வெள்ளை காலர் புரட்சிவாதிகள்!

Posted: Thursday, April 29, 2010 | Posted by no-nononsense | Labels: ,
இணையத்தின் எட்டு திக்கிலும் எங்கெங்கு நோக்கினும் சமூகத்தை பற்றிய புலம்பல்களும் அரசியல் குறித்த அரற்றல்களும் அறச்சீற்றம் குறித்த அறிவுரைகளுமாக.. அப்பப்பா!

ஏன் சமூகம் இப்படி இருக்கிறது? ஏன் மக்கள் இப்படி இருக்கிறார்கள்? ஏன் ஊழலுக்கு எதிராக லஞ்சத்துக்கு எதிராக அரசியல்வாதிக்கு எதிராக அவனின் சுரண்டலுக்கு எதிராக ஜாதீயத்துக்கு எதிராக எவனும் தெருவில் இறங்கி போராட மாட்டேன் என்கிறார்கள்? அது ஏன் அப்படி? இது ஏன் இப்படி?

— என்று கேட்பவனெல்லாம் வெளிநாட்டில் வெள்ளை காலர் வேலையில் இருக்கிறான். அவனுக்கு குறைந்தது அடுத்த பத்தாண்டுகளுக்கு பணத்தைப் பற்றிய பிரச்னை இல்லை.

அவதிப்படுபவனோ அடுத்த மாத சம்பளத்திற்காக அனுதினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறான். இதில் புரட்சியாம், போராட்டமாம், கிளர்ச்சியாம்!

அட போங்கடா டே!

0 comments:

Post a Comment