வால்கா முதல் கங்கை வரை

Posted: Wednesday, January 12, 2011 | Posted by no-nononsense | Labels:
”வால்கா முதல் கங்கை வரை” புத்தகத்தின் 600 பக்கங்களில் 400 வரை படித்தாகிவிட்டது

சொன்னபடியே நிற்கிறாய் அதற்குத் தக. மிக்க மகிழ்ச்சி..! நூலை முழுமையாக வாசித்த பிறகு மீண்டும் ஒரு முழுமையான கருத்துரையை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

சாதி பாகுபாடு சாதி பாகுபாடு மற்றும் புரோகிதம் போன்ற ஆரியர்களின் இன்றைய பழக்கவழக்கங்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதல்ல அவற்றை அவர்கள் இந்திய தொல்குடிகளிடமிருந்தே (ஹரப்பா மற்றும் மொகஞ்சாதாரோ காலகட்டத்தில்) பெற்றுக்கொண்டார்கள் என்ற செய்தி எனக்கு புதியது.

இந்த நூல் அடிப்படையில் ஒரு புனைவு என்பதால் ஆரியர் குறித்து ராகுல்ஜி கொடுத்துள்ள சித்திரம் அப்படியே உண்மையென கொள்ளத்தக்கதல்ல என்பது என் கருத்து. காரணம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ மக்கள் குறித்த படிமங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவர்களின் வாழ்க்கை முறை குறித்து ஆராயத்தக்கதாக எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களின் சமூக வாழ்க்கை மற்றும் சாதிய அமைப்பு குறித்த கருத்துக்கள் எல்லாம் அடிப்படையில் அவரவர் மனசாய்வுக்கேற்றபடி யூகமானவை மட்டுமே. மேலும் இந்த நூல் வேதங்களையும் உபநிடதங்களையும் புராணக்கதைகளையும் அடியொட்டியே இயற்றப்பட்டதாக படித்திருக்கிறேன். அதனால் அதன் பாதிப்பு காரணமாகவும் ஆரியர் குறித்த இத்தகைய கருத்தாக்கத்தை ஆசிரியர் ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்.

நான் இன்னும் அந்த நூலை வாசித்ததிலை என்பதால் இதன்மேல் முழுமையாக கருத்துரைக்க முடியாது. நீ முடித்து விட்டு கொடு. ஒரு ஓய்வற்ற முழுவாசிப்பில் முடித்து விட்டு மேற்கொண்டு உரையாடலை தொடர்வோம்.

0 comments:

Post a Comment