ராகுல் காந்தியின் அரசியல்

Posted: Thursday, December 23, 2010 | Posted by no-nononsense | Labels:
ராகுலை விமர்சிக்க என்ன இருக்கிறது இவர்களுக்கு? வெறும் அர்த்தமற்ற பிதற்றல்கள். அவர் இளைஞர் காங்கிரஸூக்கு அடித்தளமிடும் பாணி, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் ஒருமுறைகூட கருணாநிதியை சந்தித்து மரியாதை நிமித்தம் முதுகு சொறியாத குணம் இதெல்லாம் அவருக்கென்று அரசியலில் ஒரு தனிப்பாதை இருப்பதையே காட்டுகிறது. அண்மையில் இந்து தீவிரவாதம் பற்றி அவர் பேசியுள்ளதை காணும்போது பொதுபுத்திக்கு தன்னை அவர் ஒப்புக்கொடுத்துவிட வில்லை என்பதையும் உணர முடிகிறது. இதே போக்கில் அவர் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டால் பிற்காலத்தில் ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவாக வாய்ப்புண்டு. அவர் பயணம் நெடியது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனா மகனே உங்க குடும்பத்துக்கு காந்தினு பேரு இருக்குறது மட்டும் மகாத்மா காந்திக்கு தெரிஞ்சுச்சு, தடியாலயே உங்கள அடிச்சு போட்டுட்டு கரண்ட் கம்பிய புடிச்சு தொங்கிருவாரு.

அது ஒரு தனி கதை. இந்திரா தான் தன் பெயருடன் முதலில் காந்தி என்று பயன்படுத்த ஆரம்பித்தார். அந்த பெயரை அவர் இரவல் பெற்றுக் கொண்டது தன் கணவர் குடும்பத்திடமிருந்து. (ஆனால் கணவருடன் இணைந்து வாழ்ந்த காலம் மிகக் குறைவு). கணவர் பெயர் ஃபெரோஸ் காந்தி (Feroze Gandhy). நேரு குடும்ப வாரிசுவின் பெயருடன் (மாஹாத்மா) காந்தியின் பெயரும் இணைந்தவுடன் அதன் ரீச் பொதுமக்களிடம் பெரிதாக இருந்தது. அதுதான் இன்று வருண் காந்தி வரை தொடர்கிறது. ஓட்டும் பெற்றுத் தருகிறது.

0 comments:

Post a Comment