சிதறலாய் சில குறிப்புகள்

Posted: Sunday, November 29, 2009 | Posted by no-nononsense | Labels: , ,
பங்கு வர்த்தக தொழிலில் இருக்க நேர்வது ஒரு வகையில் புலி வாலைப் பிடித்த நாயர் கதைக்குச் சமம். இதிலுள்ள ஸ்ட்ரெஸ்ஸை நினைத்தால் விட்டு ஓடிவிடலாம் என்று தோன்றும். அதே நேரம் இதர சலுகைகளையும், விடுமுறைகளையும் எண்ணிப் பார்க்கும்போது, கை வாலை இன்னும் கொஞ்சம் இறுக பிடித்துக் கொள்ளச் செய்யும்.

பலரும் நினைப்பதுபோல் இதில் பிரச்சினை மார்க்கெட்டால் வருவதே இல்லை. கிளையண்ட் என்கிற மஹானுபாவர்கள் தான் நம்முடைய பி.பி அளவை நிதமும் உயர வைத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக டே டிரேடர்ஸ்! அவர்களைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம். இப்பொழுது நான் சொல்ல வருவது, வெள்ளி கிழமை பங்கு சந்தைகளில் ஏற்பட்ட கிடுகிடு வீழ்ச்சி பற்றி.

2008 ஜனவரியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு இப்பொழுதுதான் மார்க்கெட் கொஞ்சம் ஒரு ஸ்டேபிலிடியை அடைந்திருந்தது. முதலீட்டார்களிடம் கொஞ்சம் நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் வெள்ளி கிழமையன்று எதிர்பாராத திசையிலிருந்து செய்திகள் வந்தன. துபாயின் மிகப் பெரிய ஹோல்டிங் கம்பெனியான துபாய் வேர்ல்ட் தன்னுடைய கடனை திருப்பிச் செலுத்த 6 மாதம் தவணைக் கேட்ட செய்திதான் அது. மொத்தம் 60 பில்லியன் டாலர் கடனில் இக்கம்பெனி இருந்துவந்தது. இதனுடைய முதலீட்டின் கீழ் தான் துபாயின் பிரபலமான ’பால்ம் ஜூமைரா’ உள்ளிட்ட முக்கிய பிராஜட்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. துபாயின் ஆட்சியாளர்கள் தான் இதனுடைய முதலாளி என்பது கவனிக்கத் தக்கது. துபாய் போன்ற அரசாட்சி நடைபெறும் தேசங்களில் எப்பொழுதும் transparency எல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதால், கடன் பிரச்சினையின் தீவிரம் இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் வெள்ளியன்று எதிரொலித்து சந்தை வீழ்ந்தது. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் இன்ஃப்ரா பங்குகள் சரிந்தன.

சிலர் இது கொஞ்சம் ஓவர் ரியாக்‌ஷன் என்கிறார்கள். தெளிவான விவரங்கள் வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். இருப்பினும், தற்சமயம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை அடிவாங்கி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

சில ஆண்டுகள் முன்பு துபாயை சேர்ந்த Emaar இந்தியாவின் MGF உடன் இணைந்து 6000 கோடி நிதி திரட்டும் ஒரு மெகா IPO விற்கு அடி போட்டார்கள். அதற்குள் Reliance power IPO இந்தியாவின் குப்பன்-சுப்பனின் மொத்த பணத்தையும் உறிஞ்சித் தள்ளியதுடன், அமெரிக்க mortgage பிரச்சினையும் சேர்ந்து சந்தையை வீழ்த்தியதால், இப்போதைக்கு இங்கே ஒன்றும் தேறாது என்று அந்த துபாய் ஷேக் கம்பெனி ஜகா வாங்கிக் கொண்டது. இல்லையென்றால் இங்கேயிருந்து மக்கள் பணம் எப்படியும் பத்தாயிரம் கோடியாவது ஸ்வாகா ஆகியிருக்கும்.

---------------

”யோகி” திரைப்படம் பெரிய ஓப்பனிங்குடன் வெளியானது. அமீரின் திறமை மீது எனக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கேள்விப்படும் செய்திகள் அவ்வளவு சிறப்பனதாக இல்லை. பெரும்பாலும் மொக்கை படத்திற்கும் கூட கருணையின் அடிப்படையில் நல்ல ரேட்டிங் கொடுக்கும் நாமக்கல் ’சினிமா சுப்புடு’ சுரேஷ்குமார் கூட ஒரே வரியில் ‘எனக்கு பிடிக்கலை’ என்று சொல்லிவிட்டான். இணையத்தில் படிக்க நேர்ந்த விமர்சனங்களும் படம் மனதோடு ஒட்டவில்லை என்றே சொல்கின்றன. மேலும் இது விருது வாங்கிய Tsotsi என்னும் ஆப்ரிக்க திரைப்படத்தின் அட்டை காப்பியாம். ஆனால் நான் You too amir? என்றெல்லாம் கேட்க மாட்டேன். இங்கே மாட்டினவன் திருடன்; மாட்டாதவன் புத்திசாலி!

திரைத்துறையில் இருக்கும் ஒருவரின் விமர்சனம் இங்கே http://cablesankar.blogspot.com/2009/11/tsosti.html

---------------

சீமான் கைதாக காரணமாக இருந்த கனடா உரை பற்றி சதீஷ்கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அதனுடைய லிங்க் கிடைக்குமா என்று கேட்டிருந்தான்.


தமிழின் பெயரால் காது நரம்புகள் புடைக்க அடுக்குமொழியில் ஆவேசமாக யார் பேசினாலும் அவன் பின்னால் தலைவன் என்று சொல்லிக்கொண்டு அலைந்து திரிவது தமிழனின் பரம்பரை வியாதி. அந்த பேச்சின் பின்னுள்ள நடைமுறை சாத்தியங்களையோ அல்லது குறைந்த பட்சம் அதன் பொருளையோ கூட அவன் ஆராய முற்பட்டதில்லை. முற்பட்டிருந்தால் காமராஜரை தோற்கடித்து பிரிவினைவாதம் பேசி திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியிருக்க மாட்டார்கள். பேசி பேசியே ஆட்சிக்கு வந்தார்கள். இன்றுவரை பேசி பேசியே தமிழனின் மூளையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உரையில் சீமான் கூறுவதைப்போல் அவர் பின்னாலும் இப்பொழுது பெரிய கூட்டங்கள் கூடுகின்றன. எல்லோரும் இளைஞர்கள். தங்கள் இன-மொழி-உணர்வுகள் தவறான காரணத்திற்காக திரட்டப்படுகின்றன என்பதை ஒருநாள் அவர்கள் உணரக் கூடும்.

0 comments:

Post a Comment