அசல்; அஜித் மற்றும் விஜய்

Posted: Friday, February 5, 2010 | Posted by no-nononsense | Labels:
இன்று அலுவலகத்திற்கு எதிரில் உள்ள அஜந்தா-எல்லோரா தியேட்டரில் ‘அசல்’ ரிலீஸ் ஆனது. முதல் நாள் முதல் ஷோவுக்கு வேட்டைக்காரனுக்கு கூடிய கூட்டத்தை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், சரம் சரமாய் பட்டாசு என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

விஜய்-அஜித் இருவருமே அட்டு படங்களைத்தான் தருகிறார்கள். இருந்தும் அஜித் மீது பொதுவில் ஒரு பரிவு இருப்பதற்கு காரணம் அவர் விஜய் போல அரசியல் ஆசையில் பஞ்ச் டயலாக் பேசி படுத்தி எடுப்பதில்லை என்பதாக இருக்கலாம். எந்த பின்புலமும் இல்லாமல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதாகவும் இருக்கலாம். ஏதோ ஒன்று; ஆனால் எல்லோருக்கும் அவர் மீது ஒரு soft corner இருப்பதாக தோன்றுகிறது.

இருவரின் படங்களையும் நான் அதிகம் பார்த்தவனில்லை என்பதால் அவை குறித்து எனக்கென்று எந்த கருத்தும் இல்லை. ஆனால் எனக்கு விஜயை விட அஜித்தை பிடிக்க ஒரு காரணம் உண்டு. அது அவரின் ஆளுமை. அண்மையில் அவரின் மூன்று மணி நேர பேட்டி ஒன்றை பார்த்தேன். எல்லா கேள்விகளுக்கு ஆழமாக தெளிவாக பதிலளித்துக் கொண்டிருந்தார். தத்துவவிசாரங்கள் தெறிக்கும் பேச்சு. இந்த இடத்தில் விஜயின் ஆளுமையை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருக்கிறது. திரையில் மட்டும் ஜபர்தஸ்த் காட்டினால் போதாது. நாம் நாயகர்களாக கொள்ளத்தக்கவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஆகிருதி மிகுந்தவர்களாக இருக்கவேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து. எனக்கு கமலை பிடித்துப் போகவும் இதுதான் காரணம். அவரின் திரைபட முயற்சிகளெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

*

எழுத நினைத்ததற்குள் நுழைவதற்குள் வேறு வேலை வந்துவிட்டதால் பாதியில் விட்டுப் போகிறேன். பிழைத்துப் போங்கள்!

0 comments:

Post a Comment