இந்தியா என்னும் குப்பைக் கூடை

Posted: Saturday, July 2, 2011 | Posted by no-nononsense | Labels:
ஜெமோவின் கீழ்கண்ட பதிவை முன்வைத்து:

ஜெமோவின் கருத்துக்கள் முக்கியமானவை. இ
து ஊடகங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னை.

அணு ஆயுத கழிவுகள், கனரக தொழிற்சாலை கழிவு பொருட்கள், கைவிடப்பட்ட கப்பல்கள் ஆகியவைகளுடன் எங்கேயோ, எவனோ தின்று போட்ட எச்சக்கழிவு பிளாஸ்டிக் குப்பைகளும் இன்று இங்கே ‘இறக்குமதி’ செய்யப்பட்டு வாழ்நிலம் குப்பை காடாக்கப்படுகிறது என்னும் செய்தி உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

இந்த மாதிரி வாழ்வாதார பிரச்னைகளை விட்டு விட்டு ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகத்தில் மாட்டவில்லை என்று இங்கே மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை விட்டால் சோனியா காந்தியை விமர்சித்து விட்டதற்காக தீக்குளிக்கிறார்கள். போராட்டம் என்ற சொல்லுக்கு உள்ள மரியாதை சீரழிந்து விட்டது.

நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணை, மருத்துவமனை கழிவு பொருட்கள் புறநகர் பகுதிகளிலுள்ள புறம்போக்கு நிலங்களில் ஆள் அரவமற்ற நேரங்களில் வண்டி வண்டியாக கொட்டப்பட்டன. செத்த கோழிகளும், ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் துணிகளும் கடும் வீச்சத்தை கிளப்பி வந்தன. சில காலமாக அந்த புகார் இல்லாமல் இருக்கிறது.

0 comments:

Post a Comment