பழ.கருப்பையாவின் ‘குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா’ கட்டுரயை முன்வைத்து

Posted: Thursday, June 17, 2010 | Posted by no-nononsense | Labels:
பழ.கருப்பையாவின் ‘குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா’ கட்டுரயை முன்வைத்து:

பழ.கருப்பையாவின் அனல் தெறிக்கும் இன்னொரு அருமையான கட்டுரை. அத்தனையும் சத்தியம். ‘பேய்கள் அரசாளும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று ஒரு கூற்று உண்டு. பேய்கள் என்னும் வார்த்தைக்கு பதில் ஜனநாயகம் என்று போட்டாலும்கூட பொருத்தமாகவே இருக்கும். இது தோல்வியடைந்த ஜனநாயகம்.

சுற்றுப்புற சூழல் சீர்கேடுகளில் இருந்து இந்த உலகம் தப்பிப் பிழைத்து கிடந்தால், நம் மக்கள் ஏதாவது ஒரு நூற்றாண்டில் முழுமையாக நாகரிகம், கல்வி, சுயமரியாதை, அரசியல் தெளிவு பெறக்கூடும். அன்று இதையெல்லாம் எதிர்க்கும்/கண்டிக்கும்/கழுத்தை பிடித்து பதவியிலிருந்து வெளியே தள்ளும் சுரணை வந்தாலும் வரக்கூடும்.

*

இன்று ஏனோ என்னை வந்தடைவதெல்லாம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் செய்திகளாக, கட்டுரைகளாகவே உள்ளன. கசாப்புக்கடையில்தான் வாழ்க்கை என்றால், அச்சூழ்நிலைக்கு ஏற்ப மனதை தகவமைத்துக் கொள்ளாவிடில் வீணில் புருவம் சுருக்கி, நகம் கடித்து, பெருமூச்சு விட்டு நம்மை நாமே சுயவதை செய்துகொண்டுதான் வாழ வேண்டியிருக்கும்.

இனி, எது நடந்தா எனக்கென்ன.. எவனா இருந்தா எனக்கென்ன.. என் பர்ஸில் இருப்பதென்ன.. என்று வாழ்ந்தால்தான் வாழமுடியும் போலிருக்கிறது.

0 comments:

Post a Comment