நடிகர்களின் அரசியல் ஆசை

Posted: Sunday, December 20, 2009 | Posted by no-nononsense | Labels: ,
பாகவதர் / எம்ஜிஆர் / ரஜினி / விஜய் / அஜித் -- என்று எல்லா காலத்திலும் யாருக்காவது இப்படிப்பட்ட பக்தர்கள்(can't call them just fans) இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. நம் நாட்டில் மட்டும்தான் என்றில்லை, மேலை-கீழை நாடு என்று அனைத்து நாட்டு கலாச்சாரத்திலும் இருப்பதுதான். கட் அவுட்டும் பாலாபிஷேகமும் தான் நம்மை கொஞ்சம் வித்தியாசப்படுத்துகிறது.

நடிகராக இருக்கும்வரை எல்லாமே சரிதான். ஆனால் அரசியல் என்று வரும்போது நிறைய eligible criteria's முளைத்துவிடும். உதாரணமாக ஒருவேளை நாளை விஜய் அரசியலில் இறங்கினால் அப்போது விஜய் - ஜோஸப் விஜய் ஆக மத ரீதியான கண்ணாடி கொண்டு பார்க்கப்படும் நிலை உருவாகலாம். இப்போது தன்னுடைய ஒவ்வொரு பட ரிலீஸிற்கும் முன்பாக அவர் வேளாங்கண்ணி மாதா கோவில் செல்வது அப்போது இந்துக்களிடையே பெரிய அளவில் விமர்சனம் செய்யப்படலாம். நிறைய இருக்கிறது. இன்றைய தேதிக்கு ரஜினிக்கு கூட அரசியலில் எதிர்காலம் இல்லை. ஒரே ஒருமுறை அந்த வாய்ப்பு 1994 இல் வந்தது. அதை அவர் தவறவிட்டு விட்டார். அத்துடன் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களிடமும் அவர் குறித்து இருந்த அரசியல் எதிர்பார்ப்பும் செல்வாக்கும் மறைந்துவிட்டது.

இப்போது அரசியலில் இருக்கும் விஜய்காந்த் இப்படியே இன்னும் இரண்டு தேர்தல்களில் கூட்டணி இன்றி தனியாக போட்டியிட்டால், இப்போது கிடைக்கும் 10% ஓட்டுகூட கிடைக்காமல் போய்விடும். விஜய்காந்த் யாருடனாவது கூட்டணி வைப்பதுதான் அவர் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது. உண்மையில் விஜய்காந்த் உறுமீனாக காத்திருப்பது ஜெயலலிதாவிற்கு பிறகு ஏற்பட இருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக. அதுவரை கட்சி இருக்க வேண்டுமானால் அது ஏதாவது கூட்டணியில் இருந்தே ஆகவேண்டும்.

இந்த நடிகர்கள் எல்லாம் அரசியல் முன்னோடியாக கருதுவது எம்ஜிஆர் அடைந்த அரசியல் வெற்றியை. பார்க்க தவறுவது அதிமுகவுக்கு முந்தைய எம்ஜிஆரின் அரசியல் சரித்திரத்தை.

கான மயிலை கண்டாடும் வான் கோழிகள்!

0 comments:

Post a Comment