"Paa" வேட்டைக்காரன் | மோகனூர் - வேலூர் காவிரி கரைகள்

Posted: Friday, December 4, 2009 | Posted by no-nononsense | Labels: ,
So, ‘Paa’ proves to be an excellent film and you’ll surely enjoy watching it.

Verdict: Highly recommended
- ‘பா’ படத்திற்கு இப்படி விமர்சனம் எழுதியிருக்கிறது ஒரு இணையதளம் (IndiaGlitz). தேடிப் படித்த அனைத்து விமர்சனங்களுமே படத்தை பாராட்டித் தள்ளி இருக்கின்றன. டிவிடி கிடைக்க எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகுமென நினைக்கிறேன். எதற்கும் டோரண்ட்களில் தேடிப் பார்க்க வேண்டும்.

அமிதாப் கடந்த பத்தாண்டுகளில் நடித்துள்ள வித்தியாசமான காதா பாத்திரங்களில் ஒன்றையாவது ஏற்று நடிக்க நம் ஊர் சூப்பர் ஸ்டார்கள் முன் வருவார்களா என்பது சந்தேகமே. இத்தனைக்கும் பிளாக், சீனிகும், பா எல்லாமே கமெர்சியலாகவும் ஹிட் என்பதால் ஆர்ட் மூவி என்றும் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.

இன்னும் படமே வரவில்லை. அதற்குள் இந்த வேட்டைக்காரன் விளம்பரம் படுத்தும் பாடு தாங்க முடியாததாக இருக்கிறது. ஒரு வாரமாக சன் டிவியை திருப்பவே முடியவில்லை. இத்தொல்லை எப்படியும் இன்னும் சில மாதங்கள் வரையாவது நீடிக்கும் என்பதால் என் அறையில் இருக்கும் டிவியில் சன் டிவியே வராமல் செய்துவிட்டேன். ஏதோ என்னால் முடிந்தது. சன் டிவி மீது வன்கொடுமை வழக்கு தொடர யாராவது தயாராக இருந்தால் அதற்கு வக்காலத்து ஃபைல் பண்ண நான் தயார். ஒன்று இவர்கள் படம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அல்லது நாம் சன் டிவி பார்ப்பதை நிறுத்தி விட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தாலொழிய சன் டிவி நமக்கு கொடுக்கும் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வழியே இல்லை.

oo-oo oo-oo oo-oo


பரமத்தி வேலூர் காவிரி பாலத்திலிருந்து என் மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நமது வண்டியிலேயே கரை வரைச் சென்று, வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு இறங்கி குளிக்க வசதியான விசாலமான ஆற்றங்கரை ஒன்றை இதைப் போல வேறு நம் ஊர் அருகில் எங்கும் நான் பார்த்ததில்லை. மோகனூரில் சுடுகாட்டு கரை ஒன்று இதுபோல் இருந்தது. மோகனூர் ஆறு தொடர்பான சுகந்தமான நினைவுகள் அனைத்தும் எனக்கு அக்கரை சம்மந்தமானதுதான். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். சரியாக அதே இடத்தில்தான் இப்போது மோகனூர் - வாங்கல் இணைப்புப் பாலம் பிரம்மாண்டமான தூண்கள் பதிய வேலையாகிக் கொண்டிருக்கிறது. அந்த இடமே வடிவம் மாறி குளிக்க உகந்ததான நிலையில் இல்லை. அதனால் இப்போது மோகனூர் ஆறு என்றால் கோவில் வாசல் படித்துறை மட்டுமே. அதற்கு பதில் இனி இங்கேச் செல்லலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

வரும் வாரஇறுதிகள் ஒன்றில் அங்கேச் சென்று குளியல் போட்டு புதிதாக வேலூரில் திறக்கப்பட்டுள்ள ’நம்ம கடை’ என்னும் வாத்து கறி கடையில் சிரம பரிகாரம் செய்து வர எண்ணியுள்ளேன். இணைந்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் :-)

0 comments:

Post a Comment