முரளிதரன் என்னும் சிங்களத் தமிழன்

Posted: Friday, July 15, 2011 | Posted by no-nononsense | Labels:
இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்! --> http://thatstamil.oneindia.in/news/2011/07/15/muralitharan-warns-oz-not-boycott-sl-series-aid0091.html


முரளிதரன் இப்படித்தான் பேச முடியும். மாற்றிப் பேசினால் தான் அது செய்தி.

முரளிதரன் ஈழத்தமிழன் கிடையாது. மலையகத் தமிழன். அதாவது இந்திய வம்சாவழித் தமிழன். இன்னும் சொல்லப் போனால் இந்தியத் தமிழன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முரளிதரனிடம் இந்திய குடியுரிமையும் உண்டு.

இலங்கையை பொறுத்தவரை தமிழர்களிடையே மூன்று பெரும் பிரிவுகள் நிலவுகிறது. ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள். இவர்களிடையே ஒற்றுமை கிடையாது. குறிப்பாக மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்தது கிடையாது.

ஈழப் போராட்டத்திற்கு உள்ள நியாயங்கள் அளவுக்கு மலையகத் தமிழர்களின் குடியுரிமை போராட்டத்திற்கும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கும் உண்டு. அதுவும் ஒரு கண்ணீர் கதைதான். 1988 வரை அவர்களை இலங்கை குடி மக்களாகவே அந்த நாடு அங்கீகரிக்கவில்லை. உண்மையில் 6 இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வதாக சாஸ்திரி-பண்டாரநாயகா இடையே ஒரு ஒப்ப்ந்தம் கூட கையெழுத்தானது. பின்னர் அது கைவிடப்பட்டு ஜெயவர்த்தனே காலத்தில் 1988-ல் தான் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை அளிக்கப்பட்டது.

இப்படி அவர்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஈழப் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டியதில்லை.
அவர்களை இலங்கைத் தமிழர்களாக ஈழத் தமிழர்கள் கருதியதுமில்லை. குடியேறிகள் என மட்டம் தட்டி பேசுவார்கள். ஈழப் போராட்டத்தில் ஏதேனும் பதட்டமான சூழல் என்றால் அதில் பங்குபெறாத மலைகத் தமிழர்கள் தான் முதலில் தாக்கப்படுவார்கள். இதனால் இவர்களிடயே ஒரு ஒட்டுதல் கிடையாது.

கண்டியில் அந்த மாதிரி ஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்து, சிங்களவர்களால் போஷிக்கப்பட்டு, அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு தன் முதலீடுகளை பெருக்கிக்கொண்ட முரளிதரனிடம் இருந்து வேறு என்ன மாதிரி நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியும்?

இதில் ஆச்சரியமில்லை.

0 comments:

Post a Comment