காவியம் கவிதை: பிரமிள்

Posted: Wednesday, May 4, 2011 | Posted by no-nononsense | Labels:
வேறொரு இழையில் ரிஷி பகிர்ந்து கொண்ட ஒற்றை இறகு கவிதையைப் படித்தவுடன் எனக்கு பிரமிளின் மிகப்புகழ்பெற்ற இறகு கவிதை உடனே ஞாபகம் வந்தது. உலகத்தரமான கவிதை என்று இலக்கிய உலகில் போற்றுப்படுவது அது.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது.

தமிழ் இலக்கிய ஆக்கங்களில் ஆர்வம் காட்ட விழைவோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இலக்கிய முகம் பிரமிளுனுடையது. கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரமிள் என்கிற தருமு சிவராமு, இலக்கிய ஆர்வம் காரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்து மிகத் தீவிரமான ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்டதுடன், அந்தத் தீவிரம் காரணமாகவே வாழ்க்கையை தொலைத்து வறுமை பீடிக்க தெருவில் அலைந்து தொலை தூரம் சென்று முகவரி அற்று இறந்து போனார்.

பாரதிக்குப் பிறகு அதிக மரியாதையை சம்பாதித்துக் கொண்ட பின்நவீனத்துவ கவிஞர் பிரமிள்.

அவர் பத்தோடு பதினொன்றாகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தனிப்பதிவு.

0 comments:

Post a Comment