உழவரின் உணவகம்

Posted: Tuesday, October 27, 2009 | Posted by no-nononsense | Labels:
நாமக்கல்லை பொருத்தவரை வெளியே சென்று ஏதாவது சிற்றுண்டி/ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வரலாம் என்றால் அன்று முதல் இன்று வரை அதே பானி பூரி, சில்லி சிக்கன், பீப்ஸ் கடைகள் தான் இருக்கின்றன. அதையும் விட்டால் பேக்கரிகளில் பப்ஸ் கிடைக்கும். இவை எதிலுமே மனிதன் உண்ணத்தக்க எண்ணெய்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் ஏதாவது சைவ ஹோட்டலுக்கு சென்று தயிர் வடையும், குழி பனியாரமும் சாப்பிடுவதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் குறையை சில நாட்களாக "உழவர் உணவகங்கள்" தான் போக்குகின்றன. உழவர் சந்தை தெரியும். அதென்ன உழவர் உணவகங்கள் என்று கேட்கும் NRN' கள் இங்கே, இங்கே க்ளிக் செய்யலாம்.

அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதைபோல சோளம், தினை, கம்பு மற்றும் பயிறு வகைகளை சார்ந்த முற்றிலும் கிராமிய உணவுகள் மட்டுமே இக்கடைகளில் விற்கப்படுகின்றன. மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் அள்ளுகிறது. 5 மணி முதல் 7 மணிக்குள் எல்லாம் விற்று தீர்ந்து விடுகிறது. உளுந்த கஞ்சியும், சூடான சோள பனியாரமும், கிழங்கு பக்கோடாவும் என்னுடைய ஃபேவரைட். நாமக்கல்லின் ஹாட் ஸ்பாட் கொஞ்ச நாட்களாக இதுதான் என்றால் மிகையாகாது.

சில புகைப்படங்களை இதனுடன் இணைத்துள்ளேன். பட்டியலிலுள்ள எல்லாம் கிடைப்பதில்லை என்றபோதிலும் கிடைப்பனவற்றில் பழுதில்லை. அடுத்தமுறை ஊருக்கு வருபவர்கள் எல்லோருக்கும் என் செலவில் அங்கே ட்ரீட் உண்டு.

*
Reply to one of my friends comment:

இல்லை, இது காண்ட்ராக்ட் விடப்படுவதில்லை. உழவர் அடையாள அட்டை வைத்திருக்கும் உழவர்கள் மட்டும் நாளொன்றுக்கு ரூ.20 கட்டணம் செலுத்திவிட்டு கடை போட்டுக்கொள்ளலாம். வேறு வெளியாட்களுக்கு அனுமதியில்லை. இவற்றை கண்காணிக்க ஒவ்வொரு உழவர் சந்தையிலும் அலுவலகங்கள் இருக்கின்றன.

எனினும், அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோருமே உழவரா என்றால் நிச்சயம் கிடையாது. வியாபாரிகளும் கலந்துதான் இருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.

இந்த உணவகங்களில் ஆரம்பத்தில் இப்போது இருப்பதை விட இன்னும் நிறைய கடைகளும், வித விதமான பதார்த்தங்களும் இருந்தன. இப்போது வாடிக்கையாளர் அதிகம் விரும்பும் பலகாரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. போகப் போகத்தான் இதன் நிலைத்தன்மை தெரிய வரும்.

------------

நமது முன்னோர்களின் உணவில் இடம்பெற்றிருந்த கம்பு, சோளம், ராகி வகையறா உணவெல்லாம் இப்ப எங்க கிடைக்குது சொல்லு......? nowhere! சிறு வயதில் என் பாட்டி எனக்கு கம்பு/சோள சோறும், அதற்குத் தொட்டுக்கொள்ள புலச்ச கீரை கடைசலும் சமைத்து பரிமாறியது ஞாபகம் உள்ளது. பிறகு இப்போது சில பெரிய இடத்து திருமணங்களின் பஃபே விருந்துகளில் கம்பஞ்சோறு, சோள தோசை சாப்பிட்டிருக்கிறேன். என் அனுபவம் அவ்வளவுதான்.

0 comments:

Post a Comment