இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் - தொடரும் உரையாடல்

Posted: Monday, May 17, 2010 | Posted by no-nononsense | Labels:
இரும்பு கோட்டை முரட்டு சிங்கத்தை முன்வைத்த விவாதத்தில் என் சில கருத்துகள்:

தமிழ்ப்படங்களை விமர்சிக்கும்போது அதனை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டுச் செய்வது தமிழ்ச் சினிமா சூழலுக்கு பொருத்தமாக இருக்காது. அவை மலைகள்; இவை மண் மேடு. வேண்டுமானால் குயிக் கன் முருகனையும் இ.கோ.மு.சி.ஐயும் ஒப்பிடலாம் :-) இவைகளின் தரம் அவ்வளவுதான். மற்றபடி படம் சுமார்தான் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

அதேசமயம் இதைத்தாண்டி ஒரு திரைக்கதையை தமிழ் சினிமா ரசிகனுக்கு ஏற்றபடி எழுதிவிட முடியுமா என்பதும் சிந்தனைக்குரியது. கொஞ்சம் நுணுக்கமாக எடுத்து விட்டால் ‘புரியலை’ என்றும், எதார்த்தமாக எடுத்தால் ‘படம் ஸ்லோ’ என்று எளிதில் நிராகரித்து விடுகிறார்கள்.

அதனால் ரசிகனின் ரசனையின் மட்டத்திற்கு தங்களை தாழ்த்திக்கொள்ளும் நிலையில்தான் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு படைப்பாளிகளும் இருக்கிறார்கள். பிஸினஸ் பேச விநியோகஸ்தர்கள் முன்பு உட்காரும்போது அவர்களின் டிமாண்டுக்கு ஏற்றபடி நிறைய விஷயங்களில் சமரசம் செய்து கொண்டிருந்தால் மட்டுமே அந்த பணடம் விற்பனையாகும் சூழல் இங்கு. இதில் படைப்பாளியை மட்டும் தனித்து குற்றம் சாட்டுவது முழுமையான விமர்சனமாக அமையாது.

அப்படி சமரசம செய்து கொள்ளாமல் விட்டதால்தான் மிஷகினின் ‘நந்தலாலா’ வாங்குவாறின்றி பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சூழலும் மாறினால் மட்டுமே நமக்கு நல்ல படங்கள் கிடைக்கும். அதுவரை இப்படி மசாலாத் தடவித்தான் சில நல்ல முயற்சிகளையும் கூட செய்யமுடியும்.


0 comments:

Post a Comment