ஆங்கிலம் மட்டும்தான் அமைச்சருக்கு தகுதியா?

Posted: Thursday, April 29, 2010 | Posted by no-nononsense | Labels:
அழகிரி நாடாளுமன்றத்தில் துரை விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது குறித்த விவாதத்தில்:

அழகிரியை முதலில் தமிழில் பேச அனுமதியுங்கள். பிறகு ஏன் பாராளுமன்றத்தில் பேசவில்லை என்று கேளுங்கள். அதுவரை வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று கோஷமேயன்றி வேறல்ல.

நமது அரசியல் சட்டம் அனுமதித்துள்ள தகுதிகளின் படியே அழகிரி அமைச்சராகி இருக்கிறார். இருந்தும் ஆங்கிலம் தெரியாது என்னும் ஒரு காரணத்தினால் மட்டுமே அவரால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற முடியாமல் இருப்பது, நமது நிர்வாக அமைப்பியலுக்குத்தான் இழுக்கு. அழகிரிக்கு அல்ல.

அவர் விமானத்தில் அதிகமுறை பறந்தார் என்பதன் புள்ளி விவரங்கள் எல்லாம் சரிதான். இதேபோல் எல்லா அமைச்சர்களுக்கும் வெளியிடப்பட்டால்தான் பட்டியலில் அழகிரி எந்த இடத்தில் இருக்கிறார் என்று சொல்லமுடியும்.

உள்ளூர் அமைச்சர் ஒருவர் நாளொரு நவீன கழிப்பிடம் பொழுதொரு பொட்’டீ’க்கடை என்று எதையாவது திறந்து வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் இங்கேயே வட்டமடித்து சுற்றித் திரிகிறார். எந்த சந்து பொந்தில் திரும்பினால் அவரை வரவேற்றுத்தான் போஸ்டர்கள்! பெரும் அலர்ஜியாக இருக்கிறது. அவரெல்லாம் கடைசியாக எப்போது டெல்லி சென்றார்; அங்கே என்ன இதுவரை பேசியிருக்கிறார் என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். இதுபோல் நெப்போலியன், வாசன் என்று உள்ளூரிலேயே எத்தனையோ பேர். இருந்தும் அழகிரி ஒரு தற்குறி என்பதாலேயே அதிகம் விமர்சிக்கப்படுகிறார்.

அவரை விமர்சிக்க இதனை தாண்டி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் பேச மீடியாக்களுக்கு முதுகெலும்பு இல்லை. இதனை பெரிதுபடுத்துகிறார்கள்.

0 comments:

Post a Comment