விட்டில் பூச்சி வாழ்க்கை

Posted: Friday, September 24, 2010 | Posted by no-nononsense | Labels:
இன்றைய பேருந்து பயணத்தில் பயணிகளின் களைப்பை போக்கவேண்டி தில்லாலங்கடி படம் போட்டிருந்தார்கள். வழக்கமான மசாலா படம்தான் போல என்று ஏனோ தானோவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சென்டிமெண்ட் காட்சி: 

அது - கணவன், மனைவி மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை கொண்ட ஒரு அழகான குடும்பம். குழந்தையின் மீது மிகுந்த அன்பு செலுத்தி செல்லம் பாராட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இன்பமான வாழ்க்கைக்கு இடையூறாக அந்த குழந்தைக்கு தீராத வியாதி ஒன்று வந்து விடுகிறது. அதற்கு மருத்துவ செலவு, ஆபரேசன் என்று பெரும்பணம் தேவைப்படுகிறது. 
யார் யாரையோ கெஞ்சியும் அழுதும் எதுவும் நடக்கவில்லை. இறுதில் அவள் சிறிது சிறிதாக உடல் நலிவுற்று இறப்பதை காண சகியாமல், அவளை கொண்டுபோய் ஒரு ஆசிரமத்தில் சேர்ப்பித்து விட்டு, இவர்கள் மட்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

கணநேரத்தில் மனது கனத்து போனது. அந்த மூன்று பேர் கொண்ட மகிழ்ச்சியான குடும்பத்தில் என்னுடையதை பொருத்தி பார்த்ததுதான் காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

வாழ்வில் இந்த மாதிரி எதிர்பாராத பெரும் சோகங்கள் நிகழும்போது அதனை எப்படி எதிர்கொள்ள போகிறேன்? உலகளாவிய தத்துவங்களையெல்லாம் பக்கம் பக்கமாக படித்து, நண்பருக்கோ உறவினருக்கோ இதுபோல் நடக்கும்போதெல்லாம் அதிலிருந்து மேற்கோள் காட்டி ஆறுதல் வார்த்தைகளாக உதிர்ப்பது போல் எனக்கும் நானே சொல்லிக்கொள்ள முடியுமா? அவ்வளவு ஆழ்ந்த ஞானமும், மனோதிடமும், பரிபக்குவம் முயன்றாலும் அடைதல் சாத்தியம் தானா?

இப்படியெல்லாம் சில சிந்தனைகள் பேருந்தை விட்டு இறங்கும் வரை என்னை ஆட்கொண்டி

0 comments:

Post a Comment