தமிழில் எழுதும் போது ...

Posted: Wednesday, May 4, 2011 | Posted by no-nononsense | Labels: ,
எதை எழுதினாலும் அதை ஒருமுறை receivers end-ல் இருந்து வாசித்துப் பார்க்க வேண்டும். ஆனால் பொதுவாக நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்களின் போது அதில் பெரும்பாலும் நாட்டமிருக்காது. ‘எல்லாம் போதும் போதும்..’ என்று அனுப்பிவிடுவோம். அது ஒரு இயல்பான விஷயம். அதை அப்படிப் பார்க்காமல் நமக்கு தேவைப்படும் பயிற்சியை எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக நினைக்க வேண்டும். அதன்மூலம் நம்முடைய எழுதுதமிழை இழைத்து இழைத்து மெருகேற்றிக்கொள்ளாலாம். இங்கே நண்பர்களிடையே முடியாவிட்டால் வேறு எங்கும் அந்த சுதந்திரம் கிடைக்காது.

அந்நிய மொழி போகட்டும். தாய்மொழியில் தெளிவுபட பேசுவதும் எழுதுவதுமான ஒரு articulation skill இல்லாமல் இருப்பதும் தன்னளவில் ஒரு குற்றமே. மனம் நினைப்பதை சரியான வார்த்தைகளில் நாவிலும் விரலிலும் கொண்டுவரமுடிய வேண்டும். அது பெரிய கம்ப சூத்திரம் ஒன்றுமில்லை. அடிப்படையில் கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தால் போதும்.

இந்த ஒருமை / பன்மை குழப்பம் மிகவும் சகஜமாகி விட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
நம்புவது சிரமம், ஆனால், வைரமுத்து , வாலி கூட இதற்கு விதி விலக்கு இல்லை (அது சந்தத்திற்காக என்ற சால்ஜாப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது). துரதிஷ்டவசமாக அந்த பாடல் வரிகள் எனக்கு இப்போது ஞாபகம் வரவில்லை.


துட்டுக்குப் பாட்டு எழுதும் சந்தக்கட்டு வேலையை விட்டு விடலாம். அதில் வாலி என்ன வைரமுத்து என்ன.. எல்லோரும் ஒன்றுதான். இங்கே பிழை சகஜமாகிவிட்டது என்று குறிப்பிடுவது இணையதளங்களில் புழங்கும் தமிழை என்றால், நாம் நல்ல தமிழைத் தவறான இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். Self-publishing-ல் பிழைத் திருத்த கம்போஸிடர்கள் கிடையாது. மீண்டும் மீண்டும் படித்து வரிகளை சீரமைக்க எடிட்டர்கள் கிடையாது. அவரவர் கையில் என்ன வருகிறதோ, அதுதான் தமிழ்; எழுத்து; சுயஇலக்கியம். அதனால் நல்ல தமிழை வாசிக்கவும், கற்கவும் ஆர்வமுள்ளோர் நல்ல எழுத்தாளர்களின் நூல்களின் வழியாக அதை மேற்கொள்ளலாம். இது என் அனுபவ பகிர்வு.

0 comments:

Post a Comment