ஞாநி - என் நோக்கில்

Posted: Thursday, June 17, 2010 | Posted by no-nononsense | Labels:
சமகாலத்தின் சமூக கோபங்களின் அடையாளம்; பக்க சாய்வற்ற விமர்சனத்தின் சின்னம் - ஞாநி. இவருடய பல கருத்துகளில் எனக்கு மாறுபாடு உண்டு. அதற்காக அவருடைய விமர்சனத்தின் நேர்மையை சந்தேகிக்க முடியாது. தமிழ்நாட்டில் கருணாநிதியை இவர் அளவுக்கு கறாராக விமர்சித்தவர் யாரும் கிடையாது. அதனாலேயே விகடனில் இருந்து துரத்தப்பட்டார். அதனால் மட்டுமே இவர் பேனாவின் கூர்முனை மழுங்கியதில்லை. எங்கே எழுதினாலும் ஒரே டெசிபலிலான குரல்தான்.

ஞாநியின் ‘தீம்தரிகிட’ தான் எனக்கு சமூகத்தின் மீதான மாற்று பார்வையை கற்றுத் தந்தது. அச்சிறுபத்திரிக்கை சில வருடங்கள் முன்பு நின்று விட்டது. அதற்கு பிறகு வேறு எங்கும் முலாம் பூசாத கருத்துகளை நான் படிக்கவில்லை.

சென்னையில் தங்க நேரும் நாட்களில் அடுத்தமுறை நான் சந்தித்து சிறிது நேரமாவது அளவளாவ விரும்பும் ஆளுமைகளில் ஒருவர் ஞாநி. இன்னொருவரை ஏற்கெனவே புக் பண்ணி வைத்து விட்டேன். அவர், பாரதி மணி. (இவரைப்பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியிருக்கிறேன்).

0 comments:

Post a Comment