ஆன்லைன் வர்த்தகமும் விவசாயிகளும்

Posted: Sunday, February 28, 2010 | Posted by no-nononsense | Labels:
அத்தியாவசிய உணவு பொருள்கள் மீதான ஆன்லைன் பேர வர்த்தக தடை பற்றி யாரும் விவதிகாதது, யாரும் கவலை படாதது ஏமாற்றம்.

இது அறியாமல் பேசும் பேச்சு. நுனிபுல்கூட மேயாமல் எழுதுகிறார்களோ என்று தோன்றுகிறது. வாய்பாய் அரசு அறிமுகப்படுத்திய அரிசி, கோதுமை போன்றஅத்தியாவசிய உணவு பொருளின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை மன்மோகன் சிங் அரசு தூக்கி இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.(காரணம் அப்போது நாட்டில் பண வீக்கம் விண்ணை முட்டி நின்றது). ரீபைண்ட் ஆயில், உருளை கிழங்கு, சர்க்கரை ஆகியவற்றை தவிர வேறு உணவுடன் சம்மந்தப்பட்ட அத்தியாவசிய பொருள் எதுவும் தற்போது டிரேடிங்கில் இல்லை. (Ref:www.mcxindia.com)

இந்தியாவில் இனிமேல் அரிசியும், கோதுமையும் ஆன்லைன் வர்த்தகத்திற்குள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

ஆன்லைன் வர்த்தகம் என்பதைப்பற்றிய அறிதல் இக்கால விவசாயிகளுக்கு மிகவும் அவசியம். தங்களின் நிலையற்ற வேளாண் விளைபொருள் விலை நிர்ணயத்துக்கும் உற்பத்திக்கும் எதிராக ஆன்லைன் வர்த்தகத்தை ஒரு வெற்றிகரமான hedging product-ஆக உபயோகித்துக்கொள்ள முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட விளைபொருளின் விளைச்சல் மற்றும் உற்பத்தி நிலையின் போக்கு(trend) பற்றியெல்லாம் நீண்ட கால விவசாயிகளுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்களெல்லாம் நேரடி விவசாயத்துடன் ஈடுபடுவதுடன் ஆன்லைனிலும் வர்த்தகம் செய்யலாம். அதை விடுத்து வெறுமனே குறைகூறிக்கொண்டு இருப்பது, வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தும் வர்த்தக வாய்ப்பு நிலைகளை மறுதலிப்பதாகவே அமையும்.

என்னுடைய ஈரோடு வட்டார வாடிக்கையாளர்கள் பலர் மஞ்சளில் ஆன்லைன் வர்த்தகம் மேற்கொண்டு சமீபத்தில் நல்ல லாபம் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு அதில் ஈடுபட்டனர். அவர்களில் பலர் மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகளும்கூட என்பது கவனிக்கத்தக்கது.

0 comments:

Post a Comment