Buzzings - 1 (10.02.2010 to 13.02.2010)

Posted: Saturday, February 13, 2010 | Posted by no-nononsense | Labels:
  • ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் வாசலில் அரை மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. பொழுது போகாமல் அங்கேயிருந்த ’அம்மா’வின் திருவாய்மொழி சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டு இருந்தேன். இவரை விட ஒரு சிந்தனை மலடான ஆன்மிகவாதி யாரையும் படித்ததாக நினைவில்லை. இவர் பெண்களை கவர்ந்ததிலும் ஆச்சரியமில்லை!

  • 'ப்ரமரம்’ பார்த்துமுடித்தேன். தமிழ் திரைச்சூழல் குறித்து ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த என் குறைந்தபட்ச மிகை மதிப்பீட்டில் இன்னுமொரு செங்கல் உதிர்ந்தது.

  • Plurk-என்ற இன்னொரு SNS-ஐ சோதித்திக்கொண்டு இருக்கிறேன். எத்தனைதான் புதிதாய் வந்தாலும் அத்தனைக்கும் உடனே பயனர் உருவாகிறார்கள். இனிவரும் நாட்களில் இகபர லோகம் யாவும் இணையத்தினுள் ஐக்கியம் என்பது அட்சர ஸ்பஷ்டம்!

  • அவதார் படத்தை 3D-ல் தான் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் பார்க்க தவறிவிட்டேன். மிஸ் பண்ணி விட்டேனோ என்று தோன்றுகிறது. சிற்றூரில் வாழ நேர்வதன் மற்றுமொரு குறைபாடு.

  • அடம் பிடித்து அழுத குழந்தை வடிவேலை கண்டதும் இடம் பிடித்து அருகில் அமர்ந்து கொண்டது. இதற்கு முன் டோரா, பும்பா விஷயங்களில் மட்டுமே இது சாத்தியம்.

  • ’திருதினஸ் பிருக் ஸ்மிருதி’யின் படி கொண்டாடப்படும் இன்றைய சிவராத்திரியை ’ஆகம சவுரமான விதி’ தடுக்கிறதாமே? ஈஸ்வரோ ரக்ஷிது!

  • பாதி இரவை இணையத்தில் கடத்தி விட்டு பாதி பகல் வரை தூங்கிவிட்டேன். எப்படியோ, மஹாசிவராத்திரி கொண்டாட்டம் என்னளவில் ஜோராக தொடங்கிவிட்டது

  • Dec 21st, 2012- அன்று உலகம் அழிந்து விடுமாம். அதற்கு ஆறு நாட்கள் முன்புதான் எனக்கு "Many Many Happy Returns Of The Day" சொல்லியிருப்பார்கள் என்பது எத்தகு நகைமுரண்! ;-)

  • சில காலமாக சாரு நித்தியானந்தா ஜபம் செய்வது ஏன் என்பது ஜெமோ ஜக்கியை விதந்தோதியதை படித்த பிறகுதான் விளங்குகிறது.

  • ஜக்கி வாசுதேவ் - வெள்ளியங்கிரி, நித்தியானந்தா - பிடதி, ரவிசங்கர் - கொல்கத்தா. ஆளுக்கொரு லிங்கம்; நாள் முழுவதும் கொண்டாட்டம். கலக்குகிறார்கள் கார்ப்போரேட் சாமியார்கள்.

  • கூகிளில் ’ஓரின சேர்க்கை கதைகள்’ என்று தேடி தினமும் நான்கு பேராவது என் பதிவை எட்டிப்பார்க்கிறார்கள். கோவாப் படத்துக்கு விமர்சனம் எழுதியதன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!

  • பஸ் பிடிக்கும் அவசரத்தில் பணம் எடுக்க ஓடினால், எட்டு கார்டுகள் வைத்துக்கொண்டு அதில் உருப்படியாக எடுக்கவும் தெரியாமல், வெளியே நிற்பவர்களைப் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இல்லாமல், ஏ.டி.எம்முடன் ஏகாந்தமாக மல்லுக்கட்டிக்கொண்டு இருப்பவர்களை எத்தால் அடிக்கலாம்?

  • மீண்டும் ஒருமுறை ‘திரக்கதா’ பார்த்தேன். அலட்டல் இல்லாத இம்மாதிரி திரைக்கதைகளை தமிழ் எப்போது தழுவும்? பெருமூச்சுதான் வருகிறது!

  • பதிலளிக்காமல் எஞ்சி கிடந்த கடிதங்களுக்கெல்லாம் பதிலிட்டு அஞ்சல் பெட்டியை சுத்தம் செய்தபின் செய்யும் நெட்டிமுறிப்பு தரும் சுகமே தனிதான் ;-)

0 comments:

Post a Comment