இது பணக்காரர்களுக்கான தேசம்

Posted: Thursday, December 23, 2010 | Posted by no-nononsense | Labels: ,
நடப்பை நிர்தாட்சண்யமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரை. இதில் முதல் குற்றவாளி நம்மை ஆளும் அரசுகளே. இந்த மாதிரி அலட்சிய போக்குகளையெல்லாம் படிக்க படிக்க இந்தியனாக பிறக்க மாபாவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குடிமக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கம். கொண்டு வரப்படும் எல்லா திட்டங்களும் ஓட்டுக்களை குறிவைத்து மட்டுமே. எல்லாவற்றிலும் ஊழல்கள். ஆனால் அவற்றை கண்டித்து ஒரு பொதுநல கிளர்ச்சியும் இங்கே கிடையாது. பொதுவாகவே காலம் காலமாக இந்தியர்களிடையே ஒற்றுமை கிடையாது. அதனால்தான் வியாபாரம் செய்யவந்த கம்பெனியார் நாட்டை கைப்பற்றிக்கொள்ள முடிந்தது.

இந்தியா நிச்சயமாக சொர்க்கம்.. ஆனால் பணம் உள்ளவனுக்கு மட்டும்.
நடுத்தர வர்க்கத்தில் அவதிப்படுபவனுக்கு கடனையும், விளிம்பு நிலையில் வாழ்பவனுக்கு முடிவற்ற துயரத்தையும் வாதைகளுடன் கூடிய மரணத்தையும் மட்டுமே அளிக்கும் இந்த தேசம் போலியான ஜெய் ஹிந்த் கூச்சல்களுடன் என்றென்றும் இப்படியேதான் இருக்கும். காரணம் சுரணையை முனை மழுங்கிய மக்கள். சாலையில் விபத்தை உருவாக்கிக்கொண்டு இடைஞ்சலாக இருக்கும் ஒரு கோவிலை இடித்தால் உடனே கொதிப்பான்; ஆர்பரிப்பான். ஆனால் ஒரு ஊரையே அடித்து உலையில் போட்டுக்கொண்டால் கூட நானாச்சு என் லௌகீகம் ஆச்சு என்று டிவி முன்னால் தவம் கிடப்பான். இந்த மனோபாவம் என்றென்றும் உருப்படாது. Comparatively okay தான்பா என்பவர்களுக்கு இருக்கும் வளத்தைக்கொண்டு comparatively இன்னும் எவ்வளவு better ஆக வாழ முடியும் என்பது குறித்து ஒரு அறிவும் இல்லை.
என்னுடைய இந்த எல்லா அக்கறையும் வாழ முடியாத குடிமக்களின் மீது இந்த தேசம் காட்டும் அலட்சியம் பற்றி. வெட்டுவதை வெட்டி தள்ளுவதைத் தள்ளி வாழ முடியக்கூடிய வசதியானவர்கள் வாயார உரக்கச் சொல்லுங்கள் ’பாரத் மாதா கி ஜே!’

0 comments:

Post a Comment