பழசு என்றும் புதுசு: தேடினேன் வந்தது

Posted: Friday, June 18, 2010 | Posted by no-nononsense | Labels:
யாருக்கும் மனதில் நினைத்ததை அடைந்து விட்டால் ஆனந்தம்தான். அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்த ஆடிப் பாடுவதை விடவும் களிப்பு தரும் வேறு ஒரு வழி உண்டோ இவ்வுலகில்?

அதிலும் ஆடுவது அழகு நங்கையாக இருந்து, ஆட்டமும் அற்புதமாக அமைந்து விடும் போது, அதைக் காணும் கண்களுக்கு பரவசம் விருந்துதான்...!

--

சும்மா, FM ரேடியோ ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன்.

டைரக்டர் ஸ்ரீதர், சிவாஜியுன் இணைந்து எடுத்த காமெடி படம்: ஊட்டி வரை உறவு. விஸ்வநாதன் இசை!

இப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட், என்றாலும், எனக்கு அவற்றில் ’தேடினேன் வந்தது’ முக்காலத்து விருப்பப் பாடல். இப்பாடலின் நடன அசைவுகள் அக்காலத்தில் பிரபலமான ஒன்று. ஆடலை ரசித்தபடி அலட்டல் இல்லாமல் அஸால்டாக சிவாஜி கொடுக்கும் போஸ்கள் - இதன் அழகுக்கு அழகு!

”என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
மனம் பரப்பும் சுற்றி”

என்ன ஒரு சந்தம்! கண்ணதாசனைத் தவிர இவ்வளவு எளிமையான வார்த்தைகளில் குதூகலத்தை இட்டு நிரப்ப யாரால் முடியும்!

‘பெண் என்றால் தெய்வமாளிகை திறந்து கொள்ளாதோ’ என்று சுசீலா உச்ச ஸ்தாயில் பாடும்போது உடன் இசையை ரசிக்கும் அத்தனை உதடுகளும் அந்த ராகத்துடன் இணைந்து முணுமுணுக்க ஆரம்பித்து விடுகின்றன.

http://www.youtube.com/watch?v=8dhDt0Q7e8w


படம் : ஊட்டி வரை உறவு
பாடல் : தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
பாடியவர்: சுசீலா


தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது

(தேடினேன்)

என் மனத்தில் ஒன்றைப் பற்றி
நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும்
மனம் பரப்பும் சுற்றி
பெண் என்றால் தெய்வ மளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...

(தேடினேன்)

இனி கலக்கம் என்றும் இல்லை
இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை
திறந்து கொள்ளாதோ...ஓஹோ...
ஓஹோ. ஓஹோஹோ...

0 comments:

Post a Comment