டி.ஆர் பற்றி

Posted: Saturday, December 25, 2010 | Posted by no-nononsense | Labels:
”இது குழந்தை பாடும் தாலாட்டு” பாடலை கேட்டு விட்டு இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கண்ணதாசன் பெரிதும் பாராட்டினாராம். அது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிக்கு சமம். ஒரு பாடலாசிரியராக டி.ஆருக்கு நான் மிகப் பெரிய ரசிகன்.

நாம் என்னதான் எள்ளி நகையாடினாலும் ராஜேந்தர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். எடுத்துக்கொண்ட துறையில் அவர் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஒரு தாயின் சபதம் படத்திற்கு கிடைத்த ஓபனிங் எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தான் மட்டுமல்ல திட்டமிட்டு அடித்தளமிட்டு தன் மகனையும் வெற்றி பெற வைத்தவர். அதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மற்றபடி இந்த காமெடி பீஸ் விவகாரம் அவர் அறிந்தே செய்கிறார். அவரால் எதையாவது செய்யாமல் இருக்க முடியாது. யார் எப்படி கிண்டலடித்தாலும் எத்ற்கும் மனிதர் அசருவதில்லை. நாமும் பார்த்து சிரிக்கிறோம். முடியலை என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து செய்கிறோம். இருவருக்கும் பொழுது போகிறது.

0 comments:

Post a Comment