பழசு என்றும் புதுசு: ஓடும் மேகங்களே

Posted: Friday, June 11, 2010 | Posted by no-nononsense | Labels:
பழைய பாடல் ரசிகர்கள் என்னையும் தவிர்த்து வேறு யாராவது ஒருவராவது இருப்பார் என்னும் நம்பிக்கையில் weekend list-ல் பழைய பாடல்களையும் இனி சேர்க்க இருக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=DAleVIM18Cw


நாடாளும் வண்ணமயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

மேட்டுக்குடி காதலை மறுப்பதைக்கூட இவ்வளவு கவிநயத்துடன் செய்யமுடியுமா? விசுவநாதன் ராமமூர்த்தியின் இசையும், கண்ணதாசனின் பாடல் வரிகளும் இணைந்து அதை செய்து காட்டும் ஜாலம் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம்
பயணம் போகின்ற நேரம்
காதலியா மனம் தேடும் இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு

பாடல் வரிகளை உள்வாங்கிக்கொண்டு இசையுடன் கரைந்து என்னால் சொல்லமுடிவதெல்லாம் அற்புதம் என்னும் ஒரு வார்த்தையை மட்டும்தான்.

ஆயிரத்தில் ஒருவனில் வரும் எல்லா பாடல்களும் என்னுடைய விருப்பப் பட்டியலில் உண்டு.

0 comments:

Post a Comment