சிற்சில குறிப்புகள் (7)

Posted: Tuesday, October 12, 2010 | Posted by no-nononsense | Labels:
துரோகி என்று ஒரு படத்தின் டிவிடியை அண்டை வீட்டுக்காரர் வலிய வந்து பார்க்க கொடுத்து சென்றிருக்கிறார். இப்படி இவர் கொடுத்தே அநேகமாக அண்மை காலத்தில் வந்த எல்லா படங்களையும் பார்க்க வைத்துவிட்டார். இதன் பின்னாலுள்ளது நல்நோக்கமா அல்லது யாம் பெற்ற இன்ப உள்நோக்கமா என்பது பற்றி ஒரு சம்சயம்!

*

ஹோமோசெக்ஸ், ஓரல்செக்ஸ் மாதிரி அதென்ன பெயர் வைத்திருக்கிறான் சென்செக்ஸ் என்று — என்று இன்று ஒருவர் சீரியஸாக கேட்டார். ரொம்ப 'சிரி'யஸ் ஆகிவிட்டேன். :D

*

தம் இஷ்டப்படி நள்ளிரவில் தொழில்முறை பணிகளை வைத்துக்கொள்ள முடிபவர்கள் பூர்வஜென்ம புண்ணியாத்மாக்கள்! ஓசைகளற்ற அமைதியும் யாருமற்ற தனிமையும் பிக்கல்களற்ற கவனகுவிப்பும், செய்யும் வேலை மீதான ஆர்வத்தை தக்கவைக்கின்றன. இதே பகற்பொழுதாயின் எல்லாம் பாழாய் போகும்!

*

காதல் அணுக்கள் பாடலை விஸூவலாக பார்த்ததில் இருந்து மிகவும் பிடித்து போய்விட்டது. அடிக்கடி பார்க்கிறேன். இது ரஹ்மான் எஃப்க்டா? ஷங்கர் எஃப்க்டா?

இசை என்பது செவிநுகர் ரசனை என்பதை சினிமா பாடல்கள் சில சமயம் பொய்யாக்கி விடுகின்றன.

*

//அன்பார்ந்த தமிழீழ மக்களே, அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே//
இரண்டுக்கும் இடையே உள்ள அர்த்த வேறுபாட்டில்தான் ஈழத்துயருக்கான விடை எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது. இன்று அதுவும் இல்லை. :(

http://viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=57:tamileela-women-day-2010&catid=28:report&Itemid=2

*

இப்போதெல்லாம் டெண்டுல்கர் ஏதாவது ரெக்கார்டு செய்தால், அதை மௌனமாக மட்டுமே அனுசரிக்க முடிகிறது. அவர் ஆர்பரிப்பான பாராட்டுதல்களின் எல்லைகளை அநேகமாக கடந்து விட்டார்.

*

ஏதேது செய்திடுமோ பாவி விதி ஏதேது செய்திடுமோ
ஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ
மாதவஞ் செய்து மனுவாகச் செய்யுமோ (ஏதேது)
சற்று நல்லறிவற்று மாடாகச் செய்யுமோ
சாகாவரம் பெற்று காடேகச் செய்யுமோ
கற்றறி மூடர்கட் கீடாகச் செய்யுமோ
கற்பின் குணங்குடி வீடாகச் செய்யுமோ (ஏதேது)

- குணங்குடியார்

http://nanjilnadan.wordpress.com/2010/07/24/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D10%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/

0 comments:

Post a Comment