தட்டிக் கேட்பதை தட்டிக் கழிப்பார்

Posted: Friday, July 16, 2010 | Posted by no-nononsense | Labels:
இந்தப் பதிவை முன்வைத்து:

வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒரு தாமதம் உடனே
விழி தமிழா!

இப்படி பாரதிதாசனை போல எனக்கும் சில நேரங்களில் ரத்தம் கொதிக்கிறது. அடுத்த கணமே என் குடும்பம் மொத்தமும் கண்முன் வந்து கொதிப்பை அடக்குகிறது. குடும்ப பந்தங்களை உதறி வெளியே வந்தால் மட்டுமே தவறுகளை தட்டிக் கேட்பது நடைமுறையில் சாத்தியம். இல்லையென்றால் அந்த போலீஸ்காரனோ, அரசியல்வாதியோ போகிற போக்கில் ஒரு கேஸை போட்டு விட்டு போய் விட்டால் என் குடும்பம் தான் தெருவில் நிற்கும். தெருவில் நிற்பதும் போர்டிகோவில் நிற்பதும் அவரவர் பொருளாதார வசதி நிலையை பொறுத்தது. பரிதவித்து நிற்பது என்னவோ நிதர்சனம். 

Common man வாழ்க்கையில் இதற்கெல்லாம் தீர்வே கிடையாது என்பதை புரிந்துகொண்டு நடையைக் கட்டுவதுதான் இதன் ஒரே தீர்வு.

செக்கிழுத்த செம்மலின் கதையை செல்லூலர் ஜெயிலில் அவர் செக்கிழுக்கும் வரை மட்டும் காட்டி முடித்துக் கொண்டார்கள். ஜெயிலிலிருந்து வெளியே வந்த அந்த கப்பலோட்டிய தமிழன் கப் சாயாவுக்கு நாய் பட்ட பாட்டை வரலாற்றின் ஏடுகளில் தேடிப் படித்து பாருங்கள். எந்த தேசத்துக்காக சமூகத்துக்காக பாடுபட்டாரோ, அதுவே அவரை முடிந்தவரை அலைக்கழித்து சாகடித்தது. 

சமூகத்தின் எளிய அங்கத்தினன் என்பவன் ஒன்று தொடர்ந்து அப்படியே வாழலாம். அல்லது தன்னை பொது நன்மைக்காக காவு கொடுத்துக் கொள்ளலாம். அது அவரவர் தனக்காக வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாட்டு வாழ்க்கைமுறையை பொறுத்தது. 

0 comments:

Post a Comment