பயத்தால் விழையும் ஒழுக்கம்

Posted: Monday, October 18, 2010 | Posted by no-nononsense | Labels:
எரியும் வீடு 
இந்தியில்ராஜ்கமல் சௌத்ரி,
தமிழில்:சொ. பிரபாகரன்
(http://www.nisaptham.com/2005/05/blog-post.html)

என்னுடைய இன்றைய நாளை சிறப்பு செய்தது இந்த சிறுகதை. it made my day என்பார்களே அப்படி.

எயிட்ஸ் என்னும் பெருநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிடில் இதுபோன்ற தேவடியாகுடிகளில் நாம் தொலைத்திருக்கக்கூடிய பணம் எவ்வளவு இருக்கும்? இப்போது எப்போதாவது மோதிக்கொள்ளும் கண்ணாடி கோப்பைகளின் ‘க்ளிங்’ சத்தத்தின் பின்னால் மறைந்துள்ள போதையில் மீது கொண்டிருக்கும் பிரேமை போல, சில பேதைகளின் மீது பிரேமை கொண்டு நாடி கிடந்திருப்போம். பீர் பாட்டில்களில் என் பிராண்ட் என்பதுபோல அதிலும் இருந்திருக்கும். ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ பயத்தால் வாடி அநேகமாக மைனர் வாழ்க்கையில் தேவடியாகுடி சகவாசம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது.

இது, நமது இன்றைய வாழ்க்கைமுறை பற்றிய ஒரு சிறு பரிசீலனை மட்டுமே.

அகநானூறு, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் காணப்படும் காட்சிகளில் ஆண்கள் பரத்தையரையும் பொதுமகளிரையும் நாடிச் செல்வது ஒரு பொதுவான சமூக வழக்கமாக இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் கணிகையர், பரத்தையர், வரைவின் மகளிர் போன்ற சொல்லாடல்கள் இல்லையென்றால் அகநானூறில் பாதி பாடல்களே இல்லை. பிற்காலத்திலும் புறம்பான ஒரு சமூகமாக ஏற்படுத்தப்பட்ட தேவரடியாள்களும், பொட்டு கட்டி விடப்பட்ட தாசிகளும் சமூகத்தின் ஓர் அங்கமாக சமூக கோட்பாடுகளுக்கு உட்பட்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர். (தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. It means it was normal and office then). அப்போதெல்லாம் ஆண்களின் தனிமனித ஒழுக்கங்களை வரையறுத்து வந்தது சுயகட்டுப்பாடுகள் தானே தவிர பாலியல் நோய்கள் அல்ல.

ஆனால் ஓரிரு நூற்றாண்டுகளாக கதையே வேறு. STD, AIDS போன்ற நோய்களே தனிமனித ஒழுக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் காரணிகளாக உள்ளன. புள்ளிராஜா, தில்லு துரைகளின் பயமுறுத்தல்கள் இல்லாவிட்டால், எந்த பெண்ணிடம் போனாலும் எந்த நோயும் வராது என்றால் இங்கே ஏகபத்தினி விரதனாக இருப்போர் எத்தனை பேர் தேறுவார்கள். நிச்சயமாக நான் தேற மாட்டேன். நோய்கள் பற்றிய பயமே என்னுடைய இளமையில் என்னை பரத்தையரை நாடாமல் வைத்திருந்தது.

நமது ஜென்டில்மேன் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு பேச ஆரம்பித்தால் ஆழ்மனதின் ஆசை - நிராசைகள், கையறுநிலைகள் பற்றி நிறைய உரையாட முடியும். ஆனால் அந்த முகமூடியை கழற்றுவது எல்லோருக்கும் அவ்வளவு சுலபமல்ல.

0 comments:

Post a Comment