உன்னைப் போல் ஒருவனை முன்வைத்த அரசியல்

Posted: Tuesday, December 29, 2009 | Posted by no-nononsense | Labels:
In reply to Pamaran's review on Unnai pol oruvan:

இந்த முழு கடிதமும் ஒரு திராபை. படித்து முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. பாமரனின் எழுத்து நடை வர வர நொண்டியடிக்கிறது. அதனால்தான் குமுதத்தில் இவர் எழுதிவந்த பத்தியை தூக்கிவிட்டார்கள் போலும்.

கமல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் உன்னைப் போல் ஒருவனை முன்வைத்து கமலை விமர்சிப்பது வெட்டி வேலை. காரணம் “மர்மயோகி’ டிராப் ஆனதால் விழுந்த கால்ஷீட் இடைவெளியை நிரப்ப, கமல் பாலிவுட் கடையிலிருந்து வாங்கிப் போட்டுக் கொண்ட ரெடிமேட் சட்டைதான் இந்த உ.போ.ஒ. நடிகர் ஒருவர் பாதுகாப்பு கேட்கும் அந்த தமாசு காட்சி தவிர, சகலமும் சீன் பை சீன் அப்படியே ஹிந்தியின் ரீமேக். அதனால் இந்த விமர்சர்கள் வறுத்தெடுக்க வேண்டியதெல்லாம் இதன் ஒரிஜினல் கதாசிரியர்களைத்தான். அதை ஹிந்தி விமர்சகர்கள் ஏற்கெனவே செய்து மாமாங்கம் ஆகிவிட்டது.

இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக காட்டி படம் எடுப்பது தவறு என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல். அதுவும் 26/11 mumbai atrocity-க்கு பிறகும்கூட எப்படி இப்படியெல்லாம் இவர்களால் உண்மையை புறம்தள்ளி பேச முடிகிறது என்றுதான் எனக்கு தெரியவில்லை. இஸ்லாமிய தீவிரவாதம் நம்மை நாலாபுறமும் சூழ்ந்து அச்சுறுத்துகிறது. அது இந்தியாவுடன் ஒரு அறிவிக்கப்படாத போரை தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. அதற்கு துணை போகுபவர்கள் உள்ளூர் இஸ்லாமியர்கள்தான். அதற்கு அவர்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் நடக்கிறதா இல்லையா என்பதுதான் கேள்வி. நடக்கிறது என்றால் அதை படமாக்கினால் மட்டும் ஏன் இந்த குய்யோ முறையோ கூச்சல்?

நாளை வேறு ஒருவர் ஹிந்து தீவிரவாதத்தை, உதாரணத்திற்கு சிவசேனா-ராஜ்தாக்கரே வகையறாக்கள் மும்பையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் அடக்குமுறை அச்சுறுத்தலைப் பற்றி இதேபோல் சினிமா படம் எடுத்தால், அப்போது மட்டும் உள்ளதைத்தானே சொல்கிறார்கள் என்று அதை சிரமேற்கொண்டு ஆதரிப்பார்கள் இந்த pseudo intellectuals. காரணம் அதில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுவது சிறுபான்மையினர் அல்லவே. அதையும் எதிர்த்து எழுதினால் இவர்களின் so-called நடுநிலை முகமூடி டரியல் ஆகிவிடுமே! அதனால் அப்போது மட்டும் கள்ள மௌனம் சாதிப்பார்கள் இவர் போன்றவர்கள். இன்றைய இந்தியச் சூழலில் சிறுபான்மையினரின் அனைத்து அபத்த செய்கைகளுக்கும் சப்பை கட்டு கட்டுவதுதான் நடுநிலைத்தன்மை என்று ஆகிவிட்டிருக்கிறது. இரண்டு பக்கமும் சம அளவில் தவறுகள் இருக்கின்றன. இரண்டுமே களையப்பட வேண்டியவை.

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் எதிர்கொள்ள ஒரு காமன்மேன் கிளம்புவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாய் ரவுடியிஸத்தை ரவுடியிஸத்தால் தான் நம் வண்ணத்திரை நாயகர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையிலுள்ள ரவுடிகள் அனைவரையும் ஒழித்துக் கட்ட திருப்பாச்சியில் கிளம்பிய விஜய் இன்னும் வீடு திரும்பவில்லை என்று வேட்டைக்காரன் பார்த்ததவர்கள் சொல்கிறார்கள். அதையெல்லாம் பெரிது படுத்தி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.

கமல்கூட தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாத்தான் வைத்திருக்கிறார். ஆனால் விஜய் அவர்களை வைத்து அரசியல் ஆதாயம் காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனால் விஜய் இந்த மாதிரி வன்முறை படங்கள் தருவது அவர் பின்னால் திரளும் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் என்று கண்டித்து இந்த பாமரனோ அல்லது வேறு விமர்சகர்களோ எழுதி நான் இதுவரை பார்த்ததில்லை. கமலை மட்டுமே அவர்கள் பேனா கிழித்து தள்ளும். காரணம் காய்ந்த மரம் தான் கல்லடி படும். கமலைப் பற்றி எழுதினால்தான் அது கவனிக்கப்படும். எடுத்துக்காட்டாக எங்கேயோ பாமரன் எழுதியது இப்போது நம்மை வந்து அடைந்து விவாதிக்க வைக்கவில்லையா? அதுதான் இந்த பாமரன் போன்ற விமர்சகர்களின் நோக்கம். அவர்கள் விரும்பிடும் அவர்கள் எழுத்துக்கான வெற்றியும் இதுவே. அதனால் இவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விவாதித்து மண்டையை உடைத்துக் கொள்ளாமல் நிராகரித்து நகர்ந்துவிடுவதே நல்லது.

1 comments:

  1. no-nononsense said...
  2. டெஸ்ட்

Post a Comment