கமல் வாழ்க்கை வரலாறு நூல்

Posted: Tuesday, August 31, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
Chetan Bhagat-ன் Five point someone மற்றும் கி.லக்ஷ்மணனின் இந்திய தத்துவஞானம் ஆகிய நூல்கள் ஒரு வாரமாக என் வாசிப்பில் இருந்துவருகின்றன. இன்னொரு பக்கம் அபிதான சிந்தாமணி. ஆனால் அது கலைக்களஞ்சியம் என்பதால் கணக்கில் வராது. இவையனைத்தையும் அப்படியே ஓரம்கட்ட வைத்து விட்டு இரண்டு நாள்களாக என்னை தன்னுள் முச்சூடாக இழுத்துக் கொண்டது பத்திரிக்கையாளர் பா.தீனதயாளன் எழுதிய ‘கமல்’ என்னும் கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாறு நூல். கிழக்கு பதிப்பக வெளியீடு. கமல் என்னுடைய அபிமான நடிகர் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஐம்பது ஆண்டுகளாக...
மேலும்...

குற்றங்களும் தண்டனையும்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
தண்டனைகள் கடுமையாக கடுமையாகத்தான் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். மரண தண்டனை என்பது சட்டத்தில் இருக்கவேண்டிய தண்டனைதான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. அது இருப்பதினால் மட்டும் யாரும் கொலை செய்யாமல் இருக்கிறார்களா என்று எதிர்வாதம் வைப்பார்கள். அப்படி பார்த்தால் போலீஸ் ஸ்டேஷன் இருந்து மட்டும் என்ன குற்றம் நடக்காமலா இருக்கிறது, எதற்கு வெட்டியாக போலீஸ் ஸ்டேஷன் என்றோ, எதற்கு சிறைச்சாலை என்றோ கூட கேட்க முடியும்.  எத்தனை பேரை கொன்னாலும் தூக்கு கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனால் ஜெயில்லதான் போடப் போறாங்க என்றால், நீ கேஸ நடத்திக்கடா மகனே என்று...
மேலும்...

கிடாவெட்டு

Posted: Monday, August 30, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
விர்ர்ர்ரூம்.......!என்னதான் வண்டியில் செல்ஃப் ஸ்டார்ட்டர் இருந்தாலும் அதை ஒரு உதைவிட்டு ஸ்டார்ட் செய்து சுற்றம் அதிர முறுக்கிவிட்டு ஓட விடுவதில்தான் ஒரு கெத்து இருக்கிறது. பரமசாதுக்களாக பைக்குகளை பாவிப்பவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கும். கனரக பைக்குகள் கம்பீரமான ஆண்மையின் அடையாளம்! என்ஃபீல்டு புல்லட் சவாரிகளைப் போல!நான் விட்டு கிளம்பிய இடம் மோகனூர் நவலடியான் கோவில். அங்கே ஒரு நண்பரை சந்திப்பதற்காக சென்று விட்டு, ஆரியூர் நோக்கி பைக்கை விரட்டிக்கொண்டு இருந்தேன். கிடாவெட்டு இருந்தது. கோவிலில் இருந்து பாதி பர்லாங்கு தூரம்கூட கடந்திருக்க மாட்டேன்....
மேலும்...

சிற்சில குறிப்புகள் (5)

Posted: Sunday, August 29, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஈழ நண்பர் ஒருவருடன் போர்முனையில் தற்கொலை என்பது பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். பேச்சு புலிகளின் சயனைடு குப்பி மற்றும் சமுராய்களின் ஹாராக்கிரியை மையம் கொண்டு அமைந்தது. சயனைடை கடித்து நொடியில் இறப்பது என்பதை விட பாரம்பரிய ஹாராக்கிரியை செயல்படுத்த கடும்நுண்மனமுதிர்ச்சி வேண்டும் என்பது என் வாதமாக இருந்தது. காரணம் அது வயிற்றை கிழித்துக் கொண்டு குடல் சரிய விட்டு பல மணி நேர வலிக்குப் பிறகு சாவது.  அதோடு இந்த சயனைடு குப்பி சாவுக்கு முன்னோடிகளாக நாஜிக்கள் இருந்ததாக சில குறிப்புகள் படித்திருக்கிறேன். சட்டென்று தேடியெடுக்க முடியவில்லை.  * இரண்டு...
மேலும்...

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

Posted: Friday, August 27, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அவர் ஊரின் பிரபலமானதொரு அரசியல்வாதி. முக்கிய கட்சியின் மாவட்ட செயலாளர். சிவப்பு விளக்கைச் சுழல விட்டுச் செல்லும்படியான முக்கிய அரசு பதவிகளை வகித்தவர். உள்ளூரில் அவருக்கு போட்டியென்று ஒருவரும் கிடையாது. அந்தளவு ஆள்பலமும் செல்வாக்கும் கொண்டவர். அவரை காண காத்திருப்போர் பட்டியலைக் கண்டாலே போதும் அவரின் ‘பவர்’ தானே விளங்கும். இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய கதை. நேற்று உள்ளூரின் பிரபலமான ஒரு திருமணத்திற்கு போயிருந்தேன். வண்டியை நிறுத்தி விட்டு, முன்வாசலில் வணக்கம் போட்டபடி இணைந்து செல்ல தெரிந்தவர் யாராவது வருகிறார்களா என்று நோட்டம் விட்டேன்....
மேலும்...

அண்ணாவின் திராவிட அரசியல்

Posted: Wednesday, August 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இன்றைய இரவுக்கு ‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் விருட்சத்தை தன் நாவன்மையால், எழுத்தாற்றல் திறத்தால் எப்படி மெல்லென அசைத்து வீழ்த்தினார் என்பதை நுட்பமாக அவதானிக்கிறேன்.  எங்கே தொடங்கினாலும் திராவிட நாட்டில் வந்து முடிக்கிறார். தமிழர்களின் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு திராவிடம் அடைவதுதான் என்று முழங்குகிறார். ’வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’, ‘சோறு கேட்டால் இதோ பாரு நேரு என்கிறார் காங்கிராஸார்’ என்று இடித்துரைக்கிறார். எழுத்து நடை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறது. அந்த நாட்களில்...
மேலும்...

ஸ்வர்ணலதா அஞ்சலி

Posted: Saturday, August 21, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஸ்வர்ணலதாவின் தொகுப்புகளை தேடியெடுத்து இசை மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். வேறு நேரங்களில் கேட்டதை விட இப்போது குரலின் பாவங்களை நிதானித்து கவனித்து ரசிக்க முடிவது, இனி இந்த குரலை புதிதாக கேட்க முடியாது என்பதாலா, அல்லது அவரின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தினாலா என்பது தெரியவில்லை. இரண்டும் இருக்கலாம். ஜானகியம்மா 50 வருடங்களும், சித்ரா 30 வருடங்களுமான ஒரு நீண்ட கேரியரை சினிமா பின்னணி பாடல்களில் கொண்டவர்கள். மாறாக ஸ்வர்ணலதா ஒரு பத்தாண்டு காலம் மட்டுமே பிரபல பாடகியாக இருந்தவர். மேலும் அந்த பத்தாண்டுகளும் கூட மேற்சொன்ன இரு நட்சத்திர பாடகிகளின்...
மேலும்...

நயா பைஸா செலவில்லா வாழ்க்கை

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
நான் கூட ஒரு பைசா செலவு செய்ததில்லை. அதுவும் பிறந்ததில் இருந்தே செலவு செய்ததில்லை. என்னா அதை நான் பார்த்ததும் இல்லை, அது புழக்கத்திலும்  இல்லை. ஹஹ்ஹஹ்ஹா.. :-))  இதுதான் 1 பைசா இப்போதெல்லாம் 50 பைசாவே புழக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்டது. 50 பைசாக்களில் முடிந்த பஸ் கட்டணங்களையும் கூட அண்மையில் 1 ரூபாய்க்கு round off செய்து விட்டார்கள். சில மிட்டாய்களும் முன்பு 10 பைசாவுக்கு விற்கப்பட்ட சுபாரி பாக்குகளும் மட்டுமே இன்னும் 50 பைசாவுக்கு கிடைக்கின்றன. அதற்கு கீழான பைசாக்களைப்பற்றி...
மேலும்...

இந்தியாவின் தாராளமயமாக்கம்

Posted: Thursday, August 19, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
தாராளமயமாக்கத்தை தள்ளிப் போட்டிருக்க முடியுமே தவிர தவிர்க்க இயலாத ஒன்று என்பதே நிதர்சனம். காரணம் இந்தியாவை பொறுத்தவரை அதன் சந்தை பொருளாதாரத்தை நிர்ணயிப்பது எண்ணை பொருளாதாரம். அப்படியாக தவிர்க்க இயலாமல் நாம் திறந்த விட்ட சந்தை பொருளாதாரம் எந்த மாதிரியான விளைவுகளை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது; மற்றும் எந்த மாதியான விளைவுகளை ஏற்படுத்த உள்ளது?  ஆழமாக சென்று அலச வேண்டிய தலைப்பிது. யாருகாவது ஆர்வமும் நேரமும் இருந்தால் பேசலாம். முன்பாக என் சில கருத்துகள் இங்கே சுருக்கமாக. 1. சந்தை பொருளாதாரத்தின் நன்மை தீமைகள் அந்தந்த நாடுகளை பொறுத்தே...
மேலும்...

சுட்டுவிரலை சுட்டும் முன்

Posted: Wednesday, August 18, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களை பகடி செய்து எழுதியது. இந்து மதத்தை மட்டும் நான் அதிகம் விமர்சிக்கிறேன் என்பது அவர்களின் குறை :-) : காட்சி: அண்ணன், தம்பிகளாகிய பஜேஷ், குஜேஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பஜேஷ்: தம்பி நம்ம வீடெல்லாம் ஒரே தூசும் தும்பும் அழுக்குமா கெடக்கு. இதையெல்லாம் கொஞ்சம் ஒட்டடையடிச்சி வெச்சிக்கினா பளிச்னு ஆயிடும். சுகாதாரத்துக்கு சுகாதாரம்.. அழகுக்கு அழகு! குஜேஷ்: டாய்.. என்ன வார்த்த சொல்லிகின நம்ம வூட்டப் பத்தி. எதிர் வூட்டுக்காரன் வூட்டுல ஏழு நாளா தண்ணி வராம யாரும் சரியா ஆய் கழுவுல.. அத்த கேட்டுகினியா நீ? பக்கத்து...
மேலும்...

அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும்

Posted: Tuesday, August 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அரசு பஸ்களில் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் பலரும் நினைப்பது போல் ரொம்ப மோசம் எல்லாம் இல்லை. என்றாவது ஒருநாள் மட்டும் பயணம் செய்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும். என்னுடைய கடந்த நான்கு வருட பஸ் அனுபவங்களின் மூலம் நீண்ட தூர (1 மணி நேரத்திற்கும் கூடுதலான) பயணங்களுக்கு என்னுடைய தெரிவு அரசு பஸ்களே.  தனியார் பஸ்களை பொறுத்தவரை, அதிக டிக்கெட் ஏற்ற வேண்டும் என்று இரண்டு சீட்களுக்கும் இடையே போதிய இடைவெளி இன்றி நெருக்கடித்து சீட் போட்டிருப்பார்கள். என்னை போன்ற சற்றே ஸ்தூலமான உடம்பு கொண்டவர்களுக்கும் கால் நீளம் கொண்டவர்களுக்கும்...
மேலும்...

சிற்சில குறிப்புகள் (4)

Posted: Sunday, August 15, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பேராசிரியர் ஞானசம்பந்தனை நடுவராக கொண்ட வழக்காடு மன்றம் ஒன்று பொதிகையில் நடந்து கொண்டிருக்கிறது. மனிதர் நகைச்சுவையை நாக்கில் தடவி, இல்லையில்லை, நாக்காகவே கொண்டிருக்கிறார். அதேசமயம் பேசுபொருளில் இருந்து விலகுவதும் இல்லை. அருமையான உரை! * மெகா டிவியில் எம்.எஸ்.வி.யின் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழின் மாபெரும் 'unsung hero' என்று இவரையேச் சொல்வேன். அந்த அதிருப்தியை கூட வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத அப்பாவி இவர். கண்ணதாசன் பெயரை உச்சரிக்காமல் ஒரு பாராவைக்கூட கடக்கமுடிவதில்லை எம்.எஸ்.வி.க்கு. எப்படி முடியும்?! இந்த அத்யந்தம்...
மேலும்...

நாடி ஜோதிடம்

Posted: Saturday, August 14, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஜோசியத்திலேயே நாடி ஜோதிடம் தான் அதிகம் மக்களை நம்பச் செய்யக் கூடியது. அதற்கு காரணமும் வெளிப்படை - ஊர், உறவு, தொழில் எல்லாம் சரியா சொல்லிடுவாங்க. அதைக் கேட்டதும் மக்கள் அசந்து போயிடுவாங்க. இங்கே நீ கவனிக்க வேண்டிய ஒன்று - உங்க பெயர் குமார், உங்களுக்கு இத்தனை அண்ணன், தம்பி, உங்க ஊர் நெட்டவேலம்பட்டி - அப்படின்னு பலரும் நினைக்கற மாதிரி துல்லியமா எல்லாம் சொல்லிட மாட்டாங்க. ஆனாலும் சரியாத்தான் சொல்வாங்க. எப்படிங்கறதுதான் இதில் உள்ள ட்ரிக். நிச்சயமா ட்ரிக் தான். அதில் சந்தேகமேயில்லை. எப்படிங்கறத கொஞ்சம் விரிவா எழுதணும். சுருக்கமாச் சொன்னா, ஓலையை...
மேலும்...

தமிழின் நகைச்சுவை படங்கள்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பாவை நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன். நாகேஷ் நடிப்பில் உச்சமாக நான் கருதும் மூன்று வேடங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு: அன்பே வா, தில்லான மோகனாம்பாள்.காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் - இரண்டு சிறந்த இயக்குநர்களின் இரண்டு சிறந்த காமெடி படங்கள்; அமரத்துவமான படைப்புகள். அதற்கு பிறகு அவர்களாலேயே அப்படி ஒரு படத்தை இயக்கமுடியவில்லை. ஸ்ரீதரின் பிற்கால ஊட்டி வரை உறவும், கலாட்டா கல்யாணமும் சுமார் ரகம் தான்.தமிழ் சினிமாவின்...
மேலும்...

காதலிக்க நேரமில்லையும் நகைச்சுவைப் படங்களும்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஓஹோ புரடக்சன்ஸ் செல்லப்பாவை நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன் (ஆதித்யா டிவி). நாகேஷ் நடிப்பில் உச்சமாக நான் கருதும் மூன்று வேடங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு: அன்பே வா, தில்லான மோகனாம்பாள். காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் - இரண்டு சிறந்த இயக்குநர்களின் இரண்டு சிறந்த காமெடி படங்கள்; அமரத்துவமான படைப்புகள். அதற்கு பிறகு அவர்களாலேயே அப்படி ஒரு படத்தை இயக்கமுடியவில்லை. ஸ்ரீதரின் பிற்கால ஊட்டி வரை உறவும், கலாட்டா கல்யாணமும் சுமார் ரகம் தான். தமிழ் சினிமாவின் 90-க்கு முந்தைய காமெடி பட முயற்சிகள் பற்றி மனம் தொடர்ந்து அலசிக் கொண்டிருக்கிறது. சபாபதி,...
மேலும்...

சிற்சில குறிப்புகள் (3)

Posted: Friday, August 13, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாரதிதாசன் கவிதை: எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பிஏழு கடல் அவள் வண்ணமடா கலைஞரின் உல்டா எந்திரன் வாழ்த்து கவிதை: எங்கெங்கு காணினும் வெற்றியடா ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா ----------- தற்சமயம் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் இரண்டும் வாங்கி வருகிறேன். இரண்டுமே குடும்பத்தார் படிப்பதற்காக. இரண்டில் ஒன்றை நிறுத்தி விட்டு இனி கல்கி வாங்க இருக்கிறேன். ’ஞாநி’யின் ஓ பக்கங்களை படிப்பதற்காக. குமுதத்தில் கருத்துரிமை மறுக்கப்பட்ட ஞாநி இந்த வாரம் முதல் கல்கியில் எழுத இருக்கிறார்.  குமுதம் என்றதும் சாருவின் பின்வரும் கமெண்ட் தான் ஞாபகம்...
மேலும்...

கமல் ஒரு காப்பி கேட் என்னும் விமர்சனம் குறித்து

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களிடம் உரையாடியது என்பதால் நடை கொஞ்சம் நெகிழ்வாகத்தான் இருக்கும்: http://www.youtube.com/watch?v=UPpao48pMG0&feature=relatedhttp://www.youtube.com/watch?v=xC76hSbzpRo&feature=related 1) ஏண்டா, உங்களுக்கு ‘என்னது இந்திராகாந்தி இறந்து விட்டாரா’ங்கற மாதிரி ஒரு ....மேட்டர்தான் கெடைச்சுதா. அன்பே சிவம் மாதிரி முழுப் பட உல்டாவே இருக்கும்போது தம்மாதூண்டு மேட்டர வெச்சிகினு சதாய்ச்சிகினு இருக்கீங்க... எம் தலைவருக்கென்று ஒரு பாலிஸி உண்டு. தனியே அவருக்கென்று ஒரு குணம் உண்டு. அது: சென்றிடுவீர் எட்டுத் திக்கும்கலைச் செல்வம்...
மேலும்...

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

Posted: Wednesday, August 11, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினா கண்ணிற் பணிமின் கனிந்து. கபில நாய நாயனார் எழுதிய “மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை” பாசுர தொகுப்பில் இடம்பெற்ற வெண்பா இது. சினிமாவில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்து எல்லோர் மனதிலும் இடம்பிடித்து விட்டது. இப்பாடல் எங்கள் ஊர்ப்பகுதியில் ஒவ்வொருவரின் உணர்வலைகளையும் வருடிச் செல்லக்கூடிய ஒன்று என்று சொல்லலாம். காரணம், பால்யம் முதல் இப்பாடலைத்தான் அந்திப் பொழுதுக்கு ஒரு சமிக்ஞையாக கொண்டு வாழ்ந்திருக்கிறோம். வீட்டின்...
மேலும்...

எந்திரன் பகடி குறித்து சில விளக்கங்கள்

Posted: Tuesday, August 10, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
எந்திரன் பட விளம்பர தாக்குதல்கள் மீதான்  என்கடும் விமர்சனம் எழுப்பிய சர்ச்சையின் போழ்து: 1. நான் எந்திரனை விமர்சிக்கிறேன் என்று ஆரம்பம் முதலே நண்பர் புலம்பி வருகிறான். ஒரு திருத்தம்: அது விமர்சனம் அல்ல, பகடி! கேலி, கிண்டல் என்றும் வேறு வார்த்தைகளில் சொல்லலாம். படம் வராமலே எப்படி என்னால் மட்டும் விமர்சிக்க முடியும்? 2. என்னுடைய பகடிகளெல்லாம் சும்மா வெறுப்பேற்றும் நோக்கத்திலேயே செய்யப்பட்டன. ரஜினிப் படம் வெளியாகும் நேரங்களில் எல்லாம் ரஜினியின் அத்யந்த ரசிகர்களாகிய என் நண்பர்களை சீண்டி வெறுப்பேற்றுவது எனக்கு ஒரு விளையாட்டு. நம்மை நன்றாக புரிந்து...
மேலும்...

சிற்சில குறிப்புகள் (2)

Posted: Sunday, August 8, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்.ஆர்.ஐ வாழ்க்கைச் சூழல் அச்சமூட்டுகிறது. ஒரே தெருவில் ஒண்ணு மண்ணா பொழச்சி, ‘ஓ’ன்னு குரல் கொடுத்தா ஓடி வர ஊரே இருப்பதன் அருமை புரிகிறது. Bannedthoughts.net -ல் தோழர் ஆசாத் படுகொலை குறித்த அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மாவோயிஸ்டுகளுக்கு  என்று பிரத்யேகமாக ஒரு வலைதளம் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. போராட்டங்களை டிஜிட்டல் வடிவிலும் முன்னெடுக்க வேண்டிய காலகட்டமிது. முன்காலை முடிந்தஞாயிறு இந்நாள்பின்காலை பொழுதில்கஷ்டம் பலபட்டுகண்விழித்தெழுந்து காப்பிக்கோப்பையுடன் கபாலத்தில்...
மேலும்...