குடிபோதையில் குற்றம்

Posted: Sunday, July 10, 2011 | Posted by no-nononsense | Labels: ,
ம். துப்பாக்கி இருந்தால் மனித மனம் குரங்கு போல என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஒரு உதாரணம். அதுவும் குடி போதையில் --> http://thatstamil.oneindia.in/news/2011/07/10/i-shot-dilshan-his-repeated-trespassing-army-officer-aid0136.html

உண்மை.

குடிபோதையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது என்னிடம் ஒரு டாக்டர் - வயதில் பெரியவர், “குடிபோதைல தப்பு நடந்து போச்சின்னு சொல்றானுங்களே.. எவனையாவது குடிபோதையில பீய தின்னச் சொல்லேன் பாப்போம்.. அப்ப மட்டும் எப்படி சரியாக தின்னக்கூடாதுன்னு புத்தி வேலை செய்யுது.. எல்லாம் வெறும் சாக்கு, என்ன பண்றோம்னு தெரிஞ்சிதான் பண்ணுறானுங்க. ஒரு base level conscious எப்பவும் இருக்கும்”, என்று சொன்னார்.

அது என்னை அன்று சிந்திக்க வைத்தது.

நானும் குடித்திருக்கிறேன். அதீத போதை அளவுக்கு (இதை ஃப்ளாட் ஆகும் அளவுக்கு என்றுச் சொல்லலாமா?) இன்னும் சென்றதில்லை. ஆனால் போதையின் போது ஒரு மாதிரி அதீத தன்னம்பிக்கை, எடுத்தெறிந்து பேசும் ஒருவித செறுக்கு ஏற்படுவதை உணர முடிகிறது. அதற்கு மேல் மனதில் முன்திட்டம் இல்லாமல் குடிபோதையில் கற்பழிப்பு, கொலையெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்.

போதை பயம் போக்குகிறது. எனினும், அதற்குப் பிறகு நடக்கும் செயலுக்கான திட்டத்தை புத்தி தான் வகுக்கிறது. அதனால் குடிபோதையில் நடந்து போச்சு என்பது மனோரீதியில் பொய்யான வாதம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதை கொஞ்சம் psychological ஆக பார்க்க வேண்டியுள்ளது.... குடிபோதையில் conscious வுடன் தவறு நடக்கிறது என்ற வாதத்தை ஒத்து கொள்ள முடியாது. ஏன் என்றால் நான் அடிக்கடி செய்திகளில் படிக்கும் விஷயங்களில் ஒன்று..குடிபோதையில் கணவன் மனைவியை கொன்றான்....இதை அவனால் குடிக்காமலே செய்ய முடியும் ஆனால் ..போதையின் அளவு அதிகமாபோரதல அவன் கண்ட்ரோல் அவனிடம் இல்லை. ..அவன் அடிக்கும் அடியின் அளவு அவனுக்கு தெரியாது ...அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாமே தவிர...கொல்லவேண்டும் என்று இருப்பதாக சொல்ல முடியவில்லை.

உன் அளவுக்கு உன்னால் செருக்குடன் பேசவோ பழகவோ முடிகிறது.. குடித்திருந்தால்..

ஆனால் உண்மையாலுமே அதே போன்று normal ஆகவே அப்டிஇருக்கும் ஒருவன் குடித்தால் இன்னும் vulgar ஆக தான் போவான் என்று நினைக்கிறன்..

இந்த விவாதம் சில மாதங்கள் முன்பே எழுந்திருந்தால் நீ இந்தியாவில் இருந்த சமயத்தில் ‘அதீத குடிபோதையில் மெய் மறக்கிறதா’ என்பதை நாம் நடைமுறையிலேயே பரீட்சித்து பார்த்திருந்திருக்கலாம் :-)

இதை நீ குறிப்பிட்டதுள்ள போல சற்று மனோரீதியாக ஆராய்வோம்.

Conscious என்பது தன்னுணர்வு நிலை. அந்தத் தன்னுணர்வு நிலையை தியானம் ‘ஜாக்ரத்’ என்கிறது. அதற்கு அடுத்த நிலை ‘ஸ்வப்னம்’. இது போல் இன்னும் இரண்டு நிலைகள் உள்ளன. இறுதி நிலை துரியம் எனப்படும் ஆழ் மனது. குடிபோதை என்பது ஜாக்ரத்தும் இல்லை; ஸ்வப்னமும் இல்லை என்றால், அது நிச்சயம் இரண்டுக்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த ஒரு நிலையாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு தனிப் பெயர் இருக்கிறதா என்பதெல்லாம் அந்தத் துறை நூல்களையும், அறிஞர்களையும் கலந்தாய்வ் செய்ய வேண்டிய விஷயங்கள்.

ஆனால், நமக்கு வேண்டிய கருத்து இது conscious - unconscious இரண்டுக்கும் இடைப்ப sub-conscious ஆக ஏன் இருக்கக் கூடாது என்பதுதான். ஏன் இருக்கக் கூடாது என்பது கூட இல்லை, அதுதான் குடிபோதை என்பதுதான் என் நிலைப்பாடு.

Sub-conscious mind என்றால் என்ன.. “Of or concerning the part of the mind of which one is not fully aware but which influences one's actions and feelings” - என்கிறது அகராதி விளக்கம். இதன்படி, ஒருவனுக்கு முழுமையான உணர்வு நிலை இல்லை, ஆனால் அந்தப் பகுதி விழிப்புணர்வு அவனுடைய உணர்ச்சிகளிலும், செயல்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதாகிறது.

அப்படியானால் அந்த மாதிரி ஆதிக்கம் செலுத்தும் மனோநிலையில் அவனுடைய விழிப்பு நிலையின் தன்மையில் தான் செய்வது இன்னது என்பது குறித்த அறிதல் இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக மறுபடியும் எழுகிறது.

குடிபோதை என்பது Sub-conscious mind என்பதை இறுதி செய்து கொண்டால், Sub-conscious mind-ன் நடக்கும் செயல்கள் மீதான மனதின் கட்டுப்பாடு மற்றும் அதன் செயல்பாடு பற்றி நினைவாற்றல் சேமிப்பு இரண்டும் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும் என்று கருதுகிறேன்.

(தொடர்கிறேன்..)

0 comments:

Post a Comment