கிடா விருந்து

Posted: Sunday, June 12, 2011 | Posted by no-nononsense | Labels:
விருந்து என்றதும் இன்னொரு விஷயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. யாராவது அசைவத்தை விட்டு விலக்கி முழு சைவனாக மாற விரும்பினால், தொடர்ந்து சில கிடாவெட்டுக்களில் அடுத்தடுத்து கலந்து கொண்டால் போதுமென தோன்றுகிறது. கறி வெந்தால் போதுமென்று ஒரு சமையல் செய்து, குழம்பு என்ற பெயரில் ஒரு திரவத்தை ஊற்றி வெறுக்கடிக்கிறார்கள். அதிலும், சிலர் போடும் பிரியாணிக்கு அந்தக் கால கதம்ப சோறு தேவலாம் என்று இருக்கிறது. இதில் குடல் கறியை, விருந்தினர்களின் கண்ணில் காட்டாமல் தனக்கென மறைத்து வைத்துக்கொண்டு ஆடும் அழுகுணி அழிச்சாட்டியம் வேறு!

கிடாவிருந்து நடைபெறும் இடமான ஏழு காத தூரத்தில், அனாந்தர காட்டுக்குள் அமைந்திருக்கும் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு வெயிலில் வறுபட்டு, படாத பாடு பட்டுச் சென்றால் அலுங்காமல் குலுங்காமல் ஒரே சாப்பாட்டில் அரை சைவனாக்கி திருப்பி அனுப்புகின்றனர். ஜூவகாருண்ய நோக்கில் அதே ஜீவன்களை பலி கொடுத்துச் செய்யப்படும் சமூக சேவை!

0 comments:

Post a Comment