எது சுற்றுலா?

Posted: Saturday, January 8, 2011 | Posted by no-nononsense | Labels:
அது ஒரு தனியாத ஆசை ஒரு வித்தியாசாமான சூழலில் நண்பர்களுடன் நீண்ட நேரம் செலவிட வேண்டும்(மது அருந்திக்கொண்டு)

உங்கள் பயணம். உங்கள் விருப்பம். உங்கள் ஆசை - இதில் நான் யார் கருத்துச் சொல்ல. இருந்தாலும், அவ்வளவு தூரம் சென்று ஆகும் மட்டையை இங்கேயே ஆகிக்கொள்ளலாமே?

கூட்டம் சேர்ந்து போய் ரூம் போட்டு ரம் போட்டு சைட் ஸீயிங் போய் நோட்டம் விட்டு பராக்கு பார்ப்பதுதானா சுற்றுலா? சுற்றுலா எப்படிச் செல்ல வேண்டும்?

எந்த ஊருக்குப் போகிறோமோ அதனுடைய வரலாற்று முக்கியத்துவம் என்ன, அங்கே வரலாற்றின் சாட்சிகளாக இன்னும் மீதம் இருக்கும் தடயங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், புராதன சின்னங்கள் என்னென்ன என்பது குறித்த அறிவுடன், அவற்றை நித்தியமாக மனதில் உள்வாங்கிக் கொள்ளக்கூடிய திறந்த மனநிலையுடன் போய் இறங்கி அச்சூழலுடன் இரண்டற கலக்கவேண்டும். அங்கேயுள்ள உள்ளூர் மனிதர்களுடன் தான் தங்க வேண்டும். அம்மக்களின் பிரத்யேக உணவு வகைகளையே உண்ண வேண்டும். அம்மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை அறிந்து கொள்ளும்படியான நிரல்களை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு நாளும் வீணாகக்கூடாது.

பிலோ இருதயநாத் கேள்விப்பட்டதுண்டா? தமிழில் பல பயணக்கட்டுரைகளை எழுதியவர். குறிப்பாக பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களுடன் தங்கி நூல்கள் எழுதியவர். அவர் எல்லா இடங்களுக்கும் சைக்கிளேலேயே பயணம் செய்தார். தன்னை தனித்து அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்தவித சௌகரியங்களையும் அவர் ஏற்படுத்திக்கொள்ளா ஒரு அசல் யாத்ரீகர். இத்தனைக்கும் அவர் ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிக்கொண்டே இவற்றையெல்லாம் செய்தார். அவரெல்லாம் இவ்வகையில் ஒரு முன்னோடி.

நான் சமீபத்தில் நம் நண்பர்கள் இருவருடன் பெங்களூர் சென்றிருந்தேன். செல்வதற்கு முன்பாக பார்க்க வேண்டிய இடங்கள் என்று சில இடங்களை குறித்து வைத்துக்கொண்டு, அவற்றின் சரித்திரம் குறித்த தகவல்களை மனதில் அசை போட்டபடி சென்று இறங்கினேன். அவற்றில் நான் செல்ல விரும்பிய முக்கியமான இடம் திப்பு சுல்தானின் சம்மர் பேலஸ். உடையார் மன்னர்களில் தொடங்கி, ஹைதர் அலி, அவனின் செல்ல பிள்ளை திப்பு வரையிலான ஒரு சுவையான வரலாறை படித்திருந்ததின் ஆர்வம் உந்தித்தள்ள அங்கே எங்களை வரவேற்ற நண்பனிடம் இடங்களின் பட்டியலை வாசித்தால் அவன் திருதிருவென விழித்து தத்தளித்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டான். சரி வேண்டாம் சிரமமென்று சித்தன் போக்கு சிவன் போக்கென்று மற்ற நண்பர்களின் போக்கிலேயே விட்டுவிட்டேன்.

0 comments:

Post a Comment