கும்பல் வன்முறை கருத்தும், நிபுணரின் விளக்கமும் உரையாடலும்

Posted: Saturday, November 14, 2009 | Posted by no-nononsense | Labels:
My comments about a blog post shared by my friend and explanation on vandalism by my friend Dr.Singaravelu, psychiatrist :

>> இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே <<

வரலாற்றிலிருந்து தமக்கு வசதியான ஒன்றை மட்டும் உருவி பரபரப்பாக ‘ப்ளாக்’ எழுதுவது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். உரிமை கேட்டு ஊர்வலமாக வந்ததற்காக அவர்கள் தாக்கப்படவில்லை. அவர்கள் கோரிக்கைகளுக்கும் நடந்த இந்த சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

நடந்தது இதுதான்.

இங்கேயிருந்து தமிழர்கள் எப்படி இலங்கை தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய ஆங்கிலேயரால் அழைத்து செல்லப்பட்டார்களோ, அதேபோல் ஜார்கண்டை சேர்ந்த பழங்குடியினரும் அஸ்ஸாம் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்காக சில நூற்றாண்டுகளுக்கு முன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இன்றுவரை தொடர்ந்து அஸ்ஸாம் தேயிலை தோட்டங்களிலேயே வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இனத்திற்கு அவர்கள் சொந்த மாநிலத்தில் ST ஜாதி சான்றிதழ் கிடைக்கிறது. ஆனால் புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் அஸ்ஸாமில் அவர்களுக்கு ST தகுதி கிடையாது. அதைக் கேட்டுத்தான் சம்பவம் நடந்த அன்று தலைநகர் குவாஹாத்தியில் ஊர்வலமாக சென்றார்கள். கிட்டத்தட்ட மூவாயிரம், நாலாயிரம் பேர் கலந்து கொண்ட ஊர்வலத்தில், சம்மந்தமில்லாமல் ஆங்காங்கே உள்ளூர் கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் ஆட்கள், ஊர்வலத்திலிருந்து சிதறி ஓடினவர்கள் போக கையில் கிடைத்தவர்களையெல்லாம் கொடூரமாக தாக்கினார்கள். அந்த காட்சிதான் இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது.

ப்ளாக் எழுத்துக்களை அப்படியே உள்வாங்கிக் கொள்வதிலுள்ள ஆபத்தை சுட்டிக்காட்டவே இதனை எழுதுகிறேன். மற்றபடி அந்த மிருகத்தனமாக தாக்குதலுக்கு நியாயம் கற்பித்தல் என் நோக்கமல்ல.

********

வகையாக ஒருத்தன் சிக்கினால் அவனை கும்பலோடு கும்பலாக சேர்ந்து மிருகத்தனமாக தாக்கி கொல்லும் மனோவியாதி எல்லா மனிதனுக்குள்ளும் ஆழ் மனதில் உள்ளூர உறைந்திருக்கிறது. ஊரில் ஒரு திருடன் சிக்கினால் அவனை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து உயிர் போகும் வரை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நம்ம ஊரில் சகஜமாக நடப்பது தானே? அதைப் பற்றி குற்றவுணர்வு நமக்கு என்றைக்காவது இருந்திருக்கிறதா? சென்னை சட்ட கல்லூரி மோதலில் மாணவர்கள் கும்பலாக சேர்ந்து இரு மாணவர்களை கொடூரமாகத் தாக்கியதை நாம் பார்க்கவில்லை? அப்பாவி மாணவிகளை அரசியல் ரவுடிகள் பஸ்ஸோடு வைத்து கொளுத்தவில்லை? ஜாதி / இன / மத கலவரங்களிலெல்லாம் நடப்பதென்ன? ஆயிரக்கணக்கில் இன்னார் இளையார் என்று பார்க்காத படுகொலைகள், கற்பழிப்புகள், கற்பனைகளை விஞ்சிய வன்முறைகள். பதிவு செய்யப்பட்டவைகளை விட செய்யாமல் விடப்பட்டவைகள் தான் அதிகம்.

தனி மனிதனாக இருக்கும்போது மனிதன் மனதில் உறங்கி கிடக்கும் வன்முறை, கும்பல் சேரும்போது விழித்துக்கொண்டு கோர தாண்டவம் ஆடுவது ஏன்? சிங்காரவேல் போன்ற மனோதத்துவ நிபுணர்கள் தான் விளக்க வேண்டும்.

*

Dr.Singaravelu:

எப்படி உடலுக்கு பசியும் உறக்கமும் அடிப்படையோ அது போல எல்லா மனிதனுக்கும் பொதுவான அடிப்படை உணர்வுகள் (basic instincts- sharan stone நடித்ததல்ல ) வன்முறையும் காமமும் மட்டுமே. நமக்கு குழந்தை பருவத்தில் கிடைக்கும் அன்பு, பாதுகாப்பு, கல்வியினால் வரும் அறிவு மற்றும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகள் நம்மை இந்த உணர்வுகளை பாதுகாப்பாகவும், பிரச்சினைகள் இல்லாமலும் வெளிப்படுத்த கற்று கொடுக்கின்றன. ஆனாலும் நாம் இந்த உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம்- மற்றவர்களை கடுமையான சொற்களால் காயப்படுத்துவதும், ragging, college election சண்டை, விளையாட்டு மற்றும் பல வழிகளில்.

ஆனால் இந்த அன்பு, கல்வியறிவு போன்றவை கிடைக்காத மனிதர்கள் மிக சுலபமாக இந்த வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த மாதிரியான வன்முறை செயல்களில் ஈடுபடும் கூட்டங்களில் (ஆமா கூட்டத்துக்கும், கும்பலுக்கும் என்ன வித்தியாசம்?) பொதுவாக இந்த மாதிரி மனிதர்கள் தான் இருக்கிறர்கள். Mass behaviour என்று ஒன்று உண்டு. அதாவது ஒரு கூட்டத்தில் இருக்கும்போது மனிதன் அந்த கூட்டத்தின் மன நிலையோடு ஒத்த எண்ணங்களையும், செயல்களையும் பிரதிபலிக்கிறான். தனியாக கூப்பிட்டு கேட்டால் அவன் கருத்து வேறு மாதிரியாக இருக்கக்கூடும். நாம எந்த மாதிரி இடங்களில் யாருடன் இருக்கிறோம் என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம். இது போன்ற ஒரு வன்முறையில் ஈடுபடும் கும்பலை பார்த்தால் நாம் ஒதுங்கி விடுவோம்.ஆனால் நான் முன்னே குறிப்பிட்ட மாதிரியான மனிதர்கள் இதில் பங்கு கொண்டு வன்முறைகளில் ஈடு படுகிறார்கள். இது இல்லாமல் அரசியல் காரணங்களுக்கவும், பணத்துக்காகவும் சில பேர் இதில் சேர்ந்து கொள்வதும் நடக்கிறது இல்லையா?

*
My reply to Dr.Singaravelu:

மிக மிக அருமையான விளக்கம் டாக்டர் சிங்காரவேலு. நன்றி. நீ பதில் எழுதவேயில்லை என்று நினைத்திருந்தேன்.

எல்லா மனிதனுக்கும் பொதுவான அடிப்படை உணர்வுகள் வன்முறையும் காமமும் மட்டுமே.

இது மனித குலத்தின் எவ்வளவு பெரிய துரதிஷ்டம்!! அன்பும், பண்பும் அடிப்படை குணமாக இருந்திருந்தால் உலகம் எவ்வளவு சௌஜன்யமாக இருந்திருக்கும்!

நம்பிக்கையாளர்களின் (believers of almighty and his creations) சிந்தனைக்கு: படைப்பு பிழைபட படைக்கப்பட்டது படைப்பின் குற்றமா? படைத்தவனின் குற்றமா?


ஆமா கூட்டத்துக்கும், கும்பலுக்கும் என்ன வித்தியாசம்?

கூட்டம் என்பதை நாகரிகமான மக்களின் கூடுதல் என்றும் (gathering of civilized people), முன்னறிவிப்பின் பிறகு ஒரு நோக்கத்துடன் கூடிய மக்கள் திரள் (gathering after some notification or announcement) என்றும் பொருள் கொள்ளலாமென தோன்றுகிறது.

கும்பல் என்பதன் பொருள் மேற்சொன்னதற்கு எதிர்பதமானது.

0 comments:

Post a Comment