உடற்பயிற்‘சீ’

Posted: Friday, October 15, 2010 | Posted by no-nononsense | Labels:
மேற்கத்திய நாகரிகத்திடமிருந்து எதைக் கற்றுக்கொண்டாலும் தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மட்டும் கற்க மறுக்கிறோம். வேலை செய்யும் கம்பெனியிலேயே காசு கொடுத்து போகச் சொன்னாலும் வாய் காரணத்தை முணுமுணுக்கிறதே தவிர, உடம்பு வளைவதில்லை. நம் பிள்ளைகளுக்காவது அந்தப் பழக்கம் வாய்ப்பதாக.

மேலும், நமக்கு பாடிபில்டிங்கிற்கும் உடற்பயிற்சிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஜிம்முக்கு போவது உடம்பை தேத்த என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறோம். 

இதெல்லாம் பள்ளிகளில் இருந்து பழக்கமாக வேண்டும். அங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் பிடி பீரியடில் கல் பொறுக்கிக் கொண்டும் செடி வெட்டிக் கொண்டும் இருக்கும் வரை இதன்பேரில் ஒரு முன்னேற்றமும் வராது. 

இப்படி உடற்பயிற்சியை பற்றி வியாக்யானம் பண்ணி விட்டு நான் என்ன செய்யப்போகிறேன்? 12 மணி வரை கொட்ட கொட்ட விழித்திருந்து விட்டு 7 மணி நேர தூக்க கணக்கிற்கு 7 மணி வரை கவுந்தடித்து தூங்குவேன். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது பிழைப்பு. டிபிகல் இந்தியன் அல்லவா!

0 comments:

Post a Comment