சமூகம்

Posted: Wednesday, July 13, 2011 | Posted by no-nononsense | Labels:
http://thatstamil.oneindia.in/news/2011/07/13/murder-recorded-in-cctv-camera-coimbatore-aid0128.html

யார் அடிபட்டாலும், மிதி பட்டாலும், கொலை பட்டாலும் அவனவனுக்கு அவனவன் வேலைதான் முக்கியம். இங்கே சமூக வாழ்க்கை முறை என்பதே மாயை. உண்மையைச் சொன்னால் மனிதம் செத்த மனிதர்கள் நாம்.

இந்த நாம் என்பது எப்போதும் பெரும்பான்மையை குறிக்கிறது. ஆகவே, நாம் என்றால் எல்லோருமா.. நல்லவர் சிலர் இன்னும் உளரே என்று நைச்சியம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.


நமக்கு நம் வேலைதான் அதி முக்கியம். எவன் கண்ணெதிரே நாசமாய் போனாலும் நாம் போய் மாட்டிக்கொள்ள கூடாது. கையிலுள்ள பீஸா பார்சல் அப்புறம் வீணாகி விடாது?

அதைத் தின்ன பெண்டாட்டி காத்திருப்பாளே, அவளுக்கு அப்புறம் யார் சார் பதில் சொல்வது?..

இப்படி அவரவருக்கு ஆயிரம் வேலைகள்.

'இருக்கும் ஜனதொகையில் ஒன்று போகட்டுமே, இப்ப என்ன குறைஞ்சி போயிடும்?
'

'அது ஏன் சார் நீங்களா இருக்கக்கூடாது?'

'அதெப்படி, என் உயிர் எனக்கு முக்கியமாச்சே.. என்னை மாதிரி ஒரு குடும்பஸ்தனை ஓடி வந்து காப்பாற்றுவது இந்த சமூகத்தின் கடமை'

'அப்போ வெட்டு படுபவனும், விபத்தில் அடிபட்டு கிடக்கிறவனும் குடும்பஸ்தன் தானே?'

'அது அவன் கவலை சார்.. என் உயிர் பத்தி மட்டும் தான் நான் பேச முடியும்'

'சமூகம் ஓடி வந்து காப்பாத்தனும்னு சொன்னீங்களே.. அந்தச் சமூகம் யார் சார்? ஏதாவது திட பொருளா? உங்களை என்னை மாதிரி மனிதர்கள் தானே இந்த சமூகம்?'

'ஆமா.. ஆனா அதிலயும் மனுசங்க மத்தியில வித்தியாசம் இருக்கே.. வலிய போய் ஒரு பிரச்னையில மாட்டிக்கிட்டா யார் சார் போலீஸ் ஸ்டேசன், கோர்ட்டுன்னு அலையறது.. எனக்கு சக்தியில்ல..'

'அப்ப சமூகத்தின் மத்த மனுசங்களும் அப்படியே நினைச்சி ஒதுங்கி போயிட்டா, உங்க உயிர் போராடுறப்போ யார் சார் காப்பாதுவா?'

'உண்மை தான் சார். அப்படிப்பட்ட மிடில்கிளாஸ் அரையணா நாலணா ஆளுங்க மத்தியில மாட்டிக்கிட்டா காப்பாத்த நாதியில்லா சாக வேண்டியதுதான். வேற வழியில்ல'

'அப்ப நீங்க சொன்ன சமூகம் யாரைதான் சார் காப்பாத்தும்'

'அது மாயை சார். அதில இருக்க ஒண்ணு ரெண்டு நல்லவங்க ஓடி வந்து உதவுவதும், சட்டத்தை மதிச்சி நடப்பதும், மனசாட்சிக்கு உண்மையா இருப்பதும் பார்த்து அதைதான் 'கடவுள் இருக்காரு குமாரு..'ன்னு சொல்லிக்கறோம். அது ஒட்டு மொத்த சமூகத்தின் மனித நேயமா நம்பறோம். எல்லாம் மாயை'

'அப்போ உண்மையான சமூகம் தான் எது?'

'கொஞ்சம் வழி விடறீங்களா.. பார்சல் ஆறிட்டு இருக்கு.. அப்புறம் என் பொண்டாட்டிக்கு பதில் சொல்ல முடியாது..'

சமூகம் பேச்சை துண்டித்துக் கொண்டு விலகிச் சென்றது.

0 comments:

Post a Comment