ஒன்றை தேடப் போய் சில சமயம் பல நாள்களாக தேடி சலித்த வேறு ஒன்று அகப்படும். இன்று அப்படியாக ஒரு பழைய ரசீதை தேடி என்னுடைய அலமாரியில் முத்து குளித்துக்கொண்டிருந்த பொழுது கீதை சம்மந்தப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகள் சில அகப்பட்டன. தேடியதை விட்டு விட்டு கிடைத்தவற்றை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் குறிப்புகளின் காலம் குறைந்தது ஆறு வருடங்கள் இருக்கலாம். கீதையை மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது. கீதையை பொறுத்தவரை அது மகாபாரதத்தில் உபதேசமாகும் இடம் மட்டுமன்றி கீதையின் உள்ளடக்கமான பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும்போது...
எல்லே இளம்கிளியே
எல்லே இளம்கிளியேமார்கழித் திங்கள் 15ஆம் நாளில் பக்தர்கள் பாடி மகிழும் ஆண்டாள் திருப்பாவையின் கீழ்காணும் 15ஆம் பாடல் ஓர் அற்புதம்! ஒரு சிறிய அழகிய நாடகமே அதில் அடங்கியுள்ளது. பக்தியோடு தமிழின் செழுமைக்காகவும் பக்தி இலக்கியங்களை படியுங்கள் தோழர்களே. எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்....
அதிதி தேவோ பவ
எல்லா மலேசிய தமிழர்களுக்கும் ஒரு கனவு இருக்கும். என்றாவது ஒரு நாள் தமிழக மண்ணை மிதித்து ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் ஆசைதான் அது. தங்களுடைய மூதாதையர்களின் பூமி என்பதுடன் இதுவரை சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டும் கண்டு களித்து வரும் இடங்களை நேரிலும் பார்க்கும் ஒரு ஆர்வம் என்றும் சொல்லலாம். காலக்கிரமத்தில் இந்த ஆசை என்னுடைய மலேசிய தோழி ஒருவருக்கும் வந்து சேர்ந்தது. அவர் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய குணநலன்கள் எனக்கு நன்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியொட்டிய சிந்தனைகளை கொண்டவர்....
கமல் பற்றி மேலும் ...
தான் ஒரு சகலகலா வல்லவன் என்று மற்றவர்கள் புகழ்வதை நம்பி கமல் எதிலும் நீக்கமற நிறைந்திருக்க நினைக்கிறார். நடிக்க மட்டும் செய்தால் நல்லது.எந்த மாதிரி வேண்டுமானாலும் நவரசங்களை வெளிப்படுத்தி நடிக்கட்டும். ஆனால் சமீபமாக ”இதோ, கமல்ஹாசன் நடிக்கிறேன், பார்” எனும்படி கன்னக்கதுப்புகளில் வித்தக கர்வத்தை தேக்கி வைத்துக்கொண்டு நடிக்கும் நடிப்பு வேண்டாம். இது கமல்ஹாசனின் இயல்பு அல்ல. எல்லோரும் அவரை ஒரேடியாக புகழ்ந்து புகழ்ந்து அவரும் முகஸ்துதிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு அதை நடிப்பில் வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டாரோ என்று சந்தேகமாக உள்ளது. 70-களில்...
அவலை நினைத்து உரலை
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்" (ஆண்டாள் திருப்பாவை) நீராடப் போதுவீர்.... ! ஹ்ம்ம்ம்....., இன்று எந்த கன்னிமார் அறிவார் அந்த பாவை நோன்பு?! திருப்பாவை போடு; திருப்பள்ளியெழுச்சி பாடு; ஈரம் சொட்ட சொட்ட மாரியம்மன் கோவிலுக்கு ஓடு. என்ன செய்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் என்ன கவலை. அந்தக் கவலை வந்து விட்டால் கோவில் குளம் பக்கமெல்லாம் பிறகென்ன வேலை? பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள். இன்னோசண்ட் ஃபெல்லோஸ். ஓ பிதாவே.. இவர்களை ரட்சியும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தாரில்லை. ஆமென்! (மார்கழி...
தேகம்
Posted:
|
Posted by
no-nononsense
|
0
comments

இரண்டு நூல்களை தற்சமயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று முன்பே சொன்னது போல பல்லவி ஐயரின் சீனா-விலகும் திரை. அதை ஒரே நாளில் படித்து முடித்துவிட வேண்டும் என்னும் என் முயற்சி ஜெயமாகவில்லை. என் நேரம் என்னுடையதாக மட்டும் இல்லாமல் இருப்பதுதான் காரணம். மற்றொன்று என்னுடைய சென்னை நண்பன் எனக்கு படிக்க கொடுத்திருக்கும் ‘தேகம்’. இந்த தேகம் நாவல் தான் சாருநிவேதிதா அண்மையில் எழுதி வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சை நாவலை சுற்றி அல்ல, அந்த வெளியீட்டு விழாவைப் பற்றி என்பதுதான் வேடிக்கை. வேடிக்கை சாருவுக்கு...
2010 இல் பிடித்தப் படங்கள்
2010-ல் நான் பார்த்த படங்கள் குறைவு. படம் நன்றாக இருக்கிறது என்று கிடைக்கும் செய்திகளை அடியொட்டியே என் படத் தேர்வுகள் அமைந்தன. அவற்றில் எனக்கு பிடித்திருந்தவை:களவாணிஆயிரத்தில் ஒருவன் நான் மகான் அல்லஎந்திரன்பாஸ் எ பாஸ்கரன்மைனா, மதராசாபட்டினம் - நல்ல படங்கள் என்று கேள்வி. ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை.பார்த்ததில் சுமாரான படங்கள்தமிழ்ப் படம்இரும்புகோட்டை முரட்டு சிங்கம் நந்தலாலாஅங்காடித்தெருசிங்கம்பார்த்து நொந்தவைகோவாராவணன்சுறாமாஞ்சா வேலுஜக்குப...
டி.ஆர் பற்றி
”இது குழந்தை பாடும் தாலாட்டு” பாடலை கேட்டு விட்டு இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கண்ணதாசன் பெரிதும் பாராட்டினாராம். அது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிக்கு சமம். ஒரு பாடலாசிரியராக டி.ஆருக்கு நான் மிகப் பெரிய ரசிகன். நாம் என்னதான் எள்ளி நகையாடினாலும் ராஜேந்தர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். எடுத்துக்கொண்ட துறையில் அவர் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஒரு தாயின் சபதம் படத்திற்கு கிடைத்த ஓபனிங் எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தான் மட்டுமல்ல திட்டமிட்டு அடித்தளமிட்டு தன் மகனையும் வெற்றி பெற வைத்தவர். அதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க...
ராகுல் காந்தியின் அரசியல்
ராகுலை விமர்சிக்க என்ன இருக்கிறது இவர்களுக்கு? வெறும் அர்த்தமற்ற பிதற்றல்கள். அவர் இளைஞர் காங்கிரஸூக்கு அடித்தளமிடும் பாணி, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் ஒருமுறைகூட கருணாநிதியை சந்தித்து மரியாதை நிமித்தம் முதுகு சொறியாத குணம் இதெல்லாம் அவருக்கென்று அரசியலில் ஒரு தனிப்பாதை இருப்பதையே காட்டுகிறது. அண்மையில் இந்து தீவிரவாதம் பற்றி அவர் பேசியுள்ளதை காணும்போது பொதுபுத்திக்கு தன்னை அவர் ஒப்புக்கொடுத்துவிட வில்லை என்பதையும் உணர முடிகிறது. இதே போக்கில் அவர் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டால் பிற்காலத்தில் ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவாக வாய்ப்புண்டு....
இது பணக்காரர்களுக்கான தேசம்
நடப்பை நிர்தாட்சண்யமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரை. இதில் முதல் குற்றவாளி நம்மை ஆளும் அரசுகளே. இந்த மாதிரி அலட்சிய போக்குகளையெல்லாம் படிக்க படிக்க இந்தியனாக பிறக்க மாபாவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குடிமக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கம். கொண்டு வரப்படும் எல்லா திட்டங்களும் ஓட்டுக்களை குறிவைத்து மட்டுமே. எல்லாவற்றிலும் ஊழல்கள். ஆனால் அவற்றை கண்டித்து ஒரு பொதுநல கிளர்ச்சியும் இங்கே கிடையாது. பொதுவாகவே காலம் காலமாக இந்தியர்களிடையே ஒற்றுமை கிடையாது. அதனால்தான் வியாபாரம் செய்யவந்த கம்பெனியார் நாட்டை கைப்பற்றிக்கொள்ள...
கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்
கமல் யாருடைய கட்டாயத்தின் காரணமாக நீக்கியிருந்தாலும் அது நல்ல முடிவு. இனி மக்களின் கவனம் படத்தின் மீது மட்டும் இருக்கும். அநாவசிய சர்ச்சைகளின் மீது இருக்காது. வாய் நாற்றம், காமக் கழிவு போன்ற வார்த்தைகள் வெகுசனவெளியில் பயன்படுத்தத் தக்கன அல்ல. இதையே கமல் ஒரு நூலாக வெளியிட்டு அதில் தன் கருத்துகளை கவிதைகளாக்கி இருந்தால், அங்கே வார்த்தைகளைப்பற்றிய வாதங்களுக்கு இடமில்லாமல் கருத்துக்களை மட்டும் முன்வைத்து விவாதிக்கலாம். ஆனால் சினிமா என்பது U சான்றிதழ் பார்த்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் இடம். கொஞ்சம் கவனம் தேவைதான். செக்ஸ் கல்வி அவசியம்தான்...
ஊர்ப் புலிகளும் ஒரிஜினல் புலிகளும்
இரண்டு நாள்கள் முன்பு சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் சுந்தரவன காடுகளை ஒட்டி வாழும் கிராம மக்களின் வாழக்கையைப் பற்றி காட்டிக் கொண்டிருந்தார்கள். சுந்தரவனக் காடுகளை பற்றி நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அவை மாங்குரோவ் மரங்களை அதிகளவில் கொண்டிருக்கும் சதுப்பு நிலக் காடுகள். கங்கை நதியின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்த காடுகளில்தான் அழிந்து வரும் இனமான வங்காளப் புலிகள் (Royal Bengal Tigers) வசிக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில்...
நிஷ்காமிய கர்மம் - ஒரு தர்க்கம்
வாலி என்றதும் அவர் இந்தவார விகடனில் எழுதியுள்ள தொடர் ஞாபகம் வருகிறது. கீதை வலியுறுத்தும், கருப்பு சட்டைக்காரர்கள் கண்டனம் செய்யும் நிஷ்காமிய கர்மத்தைப்பற்றி உயர்வுநவிற்சியாக எழுதி மகிழ்ந்திருக்கிறார். துட்டுக்கு பாட்டு என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செய்யும் அவரளவில் அதில் பிரச்னையில்லை. அதை குறிப்பிட்ட சாதியினரின் மீது ஏவி விடும்போதுதான் பிரச்னை உண்டாகிறது. உண்டாகி பல பழம் பழக்கங்கள் துண்டானதும் இப்படித்தான். ஒரு சில வருடங்கள் முன்பு ரஜினி ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். அந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த தட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது....
வானும் மண்ணும்
பொழுது போகாத நேரங்களில், நூல்களும் உடன் சேர்ந்து அலுப்பூட்டும் பொழுதுகளில் இசையை கேட்பதுடன் அதன் வரிகளை கவனமாக கவனித்து ரசிப்பது எனக்கு வாடிக்கை. இக்குழுவின் whats happening சந்துமுனையில் கூட நான் அவ்வாறு பல சிந்துகளை பாடி திரிந்தது உண்டு. லய, சந்த, தாளங்களுக்கு ஏற்ப மெட்டுக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இட்டுக் கட்டுவது ஒரு தனி கலை. அது எல்லோருக்கும் எளிதில் கைவரக் கூடியதல்ல. கூடி வரப்பெற்றவர்களின் புகழ் எளிதில் அகலக் கூடியதும் அல்ல.
அதனால்தான் ‘அள்ளி தந்த பூமி அன்னையல்லவா.. சொல்லி தந்த வானம் தந்தையல்லவா’ என்ற ஒரே...
கார்த்திகை தீபம் - சில நினைவுகள்
தீபமா அல்லது இன்னொரு தீபாவளியா என்று சந்தேகிக்கும்படியான பட்டாசு வெடிச் சத்தங்களுடன் நேற்று கார்த்திகை தீபம் ஜோராக கடந்து சென்றிருக்கிறது. ஒருநாளும் இல்லாத திருநாளாக கடைக்கு அழைத்துச் சென்று டிஸன் தேர்வு செய்து விளக்கு வாங்கிக் கொடுத்தது முதல், அதற்கு திரி திரித்து தந்து, எண்ணை ஊற்றி வைத்து, விளக்கை வைக்க வாழையிலையை கச்சிதமாக கத்தரித்து தந்து, காற்றுடன் மல்லுக்கட்டி ஒளி விளக்கை ஒழியா விளக்காக குறைந்தது 1 மணி நேரம் வரை தூண்டி விட்டு கட்டிக்காத்தது வரை.. என்னளவில் ஒருமாதிரி கொண்டாட்டமாகத்தான் போனது நேற்றைய...
பருவமழை
மழைக்கால மேகங்கள் தங்கள் வாடிக்கைக்கு திரும்பி விட்டனவா, அல்லது கிளைமேட் சேஞ்ச் தமிழகத்துக்கு மட்டும் அளித்துள்ள பாஸிடிவ் எஃபக்டா.., எதுவாகிலும் மேட்டூர் அணை 111 அடியை எட்டும் அளவிற்கு இந்தமுறை பருவமழை கருணை மழை பொழிந்துள்ளது. மகிழ்ச்சி! விவசாயம் செழிக்கட்டும். அதன்போதாவது உணவு பொருள்கள், குறிப்பாக காய்கறிகள் விலை குறையட்டும்.
மழை பொழியும் போதெல்லாம் என் மகள் தனக்கு தெரிந்த ஒரே மழைப்பாடலான rain rain go away-ஐ பாடுகிறாள். நானும் உடன் சேர்ந்து உற்சாகமாக பாடிக்கொண்டுதான் இருந்தேன் - மாலனின் இந்த வரிகளை படிக்கும் வரை:
....மழை என்றால் சந்தோஷமான...
கைபோன போக்கில் (4)
Posted:
Friday, November 19, 2010 |
Posted by
no-nononsense
|
Labels:
சமூகம்,
தொழில்நுட்பம்
0
comments
தினமும் ஒரு எழுத்துப் பயிற்சியாக ஒரு மணி நேரம் எதையாவது கைபோன போக்கில் கிறுக்கித் தள்ள வேண்டும் என்று எண்ணிதான் இந்த தொடரை ஆரம்பித்தேன். ஒரு சில நாட்கள் கூட தொடர்ந்து எழுத முடியவில்லை. லௌகீகம் உள்ளிழுத்துக் கொண்டது. இன்றிலிருந்தாவது குறைந்தது ஒரு வாரத்திற்காகவது முடிகிறதா என்று பார்ப்போம்.**சற்று முன்பு லண்டனில் Mcjob செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். 3 மாதமாக வேலையில்லாமல் இருக்கிறாராம். ஸ்காட்லாந்தில் ரெண்டால் நம்பர் பிஸினஸ் ஒன்றுக்கு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகவும், இன்னும்...
கமல் - ரஜினி மோதல் (1981)
அது கமல், ரஜினி இருவருமே கே.பாலாஜி தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினி திருமணமும் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அது சமயம் திருமணத்தையொட்டி பாலாஜி சினிமா முக்கியஸ்தர்களுக்கு ஒரு விருந்து கொடுத்திருந்தார். நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரைபுரண்டோடுவது இயற்கை. மது தந்த மயக்கத்தில் தனி நபர் விமர்சனங்கள் தலை தூக்கின. அது களேபரத்தில் முடிந்தது. அடுத்த நாள் ரஜினி-கமல் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அப்போது குமுதம் லைட்ஸ் ஆனில் எழுதப்பட்ட கிசுகிசு:
“ஏழுமலையான்...
மம்மி டாடி
காலையில் அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். இடையூறாக திடீரென்று வெடித்து கிளம்பியது என் மகளின் அழுகுரல். ‘ரம்பஸ்கி கடிச்சிருச்சி..’ என்று ஒரே அழுகை. அது வேறு ஒன்றுமில்லை, கொசு கடித்திருக்கிறது. உடனே எந்திரனில் வரும் ரங்கூஸ்கி கொசு அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. உடனே ரோபோ போடு என்று அடுத்த அடம். ரோபோ என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் படமும், ரஜினி, ஐஸ்வர்யா ராய் பெயர்களும் அவள் ரசனைக்கு அத்துபடி.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய காலம் போய் நடிகர்களை காட்டி சன்சோறு ஊட்டப்படும்...
படித்தால் மட்டும் போதுமா?
மிஸ்கின் இதேபோல் உதவி இயக்குநர்களை விமர்சித்ததை இன்னொரு பேட்டியிலும் பார்த்திருக்கிறேன். புத்தகம் அதிகம் படிப்பவர்கள் அதை சொல்லி பெருமைபட்டுக் கொள்வதை விட படிப்பார்வம் இல்லாதவர்களை படிக்க ஊக்குவிப்பதிலேதான் அதிக விருபபார்வம் கொண்டிருப்பார்கள். இப்படி விமர்சிப்பதில் அல்ல. மிஸ்கினும் நிறைய படிக்கக் கூடியவர் தான். சொல்லப்போனால் இவர் அளவுக்கு இலக்கியம் படித்தவர்கள் எழுத்தாளர்களிலேயே கூட அதிகம் இருக்க மாட்டார்கள். அதற்கு அவரின் ‘மிஸ்கின்’ என்னும் புனைபெயரே அத்தாட்சி. ஆனால் அதிகம் படிப்பவர்களுக்கு இயல்பாக ஏற்படும் நிறைகுடம் தளும்பா அடக்கம் இவருக்கு இன்னும்...
கைபோன போக்கில் (3)
ஐந்து வருடங்களாக வைத்திருந்த செல்போன் எண்ணை என் அசிரத்தையால் கோட்டை விட்டு விட்டேன் என்பது இன்றைய நாளின் சோகமான சங்கதி. திருச்சியிலிருந்து கம்பெனி மாறி தற்போது பணியாற்றும் கம்பெனியில் சேர்ந்ததும் இங்கே ஒரு சிம் பயன்படுத்தக் கொடுத்தார்கள். ஒரு மொபைல் போனே எனக்கெல்லாம் எதேஷ்டம் என்பதால் இன்னொன்றை கழற்றி வைத்து விட்டேன். இருந்தாலும் எண்ணை விட்டு விடக் கூடாதேயென அவ்வபோது இயக்கி பார்த்துவிட்டு வைத்து விடுவேன். சில மாதங்களாக அதை செய்ய மறந்து போனதில் நம்பர் கையை விட்டு போய், தற்சமயம் அதை வேறு ஒரு சகமனிதர் வாங்கி...
Subscribe to:
Posts (Atom)