ஹிப்போகிரஸியின் மொத்த குத்தகைதாரர்கள்

Posted: Thursday, April 28, 2011 | Posted by no-nononsense | Labels:
சாய்பாபாவை முன்வைத்து:

கடவுள் நம்பிக்கை உள்ளவரை அதன் கிளை நம்பிக்கைகளான கடவுள் அவதார நம்பிக்கைகளும் இருக்கும். தன்னை அவதாரமாக அறிவித்துக்கொள்ளும் நபர்களின் வாழ்க்கையும் செழிக்கும். இதைக் கேள்வி கேட்பவரைத்தான் கண்ணை மூடி கைதொழச் சொல்லி உலகம் பழிக்கும். அதனால்தான் ஆதார பிரச்னையாகிய கடவுள் நம்பிக்கை நோக்கி அம்பை விட்டெறிந்தனர் பெரியார்களும், மார்க்ஸ்களும். பல விஷயங்களில் முற்போக்காக கருத்துச் சொல்ல முண்டியடித்து ஓடி வரும் படித்த பிற்போக்குகள் இந்த விஷயத்திலும் ஜாதிபற்று விஷயத்திலும் மட்டும் கள்ளமௌனம் சாதிப்பார்கள். கவனித்து பார். அவர்களை பொறுத்தவரை ஒட்டுமொத்த மானுட பிரச்னையே அரசியல்வாதிகளின் ஊழல் மட்டும்தான். ஹிப்போகிரஸியின் மொத்த குத்தகைதாரர்கள்.

0 comments:

Post a Comment