அவலை நினைத்து உரலை

Posted: Sunday, December 26, 2010 | Posted by no-nononsense | Labels:
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"
(ஆண்டாள் திருப்பாவை)

நீராடப் போதுவீர்.... ! ஹ்ம்ம்ம்....., இன்று எந்த கன்னிமார் அறிவார் அந்த பாவை நோன்பு?!

திருப்பாவை போடு; திருப்பள்ளியெழுச்சி பாடு; ஈரம் சொட்ட சொட்ட மாரியம்மன் கோவிலுக்கு ஓடு. என்ன செய்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் என்ன கவலை. அந்தக் கவலை வந்து விட்டால் கோவில் குளம் பக்கமெல்லாம் பிறகென்ன வேலை?

பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள். இன்னோசண்ட் ஃபெல்லோஸ். ஓ பிதாவே.. இவர்களை ரட்சியும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தாரில்லை. ஆமென்! (மார்கழி மாசத்துல கிறிஸ்துமஸும் வருதே!)

-0-

//பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள்//
:) :)

உண்மையில் இந்த என்னுடைய பகடிக்கு பின்னால் சமரச சன்மார்க்க தத்துவமே உள்ளது. ஏனென்றால் திருப்பாவைக்கும் மாரியம்மனுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இந்து மதத்தில் திருப்பாவை வைணவ மரபின் வழியான தெய்வத்தின் மீது மையல் கொண்டு பாடியது. ஆனால் நம் இந்து மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அதை வீட்டில் ஒலிக்க விட்டு தலைக்கு குளித்து மாரியம்மன் கோவிலுக்குச் செல்கிறார்கள். ஆண் தெய்வக் காதல் பாட்டை அறவே புரிந்து கொள்ளாமல் பெண் தெய்வம் குறித்த பக்தியுணர்வாக உணர்கிறார்கள். சிலர் பிள்ளையார் கோவில். இன்னும் சில சிவன். இவை எல்லாமே வேறு வேறு இந்து மதப் பிரிவுகள். ஒருவரை ஒருவர் ஏற்காமல் கழுவிலேற்றிக்கொண்ட காலங்களும் உண்டு. இன்று எல்லாம் ஒரு பண்டலாகி விட்டன என்பதுவே நான் கிண்டலடித்தக் காரணம்.

கைபோன போக்கில் எழுதுகிறேன் என்பதற்காக போகிற போக்கில் வாய்போன போக்கில் எல்லாவற்றையும் சொல்லி வைக்கிறேன் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது அல்லவா :-)

-0-

நம்ப ஆளுங்களுக்கு (most of the people i guess) இது எல்லாம் மேட்டரே இல்ல... எல்லாம் சாமி பாட்டு தென். எல்லாம் கலந்து கட்டி சாமி என்கிற பெயரில் கும்பிட்டு கிட்டு போய் கிட்டு இருக்கற ஆளு. அதுல ஒண்ணும் தப்பும் இல்லைன்னு நான் நினைக்கிறன்..தனிப்பட்ட கருத்து.


ஆனால் தோழர், அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதால் பயன் கிடைக்காமல் போய்விடுமே ;-) உங்கள் கடவுள் நம்பிக்கை சரிதானா, நீங்கள் கடைபிடிக்கும் மார்க்கம் அறிவுப்பூர்வமானதா என்னும் கேள்விகளுக்குள் நான் செல்லவில்லை. குறைந்த பட்சம் தாங்கள் செய்வது இன்னது என்றாவது தெரிந்து செய்ய வேண்டாமா என்னும் வருத்தம் தான் ஏசுவிடம் உங்களுக்காக ரட்சகம் கேட்டது ;-) உங்கள் கலந்து கட்டலில் அவர் இல்லை எனபதால் இந்த பஞ்சாயத்துக்கு அவர் neutral observer. அப்புறம் ஏசுவை எப்படி எங்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வைக்கலாம் என்றெல்லாம் அப்பாவித்தனமாக கேட்கக்கூடாது. ஏசுவும் கிருஷ்ண அவதாரமும் ஒன்று என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. எல்லாம் நீ இப்ப சொன்ன மாதிரி ஒரு கலந்து கட்டல் நம்பிக்கைதான். அதனால் ஒரு கலந்து கட்டல் இன்னொரு கலந்து கட்டலை மறுக்க முடியாது. அப்புறம் உங்க லாஜிக் தான் அடி வாங்கும்.. என்ன நான் சொல்றது.. ஹாஹா ;-)))

0 comments:

Post a Comment