விடைத்தாள்

Posted: Tuesday, September 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
சங்கிலி தொடர் அஞ்சலாக வந்த இந்த மடலை இங்கே பகிர்ந்து கொள்ள தோன்றியது. பரிட்சையில் தெரியாத கேள்விகளுக்கு கதை விடுவது ஒன்றும் புதிதல்ல. என்றாலும் இம்மாணவனின் கற்பனை வளம் !!!



Click the images to view large size





















மேலும்...

போருக்குப் பின்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது ஈழம் சார்ந்த செய்திகளை, குறிப்பாக யாழ்குடா நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதில் எனக்கு ஒரு தனி ஆர்வம். போர் முடிந்த கட்டுப்பாடுகளற்ற ஒரு தளை தளர்ந்த சூழலில் யாழ்பாணத்தின் புதிய கலாச்சார சூழலை அம்மக்கள் எங்ஙனம் எதிர்கொள்கிறார்கள் என்பனவற்றை நிதானித்து வாசித்து வருகிறேன்.

மக்கள் இந்தியாவின் தாக்கம் மிகுந்த ஒரு நுகர்வு கலாச்சரத்தில் தம் இளம் சமூகத்தினர் திளைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதை உணர முடிகிறது. கலாச்சார சீரழிவு அபாய அலறல்கள் அணு தினமும் ஏதாவது பத்திரிக்கைகளில் கட்டுரைகளாக வெளிவந்தவாறு உள்ளன. இவை இனி தவிர்க்க முடியாதவை என்பதை முன்தலைமுறையினர் உணர வெகுகாலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அதுவரை புலம்பலும் விசும்பலும் விடாமல் கேட்கும்.

இது சம்மந்தமாக இரு கட்டுரைகள் படிக்க கிடைத்தன:

http://www.jaffnavoice.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87/
http://www.jaffnavoice.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95/
மேலும்...

தீண்டாமை அரசியல்

Posted: Sunday, September 26, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
http://tamil.allnews.in/news/world/--/180255.html

//தீண்டாமை என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றச்செயல் //

அதாவது உனக்கு உன் மேல்சாதிக்காரன் செய்வதுதான் தீண்டாமை. நீ உன் கீழ்சாதிக்காரனுக்கு செய்வது இந்த கணக்கில் வராது. இது பிராமணாளில் தொடங்கி அடிதட்டு அருந்ததியரில் முடியும். இதற்கு எந்த சாதிக்காரனும் விதிவிலக்கல்ல. பகுத்தறிவையும் பொதுவுடமையையும் தனக்கான வாழ்க்கை பாதையாக தேர்ந்தெடுத்தவர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. வழக்கம்போலவே அவர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கான முக்கியத்துவமும் சமூகத்தில் குறைவே. விளைவு - காலம் மாறினாலும் இதுபோன்ற காட்சிகள் மாறுவதில்லை. தனக்கான மனசமாதானத்தை கடவுளிலும் மதத்திலும் சாதிமுறை சடங்குகளிலும் தேடும் வரை மாறவும் மாறாது.
மேலும்...

விட்டில் பூச்சி வாழ்க்கை

Posted: Friday, September 24, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இன்றைய பேருந்து பயணத்தில் பயணிகளின் களைப்பை போக்கவேண்டி தில்லாலங்கடி படம் போட்டிருந்தார்கள். வழக்கமான மசாலா படம்தான் போல என்று ஏனோ தானோவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சென்டிமெண்ட் காட்சி: 

அது - கணவன், மனைவி மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை கொண்ட ஒரு அழகான குடும்பம். குழந்தையின் மீது மிகுந்த அன்பு செலுத்தி செல்லம் பாராட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இன்பமான வாழ்க்கைக்கு இடையூறாக அந்த குழந்தைக்கு தீராத வியாதி ஒன்று வந்து விடுகிறது. அதற்கு மருத்துவ செலவு, ஆபரேசன் என்று பெரும்பணம் தேவைப்படுகிறது. 
யார் யாரையோ கெஞ்சியும் அழுதும் எதுவும் நடக்கவில்லை. இறுதில் அவள் சிறிது சிறிதாக உடல் நலிவுற்று இறப்பதை காண சகியாமல், அவளை கொண்டுபோய் ஒரு ஆசிரமத்தில் சேர்ப்பித்து விட்டு, இவர்கள் மட்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

கணநேரத்தில் மனது கனத்து போனது. அந்த மூன்று பேர் கொண்ட மகிழ்ச்சியான குடும்பத்தில் என்னுடையதை பொருத்தி பார்த்ததுதான் காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

வாழ்வில் இந்த மாதிரி எதிர்பாராத பெரும் சோகங்கள் நிகழும்போது அதனை எப்படி எதிர்கொள்ள போகிறேன்? உலகளாவிய தத்துவங்களையெல்லாம் பக்கம் பக்கமாக படித்து, நண்பருக்கோ உறவினருக்கோ இதுபோல் நடக்கும்போதெல்லாம் அதிலிருந்து மேற்கோள் காட்டி ஆறுதல் வார்த்தைகளாக உதிர்ப்பது போல் எனக்கும் நானே சொல்லிக்கொள்ள முடியுமா? அவ்வளவு ஆழ்ந்த ஞானமும், மனோதிடமும், பரிபக்குவம் முயன்றாலும் அடைதல் சாத்தியம் தானா?

இப்படியெல்லாம் சில சிந்தனைகள் பேருந்தை விட்டு இறங்கும் வரை என்னை ஆட்கொண்டி
மேலும்...

சிற்சில குறிப்புகள் (6)

Posted: Thursday, September 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Dabangg பற்றி படிக்க ஆரம்பித்து அங்கேயிருந்து சல்மானை படிக்க போய் Hum aapke hain koun -ல் வந்து நிற்கிறேன். 1994-ல் சேலம் பிரகாஷ் தியேட்டரில் அப்படத்தை பார்த்த நினைவும், ஒரு மாத காலத்திற்கு ராம்லக்ஷ்மண் இசையில் திளைத்த ஞாபகமும் வந்து நனவிடையில் தோய வைத்து விட்டது. இப்போதே அந்த பாடல்களை கேட்டாக வேண்டும்போல் உள்ளது. இன்றைய இரவுக்கான இசை முடிவாகி விட்டது. 

*

நாம் நம்மை ஐரோப்பியர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு வருந்துவது எப்போதும் தவறு. காரணம் நாம் அவர்களை விட எல்லா அம்சங்களிலும் ஒரு நூற்றாண்டு பின்தங்கியே முன்னேறி வருகிறோம். அதனால் நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள் அடுத்த நூற்றாண்டில் ஒருவேளை வரலாம். அல்லது இன்னும் காலம் ஆகலாம். 

எல்லா சிஸ்டமும் மாறுவதற்கான அடிப்படை முதலில் மனிதனின் குறைந்த பட்ச அடிப்படை பொதுபுத்தியில் மாற்றம். அதாவது common sense-ல் மாற்றம்.  அது எவ்வளவு விரைவில் நடக்க இருக்கிறதோ அவ்வளவு விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்மாற்றங்கள் மற்ற விஷயங்களிலும் ஏற்படும்.

*

இன்று ட்விட்டரில் பரவிய கில்லாடி ஜாவா ஸ்கிரிப்ட் வைரஸ் போல கூகுள் குரூப்புக்கும் ஒரு வைரஸை எழுதப்பட்டால் நல்லது. ஆனால் ட்விட்டர் வைரஸ் கொண்டுபோய் சப்பானிய போர்ன் தளத்தில் விட்ட மாதிரி இல்லாமல் சவீதா அண்ணி மாதியான ஏதாவது கூர்மூக்கு சுரோணித தளத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மூக்கிலும் நாக்கிலும் சப்பை எமக்கு முக்காலும் ஆகாது :-)
மேலும்...

சுட முயலும் பெருமூச்சுகள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
அரசு அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வேண்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணி முடித்து விட்டு இருக்கும் அவகாசத்தில் ஏதாவது எழுதலாமே என்று இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். 
நிச்சயமாக அவர் தன் கடமை தவறி எதையும் செய்ய அல்ல. கடமையை செய்யத்தான் இந்த பணம்.  ஆனாலும் கூச்சநாச்சம் எதுவுமின்றி பல்லை இளிக்கிறார் அந்த பெரிய அதிகாரி. 

இன்று காலை என்னுடன் பேருந்தில் பயணித்த இரு அரசு அதிகாரிகளின் பேச்சு இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது. அகவிலை படி உயர்வு குறித்து பேசிக் கொண்டிருந்தனர். பேச்சில் ஆணவமென்றால் அப்படி ஒரு ஆணவம். அதையெல்லாம் விரிவாக எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வேலையில் அலட்சியம். சேவையில் ஊழல். சமூகம் குறித்த அக்கறை துளியுமில்லாத சுயநலம். இவர்களின் இந்த போக்கில் என்று வரும் மாற்றம் என்றுதான் தெரியவில்லை. 

***

கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தால்ல் நீயும் இப்படி ஒரு ‘நல்ல’ நிலையை அடைந்திருக்கலாம் என்று வழக்கமாக சில பெருமூச்சுகள் என் மேல் விடப்படுவது உண்டு. 

இந்த பெருமூச்சுகளால் தாக்கப்பட்டே என் தோளின் நிறம் கூட கொஞ்சம் மங்கி விட்டது. அவற்றை புன்னகையால் எதிர்கொண்டே அந்த மென்னகையின் பொலிவுகூட கொஞ்சம் குறைந்து விட்டது. என் முன் நான் காணும் ராஜபாட்டையையும், எனக்குள் நான் வாழ்ந்து வரும் ராஜவாழ்க்கையையும் பாவம் அவர் அறியார். படியை கொண்டு மலையை அளக்க முயல்வது இயலாத காரியம் என்பதை மழலை அறியாது. என்னை தாக்கும் பெருமூச்சுகளும் அப்படித்தான். 

கடந்த 15 ஆண்டு காலகட்டம் என்பது, எத்தனை பொன் கொடுத்தாலும் யாரிடமிருந்தும் கற்றிட முடியாத வாழ்க்கை பாடங்கள். எதெல்லாம் அந்தரம்; எதெல்லாம் நிரந்தரம் என்பதை அக புற இரு உலகங்களிலும் எனக்கு உணர்த்திய பரீட்சார்த்த பொழுதுகள். வாழ்க்கையை பற்றிய தெளிவு என் மனதில் தன் விழுதை அழுத்தமாக ஊன்றி விட்டது. அதனிடம் பெருமூச்சுகள் நொடிபொழுது சலனத்தையும் கூட ஏற்படுத்திடும் வலுவை இழந்து விட்டன. இருந்தாலும் அன்புகூர்ந்து விடப்படும் பெருமூச்சுகளை அனுமதித்து புன்னகைத்து வைக்கிறேன்.

அதெல்லாம் சரி. இதெல்லாம் இப்போது
 ஏன்?

சில நிமிடம் முன்புதான் தொலைபேசி வழியே
 மேலும் ஒரு பெருமூச்சு என்னை சுட முயற்சித்தது. :-)
மேலும்...

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (இவர் ஒரு மன்னர்) என்னும் சங்க கால புலவர் அக்கால சான்றோர் பெருமக்களைப் பற்றி எழுதிய உரை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்:
“தேவர்களுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத்தாம் மட்டும் தனியே உண்ணமாட்டார். யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார். பிறர்க்கு வரும் துன்பம் கண்டு அவர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அத்துன்பத்தை நீக்கும் வரையில் கண் துயில மாட்டார். புகழ்தரக்கூடிய செயலென்றால் அதற்குத் தம் உயிரையும் கொடுப்பார். பழி வருவதாயின் அதன்பொருட்டு உலக முழுதும் பெறும் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டார். அவர்கள் தமக்கென்று முயற்சி     செய்யும் தன்னலமற்றவர். பிறர்க்கென்றே முயற்சி மேற்கொள்வர். அத்தகையோர் இருப்பதால்தான்     இந்த     உலகம்     வாழ்ந்து கொண்டிருக்கின்றது"

புலவர்கள் எதையும் சிறிது மிகைப்படுத்திதான் கவிபுனைவார்கள். அந்த மிகையை மட்டும் குறைத்து விட்டு தேடினாலும் கூட இக்காலத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் அகப்படுவார்கள் என்று நிச்சமில்லை. நுகர்வு கலாச்சாரம் மக்களின் அடிப்படை குணாம்சத்தில் ஏற்படுத்தியுள்ள பாரிய மாற்றம் இது.

இந்த கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கடலுக்குள் கலத்தில் செல்லும்போது மாய்ந்து விட்டதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். இதுபோல் சங்ககால புலவர்களின் பட்டப்பெயர்களெல்லாம் சுவாரஸ்யமான காரண கதைகளை கொண்டிருக்கின்றன.
மேலும்...

தீர்ப்பு அரசியல்

Posted: Wednesday, September 22, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Ayodhya verdict: Bulk SMS, MMS banned: India : India Today

Ayodhya verdict: Two-day holiday for Karnataka schools

Don't reach any hasty conclusion on Ayodhya verdict: Chidambaram

Ahead of Ayodhya verdict, Gujarat appeals for peace

Ayodhya crosses its fingers before court verdict

etc.. etc..

அயோத்தியா தீர்ப்பு பற்றிய ஹைப் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு போரை எதிர்கொள்ள தயாராவது போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பத்திரிக்கை அதிபர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சில நாள்களுக்கு ஊடகங்களின் செய்திகளில் தணிக்கையை எதிர்பார்க்கலாம். எஸ்.எம்.எஸ்கள் மொத்தமாக அனுப்புவது தடை செய்யப்பட்டு விட்டது. ரயில்களில், கோவில்களில், மசூதிகளின் அருகே சோதனைகள் செய்யப்படுகின்றன. ஒரு மாநில அரசு மொத்தமாக பள்ளிகளுக்கு விடுமுறையே அறிவித்து விட்டது.

இவர்களெல்லாம் எதனை எதிர்பார்க்கிறார்கள்? ஒரு உள்நாட்டு கலவரம்? இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இந்து - முஸ்லிம் இன மோதல்? என்னுடைய கணிப்பில் தீர்ப்பு முஸ்லிகளுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்னொரு குஜராத் கலவரம்?

இந்நேரம் இந்து தீவிரவாத அமைப்புகளும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் தங்கள் மூளையை கூர்தீட்டி இளைஞர்களை தயார் செய்துகொண்டு இருப்பார்கள் - யார் யாரை முதலில் தாக்கப் போகிறார்கள் என்பது தெரியாமலே ஒரு தற்காப்பு ஆயத்தங்களுக்காக.

அல்லது இதுதான் சமயம் என்று மனதில் தனலென எரியவிட்டிருக்கும் மத வன்மத்தை செயலில் காட்ட, பழைய கணக்கை பழி தீர்த்துக்கொள்ள திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

எதுவாகிலும் சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு பதட்டம் கட்டமைக்கப்படுவதாக தோன்றுகிறது. இப்பதட்டமே அநாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாறி அதன் காரணமாக  ஒரு கலவரத்துக்கு வித்திடாதவரை நல்லது.

வரும் வெள்ளி நல்ல வெள்ளியாக கடப்பதாக என்று காந்தி தினமும் பிரார்த்தித்து வந்ததுபோல “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்று மனதிற்குள் ஒருமுறை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
மேலும்...

இரு திரைப்பட காட்சிகள்

Posted: Friday, September 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே கவனித்தேன் அதன் அசாத்திய அமைதியை. எல்லோரும் டிவி முன் அமர்ந்து கண்ணிமைக்காமல் ஆனால் கைக்குட்டையால் ஒற்றியபடி அதில் ஓடிய படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சர்தான் என்று என் வேலையை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது சில விசும்பல்கள் காதை தீண்டின. அப்படி என்ன படம் என்று நானும் சிறிது நேரம் பார்த்தேன். உஸ் அப்பப்பா! எனக்கே கண்ணில் நீர் சொட்டி விட்டது. அம்மா செண்டிமெண்டை பிழிந்து பிழிந்து காட்சிகள் அமைத்திருந்தார் டைரக்டர். நெஞ்சம் கனத்து போனது. 

ஒரு காட்சியில் அம்மா ஊரில் இறந்து விட்டது தெரியாமல் அவளுக்கு புடவை அனுப்புகிறான் வெளிநாட்டில் வேலையில் இருக்கும் அவர் மகன். அந்த புடவை சரியாக அம்மா பாடையில் கிடத்தப்படும்போது போஸ்ட்மேனால் கொண்டு வந்து தரப்படுகிறது. அதை பார்த்து குடும்பமே அழுது புலம்பி அந்த புடவையை அம்மா பிரேதத்தின் மீது சாற்றுகிறார்கள். என் வீட்டில் விசும்பல்கள் வெடித்து ஒப்பாரி சத்தமே கேட்க ஆரம்பித்து விட்டது. இதற்கும் மேல் தாங்காமல் இடத்தை காலி செய்துவிட்டு உலாத்த சென்று விட்டேன். அப்பப்பா! சென்டிமெண்ட் காட்சி எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! இப்படி ஒரு 

படம்: பாண்டி

*

நான் வழக்கமாக வேலைக்கு செல்லும் கீழக்கரை பஸ்ஸில் தினமும் ஏதாவது படம் ஓடுவது வழக்கம். பூம் டிவி போலல்லாமல் வேறு வேறு படங்களை போடுவதால் எப்போதும் அந்த பஸ் மாமூல் கிராக்கிகள் அனைவரின் விருப்பத்துக்குரியது. இன்று அதில் போடப்பட்டிருந்த படம் வேல். ஆக்சன் என்னும் பெயரில் பக்கம் பக்கமாக வசனங்களும் சவால்களுமாக காட்சிகள் சென்று கொண்டிருந்தன. எல்லாம் பார்த்த மாதிரியே இருந்தது. இதைத்தான் அப்படியே கதாநாயகனுக்கு காக்கி சட்டை மாட்டி, திரைக்கதையில் சில மேல்பூச்சு வேலைகள் செய்து களத்தை சென்னை என்று ஆக்கி சிங்கம் ஆக்கியிருந்தார் ஹரி. சரியான உல்டா மன்னனாக இருப்பார் போலும் என்று நினைத்து கொண்டேன். 
மேலும்...

இவ்வளவுதான் உலகம்

Posted: Wednesday, September 15, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
http://www.123musiq.com/SOURCE/OLD%20SONGS/Ninaivil%20Nindravai/T%20M%20S%20Solo%20Duets/Ivvalavu%20Than%20Ulagam.mp3
(Movie: Ulagam ivvavuthaan, Music by Vedha, Singers: TMS, LRE)


பொல்லாத உலகத்தில் கல்லாமல் புதுப்பாடம் கற்றேன்.....
பொய்யாக வாழ்வோரைப் புகழ்ந்தாடும் கூட்டத்தைக் கண்டேன்
சொல்லொன்று செயலொன்று இல்லாத பேர் இங்கு யாரப்பா...
சொல்லாமல் விட்டாலோ என் போன்ற முட்டாளும் ஏதப்பா......?

இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
எவ்வளவோ இருந்தாலும் 

எப்படித்தான் பார்த்தாலும் 
இவ்வளவுதான்.

*
சற்று முன் கேட்டு ரசித்த பாடல்.
மேலும்...

இளமையில் மரணம்

Posted: Thursday, September 9, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
புனரபி ஜனனம் புனரபி மரணம் - மீண்டும் மீண்டும் பிறப்பு மீண்டும் மீண்டும் இறப்பு (பஜகோவிந்ததில் ஆதிசங்கரர்). இது எல்லா நொடிகளிலும் யாராவது சிலருக்கு நடந்து கொண்டிருப்பதுதான். நமக்கு தெரிந்தவர்களுக்கு நிகழும்போது மட்டும் அதன் வலியை நிதானித்து உணர்கிறோம்.

முரளியின் ரசிகரல்லாத பலரையும்கூட அவருடைய மரணம் சோகம்கொள்ள வைத்திருப்பதை காணமுடிகிறது. காரணம் வயதுதான். 40-களில் இயற்கை எய்துவதை நம் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மரணம் குறித்து பொதுவில் நாம் போட்டு வைத்திருக்கும் மனக்கணக்குக்கு முரணான இந்த நிகழ்வைக் கண்டு துணுக்குறச் செய்கிறோம். இதுவே சாலை விபத்து போன்ற அகால மரணமாக இருந்திருந்தால்கூட அது இந்தளவுக்கு அதிர்ச்சியை தந்திருக்காது. ஆனால் முதுமைக்கு முன்பே உடல் தானாக இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளது நம்மை சற்று பீதியடையச் செய்கிறது. நம்முடைய சொந்த மரணம் குறித்த அச்சத்தை நாமும் லேசாக மனதில் உணரும் தருணங்கள் இவை. 

மரணத்தை நெருக்கத்தில் காணும் எல்லா சமயங்களிலும் எதுதான் நிலை என்பன போன்ற தத்துவவிசாரங்களை வாய் தானாக முணுமுணுக்கிறது. சிந்தனையில் மனம் ஆழ்ந்து light at the end of the tunnel-ஆக இம்மானுட ஜென்மம் பற்றி ஏதோ தெளிவு பிறந்துவிட்டது போலகூட தோன்றுகிறது. ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே’ போன்ற பட்டினத்தார் வாசகங்களெல்லாம் எண்ணத்தில் வந்து அலை மோதுகின்றன.

ஆனால் எல்லாம் சில தினங்களுக்கு மட்டுமே. 

துவும் கடந்து போய் லௌகீகம் வந்து மீண்டும் தழுவிக்கொள்கிறது. ஆஸ்தியும், அந்தஸ்தும், கௌரவமும் மீண்டும் பிரதானமாகிறது. வஞ்சினம், வெஞ்சினம், கோபம், குரோதம் மற்றும் இத்யாதிகளெல்லாம் மீண்டும் வந்து குடிகொள்கின்றன. அடுத்த மரணத்தை நெஞ்சில் உணரும் வரை விட்ட இடத்திலிருந்து பழைய ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கிறது.

உண்மையில் இது ஒரு இயல்பான மனசுழற்சி. இதில் சரி என்றும் தவறு என்றும் எதுவுமில்லை. 
மேலும்...

தோல்விக்கோப்பைக்கான வீர விளையாட்டு

Posted: Wednesday, September 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 1 comments
எழுதலாம் என்று எண்ணியிருந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாக மறந்து கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட நேரங்கள் அருகி வருவதாக உணர்கிறேன். ஓரளவு எழுதும் விருப்பமும்கூட. 

லௌகீகத்திற்கும் சுயாதீனத்திற்கும் இடையிலான அல்லாடல் இது. 

தன்விருப்பங்களுக்கும் சூழ்நிலையின் அழுத்தங்களுக்கும் இடையேயான முடிவில்லா பகடையாட்டம் என்றும் சொல்லலாம். 

சில நேரங்களில் தோல்விக்கோப்பைக்கு நடக்கும் விநோத விளையாட்டாகவும் தோன்றுகிறது. ஆனாலும் சுவாரசியமாகவே ஆடிக் கொண்டிருக்கிறேன். 

வேறு வழியுமில்லை. 

கடைசி கட்டம் வரை காயை நகர்த்திதான் ஆகவேண்டும். பாதியில் முடித்துக்கொள்வது வீரனுக்கு அழகல்ல.

ஆனால் வீரமென்பதே பயமில்லாமல் நடிப்பதுதான். 

எதற்கும் என்றும் சாஸ்வதமில்லை எனும்போது எதைக்கண்டு இந்த பயம்? 

மானுட அச்சங்களின் தாத்பரியத்தை கண்டாருமில்லை. கண்டு விண்டாருமில்லை!

###

(இதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தேன். உயர்த்தனி அறிவுஜீவித்தனம் சொட்டுகிறது. வார்த்தைகளில் விளையாடி எழுத்தென ஏந்திப் பிடிப்பது இப்படித்தான் போலும்! )

மேலும்...