விசிலடிச்சான் குஞ்சுகள்

Posted: Thursday, November 5, 2009 | Posted by no-nononsense | Labels: ,
1) முதலில் விசிலடிச்சான் குஞ்சுகள் பற்றி,
எனக்கு அப்படியிருப்பதைப் பற்றி பெரிய விமர்சனம் கிடையாது. ஒரு music concert சென்றால் எப்படி ஆடிப் பாடி கொண்டாடி மகிழ்கிறோமோ அதைபோல் ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை கொண்டாடி மகிழ்வதில் பிரச்சினையில்லை. ஆனால் திரை நாயகனை நிஜத்திலும் நாயகனாக வரித்துக்கொண்டு வாழ்க்கையை தொலைப்பது தான் உள்ளபடியே பரிதாபம். விஜய் போன்ற நடிகர்களின் பின்னால் கூடும் கூட்டங்களைப் பார்க்கும்போது இது குறைவதற்கு பதிலாக அதிகரித்து வருவதாகவே தோன்றுகிறது. தமிழனுக்கு யாரையாவது துதி பாடிக்கொண்டே இருக்க வேண்டும். அது அரசியல், சினிமா, இலக்கியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சார்பு நிலை எடுத்து விட்டால் பிறகு no look-back or reconsideration. இது நம் பாட்டன் காலத்திலிருந்து நம்மை பீடித்திருக்கும் சமூக நோய். அன்று பாகவதர் என்றால் இன்று ரஜினி, விஜய். அவ்வளவு தான் வித்தியாசம்.

முன்பு இதே பொருளில் ஒரு நல்ல கவிதை வாசித்திருக்கிறேன். அதை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன். இக்கவிதையை எழுதிய தொ. சூசைமிக்கேலுக்கும் எனக்கும் ஒரு விநோதமான உறவு உண்டு. கேட்க சுவாரசியமாக இருக்கும். பிறகு எழுதுகிறேன்.


Photo Sharing and Video Hosting at Photobucket

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை ?
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை.
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை.
இன்னொருவன் உருவம்மீது பால் சொரியும் நிந்தனை.

கண்ணகிக்குச் சிலையெடுத்தான், அது தமிழன் சாதனை.
கலிங்கம் வரை படையெடுத்தான் , அது தமிழன் போர்முனை.
மன்னுதமிழ்க் குறள் படைத்தான், அது தமிழன் நூல்வினை.
மாயைகளில் மயங்குகின்றான்... இது என்ன சோதனை ?

சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ.?

நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்.
நல்லதமிழ் படியென்றால் நாணமின்றி முழிக்கிறான்..
கொடியதிரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்.
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்....

-
தொ. சூசைமிக்கேல் - சவூதி அரேபியா.

0 comments:

Post a Comment