என்னுடைய ஆதர்சம்

Posted: Sunday, June 26, 2011 | Posted by no-nononsense | Labels:
நான் எனக்கு ஆதர்சமாக கொண்டிருப்பவரைப் பற்றி இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.


252560_226869870674359_100000540440253_896500_3372928_n.jpg

அவர் கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர்.ஜெயபாரதி. 2002 முதல் அவர் எழுத்துக்களை இணையத்தில் படித்து வருகிறேன். எனக்கு தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு, தொன்மம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட அவர் எழுத்துக்கள் தாம் காரணம். அகத்தியர் என்னும் இணைய குழுமத்தை பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். 50,000 மடல்களை கொண்ட குழுமம் அது. அதில் திரு.ஜேபி மட்டும் 20,000 மடல்கள் எழுதியுள்ளார். அத்தனையும் அறிவுக் களஞ்சியம்.

டாக்டர் என்றால் அவர் உண்மையிலேயே டாக்டராக மலேசிய சுகாதரத்துறையில் பணிபுரிந்தவர். பெரிய பதவிகளை வகித்தவர். ஊடாக ஒரு பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர். அவரைப் பற்றி ஒருநாள் விரிவாக எழுத எண்ணம். அதற்கு முன் அவரைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளதை படிக்கலாம் --> http://www.sramakrishnan.com/?p=2436

நான் இணையத்தில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவர, பல விஷயங்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள, எழுத்துக்களையும், தகவல்களையும் பகுத்துணர்ந்து நீரை விலக்கி பாலை அருந்தும் முதிர்ச்சியை நோக்கி என்னை நகர்த்திச் செல்ல அவரால் நான் அடையப்பெற்ற inspiration-க்கு முக்கிய இடமுண்டு.

அவரிடம் வம்பு, வசை, அரசியல் இல்லாததால் இளைஞர்களின் குதூகலமான எழுத்து தேடலுக்கு ஏற்ற தீனி அவரிடம் கிடைக்காது. அதனால் ஆய்வு ரீதியான எழுத்துக்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு உகந்த இடமாக அகத்தியம் இருக்காது. சங்கத்தமிழ், வரலாறு, ஆன்மிக, தொன்மை சார்ந்த சீரியஸான விவாதங்கள் மட்டுமே அதில் நடக்கும்:
http://groups.yahoo.com/group/agathiyar/

ஜேபி அய்யாவின் சில வீடியோ உரைகள் அண்மையில் வலையேற்றப்பட்டன. அவைகளை காண விரும்பினால் -->


இவர் போல இன்னும் சிலர் உண்டு. சமயம் வரும்போது எழுதுகிறேன்.

rojamuthaiya_jaybee1.jpg

ரோஜா முத்தையாவுடன் டாக்டர்.ஜேபி

0 comments:

Post a Comment