நின்றிருந்தனர். கும்பல் குறையட்டும் என்று அதை ஒட்டியிருந்த படிக்கட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினேன். இது போன்ற கடைகளில் எப்போதும் அப்பி கிடக்கும் கூட்டத்தை காணும்போது, பேசாமல் நாமும் இப்படி ஒரு டாப் அப் கடை வைத்தாலென்ன என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.


அப்போது பின்னால் படிக்கட்டில் இறங்கி வந்தவர் ‘கொஞ்சம் வழி..’ என்றுச் சொல்ல, பதறி விலகி நின்று, கடந்து சென்றவரின் முகம் பார்த்தேன். இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. நொடிப்பொழுதில் அவர் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி, சிறிது நாணத்துடன் வேகமாக கடந்து சென்றுவிட்டார். தெரிந்தவர்தான். அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரும் அவர்தான்.


வேகமாக கடந்து செல்ல அவசியமில்லாத தருணங்களில் கூட, சில காலமாக அவர் என்னைக் கண்டால் அப்படித்தான் நடந்து கொள்கிறார். இத்தனைக்கும் முன்பெல்லாம் இருவரும் எங்கே சந்தித்தாலும் சில நிமிடங்களாவது நின்று பேசிக்கொண்டு இருக்காமல் கடந்து சென்றதில்லை. இந்த மாற்றமெல்லாம் சில ஆண்டுகளாகத்தான்.


ஆனால் ஏன்?


இந்தக் கேள்விக்கு விடையளிக்க கொசுவர்த்தியை சுழலவிட்டு உங்களை ஊட்டி வரை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.


என் கம்பெனியின் வருடாந்திர ஆய்வு கூட்டத்திற்காக எங்களை ஊட்டிக்கு அழைத்திருந்தார்கள். ஷேர் மார்க்கெட்டின் பொற்காலம் அது. ஆய்வு கூட்டங்கள் படோபமாக பல வித கொண்டாட்டங்களுடன் ஊட்டி, கொச்சி போன்ற இடங்களில் ரிஸார்ட்களில் நடக்கும். இன்றைய நிலைமையில் CEO-க்கள் அவர்களாகவே ஃபர்பார்மன்ஸ் ஷீட்டை எடுத்துக்கொண்டு, அந்தந்த கிளைகளுக்கு நேரில் வந்து ஆய்வு கூட்டம் நடத்தி, டார்கெட் கொடுத்துவிட்டு, கார் ஏறி அடுத்த கிளைக்க்கு பறந்துவிடுகிறார்கள். நிலைமை அப்படி ஆகிவிட்டது.


ஊட்டியின் பிரபலமான ஸ்டெர்லிங் ரிஸார்ட்டில் நடந்து கொண்டிருந்த ஆய்வு கூட்டத்தின் இடைவெளியில், அந்த ரிஸார்ட்டை சகாக்களுடன் சுற்றிப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் ஏதாவது ‘க்ளிக்’ செய்து கொண்டேயிருப்பது என் ஹாபி. ரிஸார்ட்டின் முன்புறமுள்ள பூந்தோட்டம், பக்கவாட்டிலுள்ள மலைச்சரிவு எல்லாம் எடுத்து முடித்து, உள்ளே கலைநயமான பொருட்களின் காட்சியகம் உள்ள இடத்தில் வலம் வந்து கொண்டிருந்தேன். அதையொட்டிதான் ரெஸ்டாரண்ட் இருந்தது.


ஏதேச்சையாக கவனித்தபோது, ரெஸ்டாரண்டின் முன்புற மேசையில் எனக்கு நன்கு பழக்கமான மணிமாறன் இருந்தார். தினமும் என் அலுவலகம் வந்துசெல்லக்கூடிய வாடிக்கையாளர். குடும்ப சகிதமாக டூர் வந்திருப்பார் போலுள்ளது - அவருடன் அவர் மனைவியும் இருந்தார். அவர்களுடன் மற்றும் சிலர் குடும்பமாக அமர்ந்து மேசையை நிறைத்திருந்தனர். தொந்தரவு செய்ய வேண்டாமே என்று ‘ஹலோ, மணி சார்’ என்று அழைத்து கையசைத்து விட்டு நகர்ந்துவிட்டேன்.


கூட்டம் முடிந்து, ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த நாளே அடித்து பிடித்து எல்லோரும் ஊர் போய் சேர்ந்தோம்.


தினமும் சரியாக டீ டைமில் அலுவலகம் வந்து, ஓஸி டீ, போண்டாவின் தரத்தை திட்டிக்கொண்டே சாப்பிட்டுச் செல்லும் மணிமாறனை அடுத்த சில நாட்களாக ஆளையே காணவில்லை. எனக்கு அவரில்லாமல் போராக இருந்தது. எதையாவது வாய் வலிக்க விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். அவர் சீரியஸாக பேசுவது நமக்கு சிரிப்பாக இருக்கும். போன் செய்தாலும் சரியாக பதில் இல்லை. நான் அவரை அழைப்பதையே அடுத்த சில நாட்களில் மறந்து போனேன்.


நாலைந்து நாள் கழித்து அவராகவே டீ டைமில் ஆஜரானார். ஆனால் பழைய கலகலப்பு இல்லை. நானாக ஆரம்பித்தேன்.


“என்ன சார் ஊட்டி டூரெல்லாம் ஜோர் தானே? வெயில்தான் கொஞ்சம் ஜாஸ்தியில்ல?”


“ஆமாமா. சரி சரி, இப்ப அதப்பத்தி என்ன. விடு”. ஏனோ, மனுசன் பிடி கொடுத்தே பேசவில்லை.


இப்படியாக இரண்டொரு நாள் போனது. மூன்றாவது நாளில் அவராக ஊட்டியை பற்றி ஆரம்பித்தார்.


“சிவா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லச் சொன்னார், சார்”


குரல் வழக்கத்தை விட கனிவாக இருந்தது.


”எந்த சிவா, சார்?”


”அதாம்பா, லாம்ப்ரட்டா ஸ்கூட்டர்ல வருவாரே.. சந்தை பேட்ட புதூர் சிவா”


“ஓ! அவரா... என்ன சொல்ல சொன்னார் சார்”


“ப்ச்.. இதான வேண்டாங்கறது. அந்த ஊட்டி மேட்டர் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணான்னார். முக்கியமா ரகோத்தமன் கிட்ட”.


ரகோத்தமன் இங்கே பேசப்படும் சிவாவின் பார்ட்னர். எனக்கு நல்ல பழக்கமானவர்.


“என்ன ஊட்டி மேட்டர்? என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியலையே”


“ப்ச்.. மறுபடியும் பாரேன்... அதான் அங்க ஊட்டியில எங்கள பார்த்துட்டியே! அதைத்தான் சொல்ல வேண்டாம்”


”சரி, சொல்லலை. ஆனால் டூர் வந்ததெல்லாம் பெரிய விஷயமா சார். இதில் மறைக்க என்ன இருக்குன்னு தெரியலை” என்றேன்.


“என்னாபா இப்படி சொல்ற, நீ பாட்டுக்கு எங்கள ஆளுக்கொரு ‘மேட்டரோட’ ஊட்டில பார்த்தேன்னு சொல்லிட்டியின்னா, வீட்டில் என்னாவறது?. சுத்தி சுத்தி வந்து போட்டோல்லாம் வேற எடுத்த. அதான் சிவா பயப்படுறான். போட்டோ இருந்த அழிச்சிட சொல்லி சொல்ல சொன்னான்”


ஓஹ்! ஓஹ்! ஓஹ்! மேட்டர் அப்படி வருதா!


நான் அன்று பார்த்தது இந்த மணிமாறனை மட்டும்தான். அதுவும் அவருடன் இருந்தவரை அவருடைய மனைவி என்றுதான் நினைத்துக்கொண்டேன். அவர் முகத்தைக்கூட சரியாக பார்க்கவில்லை. ஆனால் இவரை விட இளமையாக இருந்த மாதிரி ஒரு பூசினாற் போன்ற ஞாபகம் மட்டுமே உண்டு. ஸோ அண்ட் ஸோ... இவர்களெல்லாம் ஆளுக்கொரு ஜோடியை ஏற்பாடு செய்துகொண்டு ஊட்டியை உல்லாசபுரி ஆக்கியிருக்கிறார்கள். அதைத்தான் நான் பார்த்துவிட்டேன் என்று இப்போது பயப்படுகிறார்கள். இப்போது விஷயம் தெளிவாக புரிந்துவிட்டது.


இவர்களின் குடும்ப விவரங்கள் எனக்கு ஓரளவு தெரியும். இவர்கள் இருவருக்கும் வயது சுமார் 45 இருக்கும். தோளை எட்டிப் பிடித்து விட்ட பிள்ளைகள் உண்டு. அந்த சிவாவிற்கு சிங்கப்பூரில் படிப்பை முடித்துவிட்டு வந்த கல்யாண வயது பெண் பிள்ளையே உண்டு. சபே.புதூரில் நில புலன்களுடன் வசதியாக வாழ்பவர். என் மாமன்களின் சம வயது தோழர் என்று பேச்சிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறேன். எங்கேயாவது எதிர்பட்டால் சந்தை நிலவரம் பற்றி பேசிக்கொள்வோம். அந்த அளவில் சொல்லப் போனால் ஒரு சாதாரண உறவுதான் எங்களிடையே நிலவியது.


பேச்சை தொடர்ந்தேன்.


“என்னது ‘மேட்டரா’?! நான் அது உங்க வைஃப்ன்னு தான நினைச்சிட்டிருந்தேன். முகம் கூட சரியாக பாக்கலை. சிவா சாரையெல்லாம் நான் பார்க்கவேயில்லையே... அன்னைக்கு அவரும் உங்க கூட தான் இருந்தாரா?!”


“அட, என்னாபா.. அன்னைக்கு நீ எங்களை பார்த்துட்டன்னு சிவா ரொம்ப பயந்துட்டு இருக்கான். நீ என்னடான்னா பாக்கவேயில்லைன்னு சொல்ற.. அப்ப நாங்களாத்தான் உளறிட்டமா..” என்றார் வெட்கச் சிரிப்புடன்.


“அதான் இப்ப தெரிஞ்சிப் போச்சில்ல..ஹஹ்ஹஹ்ஹா!”


“சரி, போவுது. இத உன்னோட வெச்சிக்க. புதூர்ல யார்கிட்டயும் பேச்சு வாக்கில கூட சொல்லிடாத”


ஏன் சார், எனக்கு வேற வேலையில்லையா? இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு நான் போயி பேசிட்டு வேற இருக்கனா?”.


அத்துடன் இது சம்மந்தமான சம்பாஷணைகள் முடிவுக்கு வந்தன.


மணிமாறன் - அதற்கு பிறகு எப்போதும் போல் சகஜமாகி விட்டார். ஆனால் சிவா... மனுசன் எங்கே பார்த்தாலும் நாணி கோணி சிரித்துக்கொண்டே அகன்று விடுகிறார். அது, அவரை விட எனக்கு சங்கடமாக இருக்கிறது.


மேலும்...

முதுமை

Posted: Sunday, June 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
சில முதியவர்களின் அந்திம கால வாழ்க்கை நிலையை காணும் போது நம் இறுதி காலம் எந்த விதமான கஷ்ட காலத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்று அச்சமாக உள்ளது. எங்கள் தெருவின் இறுதியில் ஒரு ஆயாம்மா தன்னந்தனியாக வசிக்கிறார். வீடு என்ற பெயரில் இருக்கும் ஒரே ஒரு அறையில்தான் அவர் வாசம். துணைக்கு யாருமில்லை. இவருக்கும் 70+ வயது. முதுமையில் பீடிக்கும் நோய்களை எதிர்கொண்டு, தனக்கான உணவுகளை தானே சமைத்து அவர் வாழும் கோலத்தை பார்த்தபடியே தினமும் கடந்து செல்வது முதுமை காலத்தைப் பற்றி நினைவூட்டியபடியே இருக்கிறது.

இவர் ஒரு காலத்தில் அதே இடத்தில் பண்ணையம் பார்த்து பெரிய வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதுதான் நெஞ்சை தழுவும் வருத்தத்துக்கு காரணம். இவரின் ஒரு மகள் தூக்கு மாட்டி இறந்துவிட்டார். இரண்டு மகன்களில் ஒருவர் விபத்திலும், இன்னொருவர் பெருநோயிலும் இறந்து போயினர். ஒரு பேத்தி மட்டும் தன் சொந்த வாழ்க்கையை பார்த்துக்கொண்டு, ஒரே ஊரில் ஆனால் கண்டு கொள்ளாமல் வாழ்கிறார். இத்தனையும் ஒரு பத்தாண்டுகளில் நடந்து முடிந்துவிட்டன. அவர்கள் எல்லோருக்கும் முன்னால் போயிருக்க வேண்டிய இவர், இன்று தனிமையில் மரணத்தை எதிர்நோக்கி தினமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் இப்படி பல விசித்திரமான ஜீவிதங்களுக்கு எல்லாம் சாட்சியமாக வாழ வேண்டியுள்ளது.

இதேபோல - 3 சின்ன பெண் குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் 10*15 சதுர பரப்பிலான குடிசையில் வாழ்வதை தினமும் பார்க்கிறேன். மலஜலம், குளியல் எல்லாமே வீட்டுக்கு(!) வெளியேதான் அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாகவே இருப்பதையும் கவனிக்கிறேன். வாழ்க்கையின் உயரம் எவ்வளவு மேலே கீழே என்ற போதிலும், ஒவ்வொரு நாளும் வாழ்ந்து தானே தீர வேண்டும். அவரவர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கான விஷயங்களை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியதுதான் இதில் பொதிந்துள்ள சூட்சமம்.
மேலும்...

கிடா விருந்து

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
விருந்து என்றதும் இன்னொரு விஷயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. யாராவது அசைவத்தை விட்டு விலக்கி முழு சைவனாக மாற விரும்பினால், தொடர்ந்து சில கிடாவெட்டுக்களில் அடுத்தடுத்து கலந்து கொண்டால் போதுமென தோன்றுகிறது. கறி வெந்தால் போதுமென்று ஒரு சமையல் செய்து, குழம்பு என்ற பெயரில் ஒரு திரவத்தை ஊற்றி வெறுக்கடிக்கிறார்கள். அதிலும், சிலர் போடும் பிரியாணிக்கு அந்தக் கால கதம்ப சோறு தேவலாம் என்று இருக்கிறது. இதில் குடல் கறியை, விருந்தினர்களின் கண்ணில் காட்டாமல் தனக்கென மறைத்து வைத்துக்கொண்டு ஆடும் அழுகுணி அழிச்சாட்டியம் வேறு!

கிடாவிருந்து நடைபெறும் இடமான ஏழு காத தூரத்தில், அனாந்தர காட்டுக்குள் அமைந்திருக்கும் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு வெயிலில் வறுபட்டு, படாத பாடு பட்டுச் சென்றால் அலுங்காமல் குலுங்காமல் ஒரே சாப்பாட்டில் அரை சைவனாக்கி திருப்பி அனுப்புகின்றனர். ஜூவகாருண்ய நோக்கில் அதே ஜீவன்களை பலி கொடுத்துச் செய்யப்படும் சமூக சேவை!
மேலும்...

கல்யாண சமையல் சாதம்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
எத்தனையோ விஷேசங்களும், அதன் விருந்து வகையறாக்களும் நம்மை கடந்துச் செல்கின்றன. ஆனால், சிலது மட்டும் நம் நினைவில் தங்கி விடுகின்றன. அப்படி இரு கல்யாண விருந்துகளை சமீபத்தில் உண்டேன். முதலில் உண்டது ஒரு ரெட்டியார் வீட்டு கல்யாணத்தில். மிடில் கிளாஸ்தான் அந்த குடும்பம். ஆனால் விருந்தில் ராஜ உபச்சாரமாக அத்தனை வகை தொகையான வெரைட்டி பதார்த்தங்கள். மூன்று வேளைகளும் வித விதமான கலவை சுவையில் நாக்கு திண்டாடிப் போனது. சமைலுக்கு ஆள் ஸ்ரீரங்கத்தில் இருந்து அழைத்து வந்து செய்திருக்கிறார்கள் என்று பின்னர் அறிந்தேன். மேலும், அவர்கள் சாதி கல்யாண விருந்துகள் எல்லாமே இப்படித்தான் பல்சுவையுடன் பலவித பதார்த்த ஜமாவாக இருக்குமாம்.

போலவே, அடுத்து ஒரு செட்டியார் வீட்டு கல்யாண விருந்திலும் வெரைட்டியான உணவு வகைகள் கண்டு அசந்து போனேன்.

இத்தனை நாளும் கல்யாண விருந்து என்ற பெயரில் நாமக்கல் சமூகக் கவுண்டர்கள் எப்படிப்பட்ட ஒரு சாதா சோதா விருந்து கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து கடும் எரிச்சல் வந்தது. அட, கல்யாண சமையல் சாதம் என்பதற்கு அர்த்தமே வேறு என்பதையே இப்போதுதான் தெரிந்து கொண்டுள்ளேன் போலுள்ளது. என்ன ஒரு ஏமாற்று வேலை :(

மேலும்...

என்னை தெரியலையா?

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒரு அலுவலாக கடைவீதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வாத்சல்யமாக ஒரு கை கண்ணை பொத்தியது. ‘அட, இன்னும் என்னுடன் கண்ணை பொத்தி விளையாடவும் ஆளுண்டா’ என்று எண்ணியபடி கையை விலக்கிப் பார்த்தால் தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் பெயர் சட்டென ஞாபகம் வரவில்லை. ‘தெரியலைங்களே..’ என்ற அசடு வழிதலுக்குப் பிறகு அவன் வெங்கட்ராமன் - சௌத் ஸ்கூல் கிளாஸ்மேட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘அட பயலே, இப்போது ஞாபகம் வந்துவிட்டது’ என்று பிறகு ஷேமநலன்கலை விசாரித்து பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அப்போது என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி - ‘வெங்கட்ராமன் என்று நினைத்துதானே அன்று ஒருநாள் புரோட்டா கடையில் ஒருவனிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்... அப்போது அவன் யாராக இருக்கும்?!’.

இது அடிக்கடி எனக்கு நிகழும் ஒரு விஷயமாக இருக்கிறது. எங்கேயாவது யாராவது எதிர்பட்டு, என் பெயரை சரியாக குறிப்பிட்டு என்னுடன் உரையாடுகின்றனர். ஆனால், அவர்களைப் பற்றிய ஞாபகங்களை நான் முற்றிலுமாக இழந்து விட்டிருக்கிறேன். அல்லது மசமசவென்று ஒரு தெளிவில்லாத பிம்பங்களாய் சில விஷயங்கள் நிழலாடுகின்றன. பெயர் என்ன யோசித்தும் நினைவுக்கு வருவதில்லை. ஆரம்பத்தில் நானும் தெரிந்த மாதிரி நடித்து ஹிஹி என்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இப்பவெல்லாம் நாகரிகமாக ‘மன்னிக்கவும், மறந்துவிட்டேன்’ என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

நேற்றும் அப்படித்தான் - ஒரு அலுமினிய டெகரேசன் வேலையாக ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். அவர் என் பக்கத்து தெருவில் குடியிருப்பவர் என்பதால் அதை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே என்று ‘நான் உங்க வீட்டு பக்கத்துல தாங்க குடியிருக்கேன்..’ என்று ஆரம்பித்து ஆரம்பிக்கும் முன்னாலேயே அவர் புன்னகைத்தவாறு, என் வாழ்க்கை வரலாற்றில் ரகசிய பக்கங்களை தவிர அத்தனையையும் சொல்ல ஆரம்பித்து விட்டார் - ஒரு கைகலப்பில் நானும் என் மாமாவும் இறங்கி பின்னர் கொஞ்சிக் கொண்ட குடும்ப ரகசியம் முதற்கொண்டு!

சமூகத்தை நாம் உதாசீணப்படுத்தி நம் போக்கில் சென்றாலும், மனிதர்கள் நம்மை உற்று கவனித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
மேலும்...

அவசியம் வாங்கோ!

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
எவ்வித பத்தியமும் அவசியமின்றி மருந்து உட்கொள்வதன் மூலம் மட்டுமே, உடல் எடையை குறைத்து விடலாம் என்பது இப்போது புதிதாக பரவி வரக்கூடிய வியாபாரம். அப்படிப்பட்ட கடை ஒன்றின் திறப்பு விழாவுக்கு இன்று காலை சென்றிருந்தேன். ஸ்வீட், காரம், காபி விருந்துபச்சாரங்கள் முடிந்து விடை பெறும் போது, ‘அண்ணா, நீங்க அவசியம் மீண்டும் வரணும்’ என்று அந்தக் கடைக்கார பெண்மணி ஒருமுறைக்கு இருமுறை வலியுறுத்திச் சொன்னதன் உள்நோக்கம் கோபத்தைத் தூண்ட, உடனடியாக வெளிநடப்பு செய்துவிட்டேன் — மேலண்ணத்தில் ஒட்டியிருந்த மிக்ஸரை கடவாய்க்கு நகர்த்தியபடி!
மேலும்...

அபிமானத்தை அரசியல்படுத்தாதீர்கள் (தொடர்ச்சி...)

Posted: Tuesday, May 31, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
(தொடர்கிறேன் ...)

இளையராஜாவை பிடிக்காதவர்களும் தமிழகத்தில் உண்டா? இசையை பொறுத்தவரை அவருடைய அருமை பெருமைகளை விளக்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலையில் செவியுள்ளோர் இல்லை. அவரை கேட்டு லயிக்காத ஆளுமில்லை; நாளுமில்லை. அவரும்கூட இதுவரை எந்த விதமான தமிழகப் பிரச்னையிலும் கருத்துச் சொன்னதில்லை. ஒகேனக்கல் போராட்டத்தில் தமிழ் திரை உலகமே குவிந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திய மேடையில் கூட அவர் பாதம் பதியவில்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஈழத் தமிழர்கள் பிரச்னையிலும் கூட ஒரு கருத்தை கூட உதிர்த்ததில்லை. ஒட்டு மொத்தமாக எந்த வித மக்கள் பிரச்னையிலும் ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.

நாளை இளையராஜா சாகக் கிடக்கிறார் என்றால், நிச்சயமாக அவருக்காக பிரார்த்தித்துக் கொள்ளும் உள்ளங்கள் இன்று ரஜினிக்கு இருக்கும் அளவுக்கு இருக்கும். உடனே, “ஆ! அவர் என்ன தமிழர்களுக்கு செய்து கிழித்து விட்டார்? எங்களோடு ஒரு முறையாவது ஈழ/தமிழக தமிழர்களுக்காக தெருவில் இறங்கி போராடியிருப்பாரா? நிவாரண நிதி கொடுத்திருப்பாரா? அவருக்காக போய் வேண்டிக் கொள்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..” என்று ஏதாவது இயக்கத்தார் கேட்டால் எவ்வளவு விசித்திரமாக இருக்கும்?

இளையராஜாவை கொண்டாடவும், அவரின் நலன் விரும்பவும் அரசியல் காரணம் எதற்கு? கேட்கும் பொழுதெல்லாம் நரம்பெங்கும் வியாபித்து, உணர்வுகளை மீட்டி, நுண்ணுணர்வான இன்பத்தை நாளும் அளித்து மகிழ்விக்கும் ஒரு தன்னிகரற்ற இசைக்கலைஞனாக அவரைக் கொண்டாடினால் போதாதா? அதுவும்கூட பணத்திற்காக இசைக்கப்பட்ட பாடல்கள் தானே? பணத்தை வைத்து கலையை மதிப்பிட முடியாது என்பதை இளையராஜாவை முன்வைத்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் பிறகு எதைக்கொண்டும் விளக்க முடியாது.

அதுபோலதுதான் ரஜினி தமிழர்களிடையே சம்பாதித்து வைத்திருக்கும் நேசமும், அபிமானமும். ஒருவகையில் அபிமானம் என்பதும்கூட அநாவசியம்தான். அவருக்காக பிரார்த்திக்க மனிதாபிமானம் ஒன்று மட்டுமே கூட போதும். அதுவும் இல்லையென்றால், இப்படி வார்த்தை ரவுடியிஸம் செய்யாமல் சும்மாவாவது இருக்கலாம்.

‘பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்றான் பாரதி. ரஜினி யாருக்கும் பகைவரும் இல்லை. சில காலமாக அவர் அவராக இருக்க முயல்வதாக தெரிகிறது. அவரை அப்படியே விட்டு விடுவதுதான் விவேகம். மீண்டும் பொதுதளத்தில் செயல்பட்டால் மீண்டும் விமர்சிக்கலாம். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பவரிடம் ஏன்?

நேற்று ஏதோ தொலைக்காட்சியில் ‘தர்மத்தின் தலைவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் டிவி பார்ப்பதே அரிது என்பது ஒருபுறம் இருக்க, அதிலும் பகல் நேரத்தில் சினிமா பார்ப்பது என்பதெல்லாம் என் வாழ்வில் நடவாத காரியம். ஆனால் அந்தப் படத்தில் ரஜினியின் பேராசிரியர் கேரக்டர் என்னை கட்டிப்போட்டது. என்னமா பண்ணியிருக்கார் மனுசன் என்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் சிறிதும் அலுக்கவில்லை. ‘அட பாவமே, இவர் நடிப்பை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் இதே வேளையில் தானே, இவருக்கு டயாலிஸிஸும் நடந்து கொண்டிருக்கும்’ என்று அப்போது இயல்பாக எனக்குள் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. அப்படித்தானே பலருக்கும்?


-0-

ரஜினியின் எளிமை போன்ற தனிப்பட்ட பண்பு நலன்கள் பற்றியெல்லாம் எனக்கு பெரிதாக கருத்து இல்லை. அது உண்மை என்றால் நல்ல விஷயம். இல்லையென்றாலும் அதில் பெரிதாக புகார் இல்லை. அவர் பணம்; அவர் தேர்வு. நாம் விவாதிக்க வேண்டியதெல்லாம் அவரின் பொதுதளத்திலான செயல்பாடுகள் மட்டும்தான்.

ரஜினி பெங்களூர் சென்று தன் பழைய ஏழை நண்பர்களை இன்றும் சந்திக்கிறார் என்றால், அவரும் அங்கே இருந்து வந்தவர் தானே? அப்புறம் அங்கே சென்றுதான் தன் பழைய நண்பர்களை சந்திக்க முடியும். இதை கமலை முன்வைத்து ஒப்பிட்டு பார்த்தால் நன்கு புரியும்.

கமல் பிறக்கும் போதே நிலச்சுவான்தார் மகன். பழக்க வழக்கங்களும் அதற்கேற்ற அந்தஸ்திலேயேதான் இருந்தன. அதைவிட்டால் நண்பர்கள் எல்லாம் சினிமா சம்மந்தப்பட்டவர்கள் தாம். அதனால் கமல் தன் நண்பர்களுடன் உறவாட வேண்டும் என்றால் சினிமாவுக்கு உள்ளேயோ, அல்லது தன் சரி அந்தஸ்திலேயோ தான் செய்து கொள்ள வேண்டும். பார்த்தால், கமல் கர்வத்துடன் நடந்து கொள்வது போல் தோற்றம் தரும்.

அதுவே ரஜினி, தன் அந்தஸ்திலிருந்து வெகு கீழேயுள்ள பழைய சிநேகிதர்களைத்தான் பால்ய நட்புக்காக நாடிச் சென்றாக வேண்டும். அது அவர் உருவாகி வந்த சூழல். ஒருவேளை இதைத்தான் எளிமை என்கிறார்களோ தெரியவில்லை.

இரண்டுமே அவரவர் சூழ்நிலைகளை பொறுத்து தன்னால் அமைந்த விஷயங்கள். மற்றவையெல்லாம் ஆளுக்கு தகுந்த மாதிரி உலகம் கொடுக்கும் பட்டங்கள்.



கருத்து வேறுபாடு பற்றி பொருட்டில்லை. எல்லோரின் அபிப்ராயங்களும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது. ஆனால் பாஸ்கர் எந்த இடத்தில் என் கருத்தில் இருந்து மாறுபடுகிறான் என்பதை அறிந்து கொள்ள ஆவல். நேரம் இருக்கும் போது கண்டிபபாக எழுதவும்.

எப்போதும் கருத்துக்களை எழுத்தில் பதிவு செய்து வைப்பது மிகவும் முக்கியம். யாருக்காவது அது ஒரு சின்ன வெளிச்சத்தை, அல்லது குறைந்தபட்சம் சின்ன தகவலைத் தருவதாக அமையலாம்.


-0-

அதோடு - வழுக்கை மண்டையை காட்டிக்கொண்டு, நரைத்த தலையுடன் மீடியா முன் உலா வரும் தைரியம் எந்த நடிகருக்கு உண்டு? எம்.ஜி.ஆருக்கே இருந்ததில்லை. ரஜினியின் எளிமை உண்மை என்றால் நல்ல விஷயம் என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் நண்பர்களை சந்திப்பதை மட்டும் எடுத்துக்காட்டி ‘ஆஹா பாரீர் எளிமை’ என்று சிலர் பேசுவதில்தான் நான் மாறுபடுகிறேன்.

ஒரு உதாரணத்துக்கு pala oorkalil வாழ்ந்தாலும் பள்ளித்தோழர்களை சந்தித்து கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க விரும்பினால் நாமக்கல் வந்து தரையில் காலை பதித்துதானே தீர வேண்டும்? ;-) ரஜினிக்கும் அப்படித்தான். ரஜினி போன்று தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்களை சுமந்து திரியும் பிரபலங்களுக்கும், எப்போதும் மீடியாவின் அதிகபட்ச வெளிச்சத்தில் இருந்துவரும் வி.ஐ.பி.க்களுக்கும் அதிலிருந்து விலகி ஓடி, தன்னை பழைய சிவாஜிராவ்வாக மட்டும் எண்ணி பேசி நண்பர்களை சந்திப்பது மட்டும்தான் வடிகாலாக இருக்க முடியும். It's their need. அதை அவர்கள் அவர்களுக்காகச் செய்கிறார்கள் என்பதால்தான் சொல்கிறேன், அதை என்னால் எளிமை கேட்டகரியில் சேர்க்க முடியாது என்று. பட்டியலில் உள்ள மற்ற பண்புகள் உண்மை எனில் எனக்கும் ஏற்புடையவையே.
மேலும்...