கார்த்திகை தீபம் - சில நினைவுகள்

Posted: Monday, November 22, 2010 | Posted by no-nononsense | Labels: ,
தீபமா அல்லது இன்னொரு தீபாவளியா என்று சந்தேகிக்கும்படியான பட்டாசு வெடிச் சத்தங்களுடன் நேற்று கார்த்திகை தீபம் ஜோராக கடந்து சென்றிருக்கிறது. ஒருநாளும் இல்லாத திருநாளாக கடைக்கு அழைத்துச் சென்று டிஸன் தேர்வு செய்து விளக்கு வாங்கிக் கொடுத்தது முதல், அதற்கு திரி திரித்து தந்து, எண்ணை ஊற்றி வைத்து, விளக்கை வைக்க வாழையிலையை கச்சிதமாக கத்தரித்து தந்து, காற்றுடன் மல்லுக்கட்டி ஒளி விளக்கை ஒழியா விளக்காக குறைந்தது 1 மணி நேரம் வரை தூண்டி விட்டு கட்டிக்காத்தது வரை.. என்னளவில் ஒருமாதிரி கொண்டாட்டமாகத்தான் போனது நேற்றைய பொழுது.

பண்டிகைகளின் பின்னுள்ள புராணகதைகளெல்லாம் எவ்வளவு அபத்த குப்பைகளாக இருப்பினும், வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வகை செய்யும் harmless days, அவைகள். அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ள ஒரு பகுத்தறிவுவாதியாக எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.



6-8 விளக்கு வைத்து முடிந்ததும் 8 மணிக்கு மேல் ஊர் பிள்ளையார் கோவில்(!) முன் வைக்கப்படும் சொக்கப்பனையை(கூம்பு) பார்க்க மகளுடன் போயிருந்தேன். அது ஒரு தனி அனுபவம். அதன் மலரும் நினைவுகளை சென்ற வருட கார்த்திகை தீபம் சமயத்திலேயே எழுதி இருக்கிறேன் என்பதால், நெல்லை கண்ணனின் மகனும் டைரக்டரும், சிறந்த எழுத்தாளருமாகிய சுகா எழுதிய நெல்லைத் தமிழ் கொஞ்சும் சொக்கப்பனை பதிவை படிக்கலாம்: http://venuvanamsuka.blogspot.com/2010/02/blog-post.html

0 comments:

Post a Comment