சிவப்பு சீனா

Posted: Sunday, May 29, 2011 | Posted by no-nononsense | Labels:
சமீபமாக சீனாவின் சரித்திரம் மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றிய மூன்று நூல்களை அடுத்தடுத்து வாசித்து முடித்திருக்கிறேன். மூன்றாவதை - சிவப்பு சீனா (விகடன் பிரசுரம்) - இன்று முடித்தேன்.

சீனாவின் நீண்ட நெடிய அரசாட்சி வரலாறு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஞ்சூக்களின் அரசாட்சியுடன் முடிவுக்கு வந்தது. சன்-யாட்-சென்னின் புரட்சியாலும் முயற்சியாலும் சீனாவில் குடியரசு பிறந்தது. இந்த நூல் சீனா, மிங் வம்சத்தினரிடமிருந்து மங்கோலியாவை சேர்ந்த அந்நியர்களான மஞ்சூக்களின் கைக்கு எப்படிச் சென்றது என்பதில் இருந்து ஆரம்பித்து, மஞ்சூக்களின் ஆளுகையின் கீழ் அது எப்படியெல்லாம் மேற்கத்திய நாடுகளால் சுரண்டப்பட்டது, ஜப்பானின் ஆதிக்கம் சீனாவில் ஏற்படுத்திய பாதிப்புகள்
அடுத்து சமகால சீனாவைப் பற்றிய விரிவான நூல் ஏதும் அகப்படுகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். முன்பு நான் இங்கே வாசிப்பனுபவம் பகிர்ந்து கொண்டிருந்த பல்லவி ஐயரின் ‘சீனா - விலகும் திரை’ ஓரளவு நல்ல நூல். ஆனால் அதை ஒரு அறிமுக நூலாக மட்டுமே கொள்ள முடியும்.

கிழக்கு பதிப்பகத்தில் ‘நீயா நானா - இந்தியா சீனா வல்லரசு போட்டி’ என்று ஒரு நூல் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கம் போல் விலைதான் அச்சுறுத்துகிறது. 100 ரூ மதிப்பிலான நூல்களை செம்பதிப்பு என்று போட்டு இரு மடங்கு விலையில் விற்பார்கள்.

என் அனுபவத்தில் விகடன் பிரசுரங்களில் வெளியாகும் நூல்களே மலிவானவையும் தரமானவையும். ஆனால் விரிவானவையாக இருப்பதில்லை என்பது மட்டுமே குறை. அறிமுக வாசிப்பு தேவைப்படுவோர் படிக்கலாம்.

மஞ்சூக்களின் ஆளுகையின் கீழ் அது எப்படியெல்லாம் மேற்கத்திய நாடுகளால் சுரண்டப்பட்டது, ஜப்பானின் ஆதிக்கம் சீனாவில் ஏற்படுத்திய பாதிப்புகள், அபினி போர், ஹாங்காங் கைமாறியது ... என்று முக்கியமான சரித்திர நிகழ்வுகளை கோடிட்டு காட்டுகிறது. மாவோவின் செம்படை புரட்சி என்னும் ஆசியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வை, சீனாவின் சரித்திரத்தை புரட்டிப்போட்ட சம்பவத்தையும் அதன் பின்விளைவுகளையும் ஒரு அறிமுகமாக தருகிறது.

ஆசிய நிலப்பரப்பில் நாம் அவசியம் ஆய்ந்தறிந்து கொள்ள வேண்டிய இரு நாடுகள் சீனாவும் ஜப்பானும் என்பது என் கருத்து. இரண்டும் தன்னை பல நூற்றாண்டுகளாக வெளியுலகில் இருந்து துண்டித்துக்கொண்டு வாழ்ந்தவை என்பதால் தனக்கென பிரத்யேக கலாச்சார பின்புலத்தைக் கொண்டு இயங்குபவை.

சீனாவை அதன் யுவான் வம்சத்தின் குப்ளாய் கானில் இருந்து இன்று வரை ஓரளவு நுனிப்புல் மேய்ந்து விட்டேன். ஜப்பான் குறித்த நூல்கள் தான் இன்னும் அகப்படவில்லை.

0 comments:

Post a Comment