அறிவியல் ஆபத்து

Posted: Sunday, May 1, 2011 | Posted by no-nononsense | Labels:
இயற்கையை விஞ்சப் பார்க்கும் அறிவியல் ஆபத்துக்கே அதிகம் இட்டுச்செல்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும் இயற்கைக்கு மாறான துர்மரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் எல்லாவற்றிலும் மனிதனின் வேலையை எளிமைப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்ட ஏதாவது ஒரு இயந்திரம், ரசாயனம், செயற்கை ஆற்றல் சம்மந்தப்பட்டிருக்கும். யோசித்துப் பாருங்கள்.

அறிவியலால் உயிர் பிழைச்சது ? அதை விட அதிகம் இல்லையா?

அதுவும் உண்மைதான். அறிவியலுக்கு மறுபக்கமும் உண்டு என்பதை சுட்டுவதே என் கூற்றின் நோக்கம்.

இயற்கையோடு இயைந்த வாழ்வில் மனிதனின் மரணம் இயற்கையாக இருந்தது. இன்று எத்தனை எத்தனை வாகன விபத்துக்கள், புதிது புதிதான நோய்கள். சாப்பிடும் சாப்பாடு விஷமாகிவிட்டது. காற்று தூய்மை கெட்டுவிட்டது. ஆயுதங்கள் நவீனமயமாகி கொத்து கொத்தாக உயிரை மாய்க்கின்றன. அணு விபத்துகளால் உலகம் பெரிய ஆபத்தை சந்திக்கவிருக்கிறது. ஓசோன் ஓட்டை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. பனி உருகுகிறது. சூழலியலில் மாசு பெரும் மாற்றங்களை விளைவித்து வருகிறது (environmental pollution). இதெல்லாம் நிச்சயம் அறிவியல் செய்துள்ள பெரும் கேடு.

அதன் மருத்துவ முன்னேற்றம் மட்டுமே அதை போற்றி பாராட்ட இருக்கும் ஒரு குறிப்பான நல்ல விஷயம். பல பெருநோய்களை அது வென்றுவிட்டது. ஆதிகாலத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 30க்குள். இன்று அறுபதுக்கும் மேல். இது அறிவியலின் மகத்தான சாதனைதான்.

மற்றபடி, தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைச் சொல்ல வேண்டாம். அது இல்லையென்றாலும் மனிதன் ஜீவித்திருப்பான். அது பணக்காரர்களின் பெருவியாபாரத்திற்கு பெருமளவில் உதவும் ஒரு சாதனம்; அவ்வளவே. பத்து வருடங்களாகத்தானே செல்போனும், இண்டர்நெட்டும். ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை கம்பித் தொடர்பு தொலைபேசி கூட கிடையாதே. என்ன குறைந்துவிட்டது?

அறிவியலால் நன்மை உண்டு. வாழ்க்கையில் வசதிகள் பெருகிவிட்டன. எல்லாம் easy going ஆகிவிட்டது. ஆனால் அதனால் மனித குலத்திற்கு நீண்ட கால நோக்கில் தீமையே அதிகம். அவற்றை கண்கூடாக பார்க்க நாம் இருக்க மாட்டோம் என்பதால் இன்றைய வசதிகளை உத்தேசித்து நல்லெண்ண கருத்துச் சொல்ல முனையலாம்.

இது தனித் தனியாக அலசி விரிவாக பேச வேண்டிய விஷயம்.

0 comments:

Post a Comment