சுட்டெரிக்கும் வெம்மையிலும்..

Posted: Tuesday, April 6, 2010 | Posted by no-nononsense | Labels:
விளிம்புநிலை மனிதர்கள் என்னும் இலக்கிய முலாம் பூசின வார்த்தைகளை விட ‘அன்றாடங் காய்ச்சிகள்’ என்றால் சிலருக்கு சட்டென்று புரியக்கூடும். அதைவிடவும் ஒரு புகைப்படம் இன்னும் அர்த்தப்பூர்வமாக விளங்க வைக்கும்.


மண்டையை பிளக்கும் உச்சி வெயிலுக்கு பயந்துகொண்டு இருக்கும் இடங்களை விட்டு வெளியே வராமல் இருந்துகொள்ள, எல்லோருக்கும் சௌகரியப்படுவதில்லை. வெயிலை தவிர்க்க முடியாத ஓர் உலகமும் வெளியே இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

அலுவலகத்தின் வாசலில் இருந்து கண் பார்வையை வீசினால் எதிரே கரூர் பஸ் நிலையம் தொட்டு விடும் தொலைவில் தெரியும். மெதுவாக நடந்தாலும் எட்டி விட பத்து நிமிடத்திற்கு மேல் ஆகாது. ஆனால் அதற்கே இன்று எனக்கு மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது. இந்த கோடை வெயிலின் தாக்கத்தை ஜூவாலைகளின் அனலுடன் மட்டும்தான் ஒப்பிட முடியும். ஆனால் இந்த பெண்மணியெல்லாம் நாள் முழுக்க வெயிலில் நின்றபடியே வியாபாரம் செய்கிறார். (இடம்: கரூர் பஸ் நிலையம்)

வயிற்றுப்பாடு என்று ஒன்று வந்தால்தான் வாழ்வின் உண்மையான கஷ்டம் உறைக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு இவர் போன்றவர்கள் எல்லாம்தான் அத்தாட்சிகள்.

2010-லின் வெயிலே இப்படி. நாம் எப்படியும் இன்னும் ஒரு முப்பது வருடங்களாவது உயிருடன் இருப்போம் என்று நம்பலாம். அப்படியானால் 2040-ன் வெயில் எல்லாம் எப்படி இருக்கும்??

2 comments:

  1. no-nononsense said...
  2. Test

  3. no-nononsense said...
  4. புகைப்படத்தை வலையேற்றிய நிறுவனம் தடுத்தாட்கொண்டு விட்டது.

Post a Comment